ஒவ்வொரு உயிரினமும் தனித் தனியாக வாழ்ந்துக்கொண்டு இருந்த காலம் அது. பழம், செடி, கொடிகளே அதிகமான உயிரினங்களின் உணவாக இருந்தது. பெரும்பாலான நேரங்களில் இந்த உணவுக்கு பஞ்சம் இருந்ததில்லை என்பதால் உணவுக்கான சண்டை உயிரினங்களிடையே உருவாகவில்லை. மற்ற உயிரினத்தைப் பார்க்கும்போது உருவிதமான பயம் மட்டும் இருந்தது. அதனால் சில சந்தர்ப்பங்களில் சண்டை உருவானது. அதிக நேரங்களில் ஒரு விதமான பயம் கலந்த எதிர்ப்புடன் இரு உயிரினங்களும் விலகிச்சென்றுவிடும்.
உடலுறவுக்கூட இதுபோல் எதேச்சையான சண்டையில் ஆரம்பித்து உடலுறவுடன் முடியும். அனால் அது எந்த விதமான உணர்வு பரிமாற்றம் என்று இருவருக்கும் விளங்காமலேயே பிரிந்துவிடும். பெரும்பாலும் ஒரே வகையான உயிரினங்களால் மட்டுமே இந்த உணர்வை பகிர்ந்துக்கொள்ள முடிந்தது. அதன் பிறகு அந்த உயிரினங்கள் உறவுகொண்ட உயிரினத்தைப் பார்க்க விரும்புவதுமில்லை. இரண்டும் வெவ்வேறு திசையில் விலகிச் சென்றுவிடும். குட்டியை ஈனுவதின் பின்னணி அனைத்து உயிரினத்திற்கும் ஒரு புதிராவகவே இருந்தது.
ஒரு கட்டத்தில் தனியாக அனுபவித்துக்கொண்டிருந்த உணர்வுகளை மற்ற உயிர்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பின. அதே இனத்தைச் சேர்ந்த உயிரினத்துடன் மட்டுமே தன்னுடைய உணர்வுகளை சிறப்பாக பகிர்ந்துகொள்ள முடியும் என்பதை உணர ஆரம்பித்தன. ஒரே வகையான உயிரினங்கள் ஒன்றுகூட ஆரம்பித்தன. ஒன்று சேர்ந்ததால் புதுவித உணர்வுகளும் உணரப்பட்டது. ஓசை மற்றும் தழுவுதல் மூலம் உணர்வுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. உணர்வுகளை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்த உயிரினங்கள் உணவையும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தன.
இந்த ஒத்த வகையான உயிரினங்களின் ஒன்றுகூடல், தன் இனத்துக்கென ஒரு பாதுகாப்பான, வசதியான மற்றும் நிரந்தரமான இடத்தை ஆக்கரமித்துக்கொள்ளத் தூண்டியது. அதே நேரத்தில் மற்ற உயிரினங்களை நிரந்தர எதிரியாக பார்க்கக் காரணமானது. பலமான மற்ற வகை உயிரினங்களிடம் இருந்து விலகியும் அல்லது அதனை ஒன்று சேர்ந்து கொள்ளவும் ஆரம்பித்தன. பலம் குறைந்த உயிரினங்கள் துரத்தியடிக்கப்பட்டன. கொல்லப்பட்ட சில உயிரினங்களை உண்ணவும் ஆரம்பித்தன.
மற்ற உயிரினகளைப் போலவே, ஒரு வகையான உடல் அமைப்புக்கொண்ட மனிதர்கள் பலசாலியாகவும் கம்பிரமாகவும் இருந்தன. மற்ற இன உயிரினங்களை ஒன்றாக எதிர்கொண்டாலும், ஒன்றாக வாழத்தொடங்கிய மனிதருக்குள் சில போட்டி இருந்க்கத்தான் செய்தது. தன் கூட்டத்திற்குள் பலத்தை நிரூபிப்பது, தன்னை மற்றவைகளிடம் இருந்து மிகைபடுத்திக்கொள்வது என உள் போராட்டங்கள் தோன்றின. பலம் மட்டுமே உயர்ந்தவர்களை தீர்மானித்தது. இயற்கையின் சதியால், மற்றோர் வகையான உடல் அமைப்புக்கொண்ட மனிதர்கள் பலமும் கம்பீரமும் குறைவாகவே இருந்தது. உறுப்புகளை தவிர, வேறு சில உணர்வுகள், செயல்களும் ஒத்து இருந்ததால், உடலுறுப்பைவைத்து (உடல் அமைப்பு) ஆண் பெண் என உள் இன பிரிவு உருவானது.
பெண்களால் இயலாத காலங்களில், அவர்களின் உடல்நிலையையும் அடுத்த வாரிசை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில்கொண்டு பெண்களுக்கு இக்காலங்களில் சில சலுகைகள் வழங்கப்பட்டது. சலுகையின் அனுபவிக்க ஆரம்பித்த சிலரால் அதிலிருந்து விடுபட இயலவில்லை. உணவு சேகரிக்கவோ பாதுகாப்பு பணியிலோ ஈடுபடுவதை பெண்கள் குறைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். குழந்தையை வளர்ப்பது அல்லது தங்கும் இடத்தை அலங்கரிப்பது ஆண்களின் கலைப்பாற்றுவது என புது வேலைகளை உருவாக்கி அதைச் செய்ய ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணினம் உடலளவில் பலவீனம் அடைய ஆரம்பித்தது. உணவு சேகரிப்பதும் பாதுகாப்பும் இன்றியமையாத வேலை என்பதால் இதில் ஈடுபட்ட ஆண்களின் கை ஓங்க ஆரம்பித்தது. சலுகைகளால் சோம்பேரிகலான பெண்களால் உரிமையை பெறுவதில் சிரமமானது .
சலுகைகள் கிடைத்தாலும் பெண்களால் ஆண்களை மீறி ஏதும் செய்யமுடியவில்லை. பெண்களின்புரம் இருந்து புலம்பலும் ஆண்களை சபிக்கும் பழக்கமும் அதிகரிக்க ஆரம்பித்தது. வெகுச் சில ஆண்களே சிறிது செவி சாய்த்தனர். பெரும்பாலான ஆண்கள் அதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. உணவு செகரிக்கும்போதும் பாதுகாப்புப் பணியின்போதும் எதேச்சையான சில மரணங்கள் நிகழ, சபிக்கப்பட்டதால் இறந்தான் என பெண்தரப்பினர் பேச ஆரம்பித்தனர். பலசாலிகளின் மேல் பொறாமைக்கொண்ட சில ஆண்களும் அதனை ஆமோதிக்க ஆரம்பித்தனர்.
உடல் பலம்கொண்ட ஆண்களை அறியாமையை புகுத்தி கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். பெண்கள் மட்டுமே குழந்தையை ஈன்றேடுததால், ஆக்கத் தெரிந்தவர்களுக்கு அழிக்கவும் தெரியும் என்ற கூற்று உருவாக்கப்பட்டது. ஆண்களின் இயலாமையால் சபிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டார்கள். பலசாலி ஆண்களால் சில நேரங்களில் துன்பத்தை / அவமானத்தை சந்தித்த பெண்கள், அறியாமையை பயன்படுத்தி ஆணினத்தை ஆள ஆரம்பித்தனர்.
பெண்களும் சில ஆண்களும் (பலவீனமான, ஆரம்பக்காலங்களில் ஒதுக்கப்பட்ட, அவமானப் படுத்தப்பட்ட ஆண்கள்) ஒன்று சேர்ந்து ஆண்களுக்கான கட்டுப்பாடுகளை இயற்ற ஆரம்பித்தனர். பெண்களுக்கென இருப்பிடம் தனியாக உருவாக்கப்பட்டது. அங்கு ஆண்களுக்கான அனுமதி வரையறுக்கப்பட்டது. உணவு சேகரித்தலில் இருந்து காவல், இருப்பிட வேலை வரை ஆண்கள் பார்க்கத் தொடங்கினர். ஆண்களை அறியாமையைக்கொண்டு தள்ளிவைத்தாலும், ஆண்களுடன் பெண்கள் கொள்ளும் உடலுறவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல பெண்கள் ஈரின செர்க்கையையே பெரிதும் விரும்பினர். கட்டுப்பாட்டின் மூலம் இலை வைத்து மறைத்தாலும் அதன் ஈர்ப்பு அதிகமாகிக்கொண்டுதான் போனது. ஆண்களும் பெண்களுடன் கொள்ளும் உறவை பாக்யமாகக்கருதினர். இதனால் குழந்தை பிறப்பின் ரகசியம் அறிய வாய்ப்பில்லாமலே போனது.
பெண்களின் சொகுசான வாழ்க்கையால் அவர்களின் உடல் மென்மை அடையத் தொடங்கியது. கம்பீரமான உடல்வாகு மட்டுமே அழகென கருதியிருந்த மனிதர்கள் மென்மையான மேனியின் அழகை அறிய ஆரம்பித்தனர். பெண்ணினதிர்க்கு மேலும் அழகூட்ட நினைத்த பெண்கள் பெண் குழந்தை இருப்பிடதுக்குல்லேயே மேலும் கவனிப்புடன் வளர்த்தனர். ஆண் குழந்தையை ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆண் குழந்தைகள் வளர வளர அவர்களின் திறமைக்கு ஏற்ப, இருப்பிட வேலை அல்லது பாதுகாப்பு அல்லது உணவு சேகரித்தல் போன்ற வேலைக்கு பிரித்து அனுப்பப்பட்டனர்.
இது வரை பசிக்கும்போது உண்டும், தூக்கம் வரும் போது தூங்கியும் வாழ்ந்தவர்கள் வாழ்க்கையை வரைமுறைப்படுத்தி, வாழ்க்கையில் மேலும் புதிய பழக்கங்களை புகுத்த ஆரம்பித்தனர். அதிக காலங்களுக்கு இருக்கும்படி உணவு சேகரித்து வைக்கப்பட்டது. உணவு உறக்கத்திர்க்கான நேரம் ஒதுக்கப்பட்டது, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.... பெண்களை மகிழ்விப்பதை சில மூட ஆண்கள் பாக்யமாக கருதினர். இந்த நிழலில் ஆரம்பகாலங்களில் பெண்களுடன் கைகோர்த்த ஆண்களும் குளிர்காய ஆரம்பித்தனர். சில நேரங்களில் ஆண்கள் ஊனமுற்ற / விருப்பமற்ற பெண்களுடன் இச்சைக்கொள்ள நிர்பந்திக்கவும் பட்டார்கள்.
சில ஆண்கள் வரைமுறைகளை மீர ஆரம்பித்தனர், சிலர் பெண் ஆதிக்கத்துக்கு எதிராக போர்க் கோடி தூக்க ஆரம்பித்தனர். ஒரு சிலர் ஆண்களாலும் குழந்தையை ஈன முடியுமா என சில விபரீத ஆராய்ச்சிகளில் இறங்கினர். இருந்தும், ஆதிக்ககாரர்களின் தந்திரத்தால், மூட நம்பிக்கை மேல் நம்பிக்கைக்கொண்ட ஆண்களை வைத்தே அவர்களை அடக்கினர். கட்டுப்பாடுகள் அதிகரித்தது. தண்டனை சட்டங்கள் இயற்றப்பட்டது. அதே நேரத்தில் எதிர்ப்பும் எழுச்சியும் அதிகரித்தது. ஆண்களின் புரட்சி ஆரம்பமானது.
தொடரும்....