ஞாயிறு, 15 ஜூலை, 2012

பெண் தேடல் - III

என் பெற்றோர்களின் பிடிவாதம் மாறுவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.  அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற எப்போதும் தயாராக இருப்பேன். அது என்னை மாற்றாமல் இருக்கும் வரை. ஒரு விசயத்திற்காக, இந்த அளவிற்கு மோதிப்பார்ப்பது இதுதான் முதல்முறை. இது அந்த பெண்ணிற்கான சண்டை மட்டும் அல்ல. பொதுவாகவே, என் பெற்றோர்கள் என்னை முட்டாளாக நினைக்கும் அளவிற்கு யாரும் என்னை நினைத்ததில்லை. அவர்கள் என்னை நம்பாத அளவிற்கு யாரும் என்னை நம்பாமல் இருந்ததில்லை. என் முடிவு சரியானதுதான் என்பதற்காகவும், சில விஷயங்களில் அவர்கள் மாறவேண்டும் என்பதற்காகவும் இந்த incident மூலமாக வெளிப்பட்டது.

பிடித்த பெண், பிடித்த வேலை (different topic) இதையெல்லாம் என் குடும்பத்தின் விருப்பதிற்காக மாற்றிக்கொள்ளவேண்டும் என்றால் அவர்கள் கொடுத்த வாழ்க்கையே வேண்டாம் எனத்தோன்றியது. தூக்கத்தையும் சேர்த்து வாழ்நாளில் 90% இவ்விரண்டோடுதான் கழிக்கவேண்டியிருக்கிறது. ஆறறிவு உள்ள ஒரு செல்ல நாயாக இருக்க என்னால் முடியவில்லை. ஐந்தரிவு மட்டும் இருந்திருந்தால்கூட அவர்கள் நினைக்கும்படி இருந்திருப்பேன்.

பலரிடம் என் அப்பாவின் பெருமையை வாய் கிழிய பேசி இருக்கிறேன். இப்போதுதான் அவர் தூரத்திலிருந்து மட்டும் உதவுபவர் என தெரிந்தது. அவர் அதே பெருமை என்ற மாயைக்குள் மாட்டிக்கொண்டிருக்கிரார் என தெரிந்தது. என்னை மாற்ற எவ்வளவு பொய், unfair game என்னிடமே. எதற்கு? எவ்வளவு? என கேட்க்காத என்  குடும்பத்தில், வழக்கத்திற்கு மாறாக, அம்மா என்னிடம், வரவு, செலவு கணக்கு கேட்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்தவர்களிடம் பெருமையாக சொல்ல / அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற போலித்தனமான வாழ்க்கைக்கு வழியை காட்டும் என் பெற்றோர்கள். இந்த பெருமைக்காக வாழும் வாழ்க்கை வெறுப்பானது. என் வாழ்க்கை என் விருப்பபடி வாழமுடியாமலே போய்விடும் என தோன்றியது. எனக்கு இந்த gold plated வாழ்க்கை தேவையில்லை என தோன்றியது.

ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெறமுடியும் என்ற நிலைக்கு வந்ததை உணர்ந்தேன். 'sentimental lock' போன்ற ஒரு பெரிய எதிரி/துரோகி இருக்க முடியாது என தோன்றியது. அவர்கள் கொடுத்த படிப்பு, அதனால் வந்த வேலை, பணம் அனைத்தையும் கொடுத்துவிட்டு போய்விடலாம் என முடிவுசெய்து (அவர்கள் invest செய்ததற்கு, நல்ல returns கொடுத்திருப்பேன் என நம்புகிறேன்), அண்ணனுக்கு மெயில்-ம், வீட்டுக்கு call  செய்தும் மேலுள்ளவைகளை சொன்னேன். (நான் அதிகம் பேசமாட்டேன் என்பதால் அவர்களுக்கு என்னுடைய seriousness தெரியாமலே இருந்திருக்கும் என்பதால் சொல்லாமல் செல்ல விருப்பமில்லை.) நான் அழுதுக்கொண்டே பெற்றோர்களிடம் பேசியது அப்போதுதான் முதல்முறை. அவர்கள் அதைவிட நானே முக்கியம் என உன் விருப்பபடியே செய் என இறங்கிவந்தனர். எதிர்பார்த்ததுதான் என்றாலும், நான் அதை எதிர்ப்பார்த்து சொல்லவில்லை. எப்போதும் mailக்கு பதில் அனுப்பாத அண்ணனிடமிருந்து உடனே call  வந்தது. நேரில் பார்த்து பேசலாம் என்று. அண்ணனின் இருப்பிடத்திற்கு (பெங்களூர்) செல்லும்முன் பெற்றோர்களையும் வரச்சொன்னேன், முடிவை ஒருமனதாக எடுத்துக்கொள்ளலாம் என.  

பெற்றோர்கள் வரும் முன்னரே பேச ஆரம்பித்தோம். பெண், வேலை இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான் என்பதால் பெண்ணின் விஷயத்திலிருந்து ஆரம்பமானது. இந்த வயதில் எனக்கான பெண்ணை என்னால் அடையாளம்காண முடியவில்லை என்றால், நான் திருமணம் செய்துக்கொள்வதே அர்த்தமற்றது என ஆரம்பித்தேன். அண்ணன் procedure -லாக ஆரம்பித்தான். நாம் பார்க்க ஆரம்பித்தது , 1. பெண் appearance, 2. Her character, 3. என் பெற்றோர்களின் விருப்பம், 4. family background - வசதி, 5. ஜாதகம். என வரிசைபடுத்தினான்.  கடைசி மூன்றும் ஒத்துவரவில்லை விட்டுவிடலாம் என்றான்.

கடைசி இரண்டும் என் எதிர்பார்ப்பு இல்லை. வீட்டில் இருப்பவர்களின் விருப்பம் அதில் இருப்பதால் மூன்றாவதும் எனக்கெதிராக இருந்தது. அதை முன்கூட்டியே விசாரிக்க சொல்லியிருந்தேன் (arranged marriage  என்பதால் தேவை இல்லாத conflict -ஐ தவிர்க்க). சரியாக செய்யாதது அவர்களுடைய தவறு. பெண்ணை மட்டுமே பார்க்கவேண்டும் என நினைப்பவன் நான். வசதி, சாதி, including  பெற்றோர்கள் -இவைகளுக்காக ஒரு பெண்ணை  நிராகரிக்கமுடியாது. இதையெல்லாம் பார்க்ககூடாது என பலரிடம் சொல்லியிருப்பேன். என் collage life ல், என் நண்பர்கள் இதைப்போல நினைத்திருந்தால் எந்தனை நல்ல நண்பர்களை இழந்திருப்பேன் தெரியுமா? அதையே நான் என் வாழ்க்கையில் follow செய்யவில்லை என்றால்? எனக்கு பிடித்திருக்கிறது. அவர்களிடமும் இரண்டாவதுமுறையாக பேசும் முன்பே வீட்டில் முடிவிலிருந்து திரும்ப வருவதில்லை என்பதை சொல்லிவிட்டேன். முதல் இரண்டில் ஏதாவது பிரச்சனை என்றால் சொல் என்றேன்.

தம்பி மிரட்டி பெற்றோர்களை சம்மதிக்கவைத்துவிட்டான் என்றான். பெண்ணைப்பற்றியும் அவளின் குடும்பம்பற்றியும் அந்த அளவிற்கு தெரியாது என்றான். அதற்குமேல் விசாரிக்கமுடியாது என்றேன். Risk  வேண்டாம் என்றான், மூன்றாவதாக ஒன்று போனாலும் அதே risk இருக்கிறது என்றேன்.

உனக்கு புரியவில்லை, அனைத்தும் meet  ஆகிறமாதிரி பெண் கிடைக்கும் ஏன் அவசரப்படுகிறாய்? 31 வயது பெரிய வயதல்ல, typical தமிழ் பையன் போலவே யோசிக்கிறாய் என்றான். என்னுடைய தேவை இவ்வளவுதான், அதற்குமேல் எனக்கு வேண்டாம். better -ஆன option என்றும் இருந்துக்கொண்டுதான் இருக்கும். தேடிக்கொண்டே போனால் என்றும் முடியாது. தமிழ் பெண்ணை மணக்கவேண்டும் என்றால் typical தமிழ் பையன் மாதிரிதான் யோசிக்கவேண்டும். உனக்காக கல்யாணம் செய்துக்கொள்ளாமல் காத்திருக்கலாம். இந்த காரணங்களுக்காக காத்திருக்க முடியாது.

ரெண்டு வருசமெல்லாம் பொண்ணு பார்த்துகிட்டிருக்காங்க தெரியுமா?அமாம், இப்பதான் reason தெரியுது. சில பேர் எதுக்கு ஓடிப்போராங்கணும் தெரியுது.

அன்றைக்கு அம்மா எவ்வளவு அழுதார்கள் தெரியுமா? என்றான். இது அழுகின்ற போட்டியல்ல. யாரு அதிகம் அழறாங்களோ அவுங்க சொல்றத கேட்கறதுக்கு என்றேன்.

நீ, அந்த வீட்டிற்க்குள் போகவே யோசிச்சேன் என்றதும் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா? என்றான். நம் சொந்தத்திலும் அதுபோல் வீடுகள் இன்றும் இருக்கின்றன. ஏன்? நாமும் இதற்குமுன் மழையில் ஒழுகும் வீட்டில்தான் இருந்தோம். திருமணத்திற்கு சென்று, தெருவில் தூங்கி இருக்கிறோம். பார்த்தவுடன் தோன்றியது, இருந்தாலும், நான் வீட்டோடு மாப்பிளையாக இருக்கபோவதில்லை.

சொந்தகாரர்களிடம் பேசாத நான் உனக்காக மாமா, பெரியப்பாவிடம் பேசினேன். அவர்களும் சரிவராது என சொல்லிவிட்டார்கள் என்றான். unopposed president family யில் பிறந்த, என் மாமாவின் அக்கா, தங்கைகள் பலர் வசதி இல்லாத குடும்பத்தில் நல்லவர்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக திருமணம் செய்துகொடுத்த அவர் ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை. பெரியப்பா என்னிடம் வசதியை தவிர மற்ற அனைத்தையும் நல்லபடியாக சொல்லிவிட்டு ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை. அவர்களை இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிவிட்டுவிட்டேன் என நினைக்கிறேன். மற்றவர்கள் support  தேவை இல்லை, என் விருப்பம்தான் என்னுடைய முடிவு என வாதிட்டேன்.


நிறைய convincing statements - நானும் சிலவற்றை மிகைபடுத்தி சொல்லியிருந்தேன், என் விருப்பம் நிறைவேற.
நிறைய  examples - examples மேல வெறுப்புவரும்படியாக இருவரும் examples சொல்லியிருப்போம். கருமம், ஒரே விஷயத்தை நல்லதாக சொல்வதற்கும், கேட்டதாக சொல்வதற்கும் examples இருக்கிறது. என்ன செய்ய?
நிறைய probability - என் அண்ணனிடம் பேசி ஜெயிக்கமுடியவில்லை. probability அதிகம் இருக்கும் நல்ல ஆட்டு மந்தையில் நுழைய விரும்பவில்லை.
என் பாதை நான் போட்டதாக இருக்கவேண்டும். அதில் கஷ்டம் (உண்மையில் அந்த அளவிற்கு மோசமான option இல்லை) வந்தாலும் அதை சந்தோசமாக ஏற்றுக்கொள்ள. அடுத்தவர்கள் பாதையில் (including my well wishers) வரும் சந்தோஷம் உண்மையில் எனக்கு சொந்தமானதில்லை. அதை அனுபவிக்கவும் எனக்கு விருப்பம் இல்லை.

பெற்றோர்கள் வந்தார்கள். புதிதாக ஒன்றும் இல்லை. அதே sentiment, அதே dialog உடன் கூடிய arguments. Repeat செய்ய வேண்டாம் என நினைக்கிறேன். அனைவரும் முடிவெடுத்துவிட்டு பேசிக்கொண்டிருக்கிறோம். எதிர் இருப்பவரின் கருத்தை யாரும் கேட்கவில்லை, convince செய்வதை மட்டுமே குறிக்கோளாக இருந்தது. அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம் என்னவென்றே புரியவே இல்லை. இதில் காலவிரயம் மட்டுமே ஆவதை உணர முடிந்தது.

அப்பாவின் கெஞ்சல், அம்மாவின் அழகை, அண்ணனின் ஆக்ரோசம் என மும்முனை தாக்குதல், என் முடிவில் strong -ஆக இருக்க அனுமதிக்கவில்லை. எனக்கெதிரான முடிவுகளை என் நலனுக்காகவே எடுப்பதாக என்னும் அளவுக்கு அதிகமான அன்பு. இந்த ஒரு விஷயம் என் வீட்டில் எத்தனை பேரை கேட்ட செயலை செய்ய தூண்டியிருக்கிறது. அனைத்தும் மாறக்கூடியதே. இன்னும் சிலகாலங்கள் காத்திருப்போம் அவர்களின் மாற்றத்திற்காக என தோன்றியது.  சரி, நான் மறந்துவிடுகிறேன் என்று சொன்னதும், என் பெற்றோர்களின் சந்தோசம் வெளிப்படையாக உணர முடிந்தது.

நான் வேண்டாம் என்றதும், பரவா இல்லை என சொல்லமாட்டார்களா என தோன்றிய எனக்கு ஏமாற்றம். அதற்க்கு பதிலாக, உனக்கு என்ன தொழில் ஆரம்பிக்கணும்னு சொல்லு என, முன்பு மறுப்பு தெரிவித்த சிலவற்றை இப்போது offer ஆக கொடுத்தனர். Bad compensation at bad time. அடிப்படையில் சில மாற்றங்களை கேட்கலாம் என தோன்றியது. என் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டது மூன்று. 1. கீழே (வசதி, ஜாதி குறைவாக) இருப்பவர்களை  குறைவாக எண்ணாதீர்கள். 2. என்னை நம்பாமலோ / முட்டாளாகவோ நினைக்காதிர்கள். என் உடன் இருப்பவர்களை தப்பாக நினைக்காதிர்கள், நீங்கள் சொல்லியே கேட்க்காத நான், அவர்கள் சொல்லி கண்டிப்பாக கேட்கமாட்டேன். 3. logic  இல்லாமல் sentimental blackmail செய்யாதிர்கள். என் அண்ணனும், இம்மூன்று விசயத்திலும் அடிபட்டிருந்ததால் என்னை ஆமோதித்தான். எனக்குத்தான் அதிகம் பார்க்கிறான்? அவர்களும் சரி என்றனர். எந்த அளவிற்கு புரிந்துகொண்டார்கள் என்பது தெரியவில்லை. உண்மையில் புரிந்துக்கொண்டிருந்தால், அந்த பெண்ணையே பார்க்கலாம் என்று சொல்லியிறுப்பார்கள்.

தம்பி, business பேசிட்டு வந்திருக்கிற, என கோபமானான். அவன் கோபத்தில் நியாயம் இருக்கிறது. சிலவற்றை எதிர்கொள்ளத்தேரியாத கோழைதான் நான். எனக்காக ஒருநாள் இரவு முழுவதும் கூட என் பெற்றோர்களிடம் சண்டை போட்டிருக்கிறான் அவன். போருக்கு அவனை அழைத்துசென்று, விட்டுவிட்டு ஓடி இருந்தால் கூட பரவாயில்லை. நோக்கத்தை விட்டுவிட்டு, எதிர் அணியுடன் deal  பேசி முடித்திருக்கிறேன்.

பெண் வீட்டிலும் சொல்லிவிட்டு, அவர்களிடம் எனக்கு பிடித்திருந்த simplicity, இருப்பதை மறைக்காமல் காமித்துக்கொல்வது என்பதையெல்லாம் மாற்றிக்கொள்ள சொன்னேன். என் பெரியப்பா சொன்னமாதிரி திருமணம் ஆகும்வரை ஒரு flat-ல் வாடகைக்கு இருந்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் சொந்தவீடு இருக்கிறது. renovation செய்யனும்னு சொல்லுங்க என்றேன். advice பண்ணாத மூடிட்டு போனு சொல்லாம, ஏமாற்றத்துடன் feedback கேட்டுக்கொண்டார்கள். என் குற்ற உணர்ச்சி மேலும் அதிகமானது. என்ன செய்வது? உணமையை எதிர்கொல்வதைவிட, பொய்மையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.

மற்றொன்று, Adjustable person க்கு அடுத்தவர்கள் எப்போதும் கொடுக்கும் பரிசு last/least preference. அப்புறம் எப்படி அந்த நிலையிலேயே வெகுகாலம் இருப்பது என தெரியவில்லை. எனக்கிருந்த ஒரே (தம்பியின்) support யும் இழந்துவிட்டேன். என் பெற்றோரும் சரி, அண்ணனும் சரி, இப்போது கேட்டாலும் உன் விருப்பம்தான் என சொல்வார்கள். ஆனால் என் விருப்பம் அவர்களுடைய விருப்பமாகத்தான் இருக்கவேண்டும். சிலவற்றை படிக்கலாம், வாய் கிழிய பேசலாம், இப்படி எழுதலாம். ஆனால் வாழ்வில் நடைமுறை படுத்துவது என்பது சிரமமான ஒன்று. 

தொடரும் ...