வியாழன், 23 டிசம்பர், 2010

TNEB apprentice

recession - என்னனு அப்போதைக்கு தெரியாது. ஆனா வேலை தேடிட்டு இருந்ததால opening இல்லாததற்கு அதான் காரணம்னு தெரியும். சென்னையில் வேலை தேடுவதை விட்டுட்டு பெங்களூருக்கு போகலாம்னு கெளம்பினேன். ஊருக்கு போயிட்டு சொல்லிட்டு போய்டலாம்னு (phone வசதி, எங்க ஊருக்கே அப்போதைக்கு வரல), நண்பன் பரமேஷ் கொடுத்த 3000 ரூபாய வாங்கிட்டு கெங்கவரம் வந்தேன். அண்ணனும் பெங்களூருல இருந்ததால, அண்ணன்கூட போகலாம்னு வீட்ல சொன்னாங்க. அண்ணனின் வருகைக்காக எதிர்பார்த்துட்டு இருந்தேன். ஆனா TNEB apprentice letter அதற்க்கு முன்னால் வந்துடுச்சு. ஒரு safety க்காக பதிவுபன்னி வச்சிருந்தேன். ஆனா அப்போதைக்கு எனக்கு போக புடிக்கல. electronics field-ல வேலைக்கு போகணும்னு இருந்தேன்.

அப்பா TNEB apprentice போயே ஆகனும்னு கண்டிப்பா சொல்லிட்டார்.  பெங்களூர்-ல  இருந்து வந்த எங்க அண்ணனும், இவன் சோம்பேறி, உனக்கு goverment வேலதான்  correct-அ இருக்கும்னு சொல்லிட்டான். நான் போகமாட்டேன், பெங்களூர்-ல என் friends இருக்காங்க, நான் கெளம்பறேன்னு சொல்லிட்டேன். எனக்காக இந்த ஒன்னு மட்டும் செய்யுனு கெஞ்சி கேட்டார் அப்பா. என்னால் என்னுடைய விருப்பத்தை அவர்களுக்கு விளக்கமுடியவில்லை. கிராமத்து அப்பா என்பதால் goverment வேலை, goverment சம்பளம், ... என்று அவர்கள் என்னைவிட உறுதியாக பேசிக்கொண்டிருந்தார்கள். எங்கிட்ட எல்லாம் கெஞ்சாதிங்க, உங்களுக்காக போறேன். ஆனா அடுத்த முறையிலிருந்து நீங்க எது சொன்னாலும் கேட்க்கமாட்டேனு அந்தமுறை மட்டும் சம்மதிச்சுட்டேன். 

விழுப்புரத்துல training. 1975 ரூபாய் staifund.ஒரு வருஷம் contract. நடுவுல வந்தா staifund-அ திரும்ப கொடுக்கனும். ஒரு வருசத்த நாலா பிரிச்சு, மொத மூனு மாசம், 110KV SS maintenance. அடுத்த மூனு மாசம், MRT. அடுத்த மூனு மாசம், line maintenance. கடைசி மூனு மாசம், transformer maintenance. staifund பணத்த என்ன பண்ணலாம்னு plan பன்ன ஆரம்பிச்சேன். முதல்ல நல்ல துணி வாங்கணும். at least ரெண்டு மாசத்துக்கு ஒரு set-ஆச்சு எடுக்கனும். apprentice முடிக்கற time-ல ஒரு reliance mobile phone வாங்கனும். (reliance CDMA mobile appothaikku 2500 ரூபாய்க்கு கொடுத்துட்டு இருந்தாங்க. post paid connection. நெறைய பேரு bill கட்டாமலே ரொம்ப மாசம் உபயோகிச்கிட்டு இருந்தாங்க.)

விழுப்புரம், எங்க ஊரிலிருந்து 50 KM இருக்கும். மழவன்தாங்கல்   போயிட்டு விழுப்புரம் போனால் 4+6 ரூபாய் ஆகும். செஞ்சி போயிட்டு போனால் 5+7 ரூபாய் ஆகும். காலையில் மோத பஸ்சுக்கு மழவன்தாங்கல் போயிட்டு, மழவன்தாங்கல் ஏரிக்கரையை கடந்து, திருவண்ணாமலை- விழுப்புரம் பஸ்ஸ புடிச்சு, விழுப்புரம் கூட்ரோடிலேயே இருந்த SS-கு சென்று apprentice letter-ஐ AE-டம் நீட்டினேன். AE, நூல் மீசை, அயன்பன்ன light colour pant shirt, உடம்புக்கு சம்பந்தம் இல்லாத அளவுக்கு பெரிய தொப்பை. தேவையானப்போது மட்டும் மூக்கு கண்ணாடி அணிவார், மற்ற நேரங்களில் எப்போதும் அவரிடமோ அல்லது அருகிலேயே இருக்கும் கண்ணாடி பௌச்சில் வைத்துக்கொள்வர். உன் கையெழுத்து நல்லா இருக்குமானு  கேட்டார். இல்ல sir-னு சொன்னேன். எந்த பதிலும் இல்லை. அங்கிருக்கும் மற்ற apperantice-ஓடு அறிமுகம் ஆகிக்கொண்டேன்.

11 மணி ஆனது. எல்லோரும் கிளம்ப ஆரம்பித்தார்கள். வா tea குடிக்க போகலாம்னு apprentice நண்பர்கள் சொல்ல, நானும் கெளம்பினேன். எதிரில் இருந்த tea கடைக்கு போனோம். கீழ்நிலை ஊழியர்கலும் அங்கு accountஇல்  தம்மு அடித்துக்கொண்டு, tea, வடை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். tea வடை வாங்கி அரை மணி நேரத்தை போக்கிவிட்டு திரும்பினோம். AE யும், JE யும் வீட்டில் (அருகிலேயே இருக்கும் Quatres) tea அருந்திவிட்டு திரும்பி இருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தை போக்கிவிட்டு, மதிய உணவுக்கு கெளம்பினோம். சில நண்பர்கள் உணவு எடுத்து வந்திருந்தனர். நானும் மற்றொரு நண்பனும் அருகில் இருந்த woodland hotel-க்கு  போய், vegetable பிரியாணி (10 ரூபாய்) வாங்கி சாப்டுட்டு வந்தோம்.

கொஞ்ச நேரம் apprentice நண்பர்களிடம் வேலை எப்படி இருக்கும் என விசாரிக்க ஆரம்பித்தேன். SS maintenance ஒன்னும் வேலை இருக்காது. ஒனக்கு hand writting நல்லா இருக்குமானு கேட்டாரா? ஆமாம். என்ன சொன்ன? நல்லா இருக்காதுன்னு சொன்னேன். அப்ப பிரச்சனயே இல்ல. joly-ஆ maintenance-ல போய் ஒக்காந்து இருந்துட்டு போய்டலாம். அடுத்து என்ன? MRT. அது நல்லா இருக்கும். வெளிய installation எல்லாம் போகனும். நெறய கத்துக்கலாம். அடுத்து? Lines. Lines-ஆ, நீ ITI-யா? இல்ல BE. BE- யா........?அதுல யாரையும் இதுவரைக்கும் போட்டதில்ல. அங்கதான் இருக்கு. ஓரமாக இருந்த அறையை காட்டிவிட்டு, எல்லோரும் காலயில வருவாங்க. அப்புறம் van-ல போய்டுவாங்க. அதப்பத்தி தெரியல. உனக்கு தெரியுமா? அருகில் இருந்தவினிடம் கேட்க்க. ம்ம்ஹும் என பதில் வந்தது. சரி கடைசியா? Transformer... சொல்லிமுடிப்பதற்குள், செம்ம வேலை இருக்கும். இவங்களுக்கே panishment-னா அதுலதான் போடுவாங்க. செம்ம வேலை இருக்கும். ஆனா காசு வராது. அதுக்குள்ள 3.30 PM ஆகிடுச்சு. tea வடை போயிட்டு, கொஞ்சம் நேரத்துல வீட்டுக்கு கெளம்பியாச்சு. முதல் நாளே Goverment office-ல் இருந்தோம் என்பதை உணர, இல்லை உறுதி செய்துகொள்ள முடிந்தது.

காலையில 5 மணிக்கு எழுந்து, கெணத்துல குளிச்சுட்டு, வீட்ல சாப்டுட்டு, மழவந்தாங்கல்  வழியா office போயிட்டு, வரும்போது செஞ்சி வழியா ஊருக்கு திருப்புவேன். ஒரு நாளைக்கு ஒரு ஊரு line maintenance இருக்கும். காலயில 10 மணிக்கு கையெழுத்து போட்டுட்டு, shutdownபன்ன  line feeding transformer முன்னாடி உக்காந்து மொக்கை போட்டுட்டு, 3.30 மணிக்கு கெளம்பி வந்துடுவோம். நடுவுல wireman மேல போய் transformer-அ தொடச்சிட்டு, connection , oil எல்லாம் இருக்கான்னு check பன்னிட்டு வருவார். 30 நிமிஷ வேல. கையெழுத்து நல்லா இருந்தா, office-லயே ஏற்கனவே எழுதி இருக்கிற letter-அ பார்த்து date, ஊரு மட்டும் மாத்தி letter எழுதி, AE-கிட்ட sign வாங்கி file-ல pin பன்ற வேலை இருந்திருக்கும். வெளியலையே பரவா இல்ல.

பரமேஷ் கொடுத்த பணத்துல இருந்து 500 ரூபாய மோத மாசம் செலவுக்கு எடுத்துக்கிட்டேன். மீதி மாமா பையன் fees கட்ட பணம்கேட்டானு 2500 ரூபாய கொடுத்துட்டேன். வேலை தேடும் நேரத்தில், பல நேரம் அவன் தங்கி இருக்கும் college hostel-அ தங்கி இருக்கேன். அதனால அவனுக்கு நான் நண்பனிடம் பணம் வாங்கிட்டு வந்தது தெரியும். நானும் ஒரு வருஷம் முடிஞ்சு banglore போகும்போது வாங்கிக்கலாம்னு கொடுத்துட்டேன்.

முதல் மாசம் staifund வந்தது. 25 ரூபாய் change கொடுத்துட்டு, stamp paper-இல் கையெழத்துப்போட்டுட்டு, 2000 ரூபாய் வாங்கினேன். முதல்ல என்ன வாங்கலாம்? துணிதான் எடுக்கனும். என்னோட தோற்றத்த பார்த்து எவனும் engneering படிச்சவன்னு சொன்னா, நம்பவேமாட்டாங்க. நல்லா dress-அ போட்டாவது கொஞ்சம் நம்பவைப்போம். வீட்டுக்கு போனேன். அப்பாகிட்ட staifund இன்னக்கி கொடுத்தாங்கன்னு சொன்னேன். அப்பா எவ்வளவு கொடுத்தாங்கன்னு கேட்க்க? நான் 1975னு  சொன்னேன். வீட்ல கொஞ்சம் செலவு இருக்கு, உனக்கு செலவுக்கு எடுத்துகிட்டு மீதி கொடுப்பானு கேட்க்க, எனக்கு புரியவில்லை. 500 ரூபாய எடுத்துகிட்டு, மீதிய அப்பாவிடம் கொடுத்தேன். என்னிடம், கேட்பதைவிட அதிகம் பணம் கொடுக்கவேண்டும் என நினைப்பவர். இதுவரைக்கும், ஏழ்மையில் இருந்தும் நான் அதை உணரும்படியாக என்னை வைத்ததில்லை. கேட்கமலேயே தேவை அறிந்து பணம் கொடுப்பார். நான்தான் அப்பாவின் வருமானத்தை மீறி செலவாகிகொண்டிருக்கிறது என தெரிந்து கஞ்சனாக இருப்பேன்.  நான் தவறாக செலவு செய்பவன் எனவும் நினைத்து இருக்கமாட்டார்.


வேலை தேடனும்னு நெனைச்சிட்டு இருந்த எனக்கு வீட்டை பத்தி யோசிக்க மறந்திருந்தேன். நானும் அண்ணனும் BE graduate. தம்பி BTech படிச்சுட்டு இருந்தான். 5 ஏக்கர்ல விவசாயமும் ஒரு சின்ன தோப்பையும் வச்சு ஒருத்தர படிக்க வைக்கறதே கஷ்டம். அம்மாவிடம் வீட்டின் நிலவரம் கேட்டேன். ஆசையாக கட்டிய வீடு(கடைகள்) விற்கப்பட்டது தெரியும். அதோடு மேலும் 3 acre நிலம் விற்கப்பட்டு இருந்தது. அப்பாவின் நேர்மையின் பேரில் கிடைத்த ஏகப்பட்ட கடன். அண்ணன் அவன் செலவுக்கு ஏற்ப ஒரு சின்ன company-ல் வேலை செய்துக்கொண்டிருந்தான். கடன் - வட்டி, நாட்கள் கடக்க கடக்க நம்பிக்கை இழந்து வந்த கடன்காரர்கள், தம்பியின் படிப்பு, வீட்டு செலவு என அனைத்தையும் அப்போதுதான் முழுமையாக அம்மாவிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். அந்த வாரமே மாமாவிடம் 2500 ரூபாய கேட்டு நின்னேன். அவருடைய கஷ்டம் அவரால் அப்போது கொடுக்க முடியவில்லை.

மதியானம் woodland - vegetable பிரியாணியை cut பன்னிட்டு, வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துப்போக ஆரம்பித்தேன். திரும்பி வருவதும் மழவந்தாங்கல்  வழியாக வர ஆரம்பித்தேன்.

பஸ்ஸில் எப்போதும் ஊரு பெயர் சொல்லி ticket எடுப்பேன். பிறகு அமைதியாக, பணத்தை மட்டும் நீட்டினால் போதும், conductor ticket கொடுத்துட்டு மீதியை கொடுத்துடுவார். வீட்டின் முன்னாடியே bus stop. நான் கொஞ்சம் late செஞ்சாலும் எனக்காக கொஞ்சம் bus காத்திருந்தது. பார்வைக்கு என்னவோ, தினமும் காலையில் வேலைக்கு போறவன் மாதிரி கெளம்பினாலும் அங்கு சென்று வெட்டியாக நாளை கடத்திவிட்டுத்தான் வந்தேன்.

சிறுது நாளில் அம்மாவின் கஷ்டத்தைக்கண்டு காலையில் பழைய சாதம் சாப்பிட்டுவிட்டு மதியம் woodlands-vegetable பிரியாணி என மாற்றிக்கொண்டேன். பின் என் செலவை குறைக்க நல்லாப்பாளையம் சென்று சித்தி வீட்டில் தங்கினேன். அங்கிருந்து விழுப்புரத்துக்கு 5 ரூபாய் மட்டும்தான். சாந்தி சித்தி - அவுங்க அம்மா எப்படி வச்சிருக்கும் தெரியுமானு எனக்காக பயந்துக்கொண்டே சமைப்பார்கள். சின்னம்மா வீட்டு சாப்பாடு எந்த அளவிற்கும் குறைந்ததல்ல. மதிய சாப்பாடு கட்டி தருவார்கள். தம்பி கரிகாலனும் எனக்காக நெறைய செய்வான் (தினமும் காலையில் bus ஏத்திவிடுவதிலிருந்து). என்னைவிட பல வயது சிறியவன் என்பதால் கரிகாலனிடம் நிறைய பேசியதில்லை. எனக்காக அவர்கள் செய்வது எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது. இருந்தும் சின்னாம்மா, கரிகாலனுக்காக கொஞ்ச வாரம் அங்கிருந்து சென்றுக்கொண்டிருந்தேன்.

ஒரே timing-ல் bus ஏறுவது, வருவது என்பதால், அதே time-க்கு  வரும் ஒரு அழகான பெண்ணை (STD booth-ல் வேலை செய்துக்கொண்டிருந்தாங்க) bus பயணத்தில் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த வயதில் ஒரே பெண்ணை அதிகமாக சந்திக்கும்படி இருக்கக்கூடாது என நெனைக்கறேன். என்னுடைய நல்ல நேரம் என்னுடைய கூச்சசுபாவத்தால் நேரில் சென்று பேசியதில்லை.

SS maintenance - சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை. அடுத்து MRT வந்தேன். வெளியில் installation போவோம். apprentice-ஐ அருகில் இருந்து பார்க்க மட்டும் விடுவார்கள். என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது. திரும்பி வரும்போது, செல்லும் ஊரிலிருந்து, எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள இடத்தில் இறங்கி அப்படியே வீட்டுக்கு சென்றுவிடுவேன். இதிலிருந்து நல்லாப்பாளையம் போவதைவிட்டு திரும்பவும் கெங்கவரம் போக ஆரம்பித்தேன். என் உடல்வாகு அலைவதர்க்கோ, பொருட்களை தூக்குவதர்க்கோ ஏதுவாக இல்லை என்பதால் unofficial-ஆக accoounts-கு அனுப்பப்பட்டேன்.

அமைதியான ஒரு accounter-இடம் சேர்த்துவிட்டார்கள். அவர் ஒரு பெரிய notebook எடுத்து அதில் உள்ள employee-கு loan கணக்கிடுதலை   சொல்லித்தந்தார். ஒரு நீளமான கோடுபோட்ட pepper-ல்  - வட்டி விகிதத்தை வைத்து, மாதம் எவ்வளவு வட்டி வருகிறது என பார்த்து, அசலுடன் கூட்டி, அதிலிருந்து EMI கழித்து, ஒவ்வொரு மாதத்திற்கும் எழுதி, இப்போதைக்கு எவ்வளவு என பார்க்க வேண்டும். உயர் அதிகாரியின் loan மட்டும் கணக்கு பார்ப்போம். கீழ்நிலை ஊழியகள் வருவார்கள். tea வடை வாங்கி தந்து loan கணக்குப்பார்க்க சொல்வார்கள். பலர் loan முடிந்தும் கட்டிக்கொண்டு இருந்திருப்பார்கள். accounter, தம்பிக்கும் tea வாங்கி கொடுங்கன்னு சொல்வார். வேண்டாம் என்று சொல்ல அரசு ஊழியர்கள் தர்மம் ஒத்துக்கொள்ளாது. எனக்கும் tea வடை செலவு மிச்சமானது. மதிய உணவு அருகில் இருந்த mess-ல் 10 ரூபாயுக்கு ஒரு varity rice-ம் வடையும். main office-ல் accounts department இருந்தது. கூட்ரோட்டில் இருந்து 2 KM இருக்கும் (2 ரூபாய் ticket / share auto charge). நடந்துதான்  போய்வருவேன்.

ஒரு நாளைக்கு 4 loan கணக்கு பார்த்தால் போதும். ஒரு வாரத்தில் bore அடிக்க ஆரம்பித்தது. interview-க்கு prepare பன்னியிருந்த analytical skill-ஐ வைத்து formula derive பன்னினேன். formula மூலம் 5 நிமிஷ வேலை ஆனது. accounter-இடம் சொன்னேன். அவர் அதன் மேல் நம்பிக்கை இல்லாமல், அதை உபயோகிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஏற்க்கனவே போட்டுவைத்திருந்த 4 loan கணக்கை, இந்த formula-வை வைத்துப்போட்டுக்காமித்து இரண்டும் ஒரே answer வருவதை காமித்தேன். நம்ப ஆரம்பித்தார். கடைசியில் நான் derive பன்ன formula கூட்டுவட்டியின் formula. அது ஏற்க்கனவே நம் கணித book-ல் இருந்தது.

வேலை சுலபமானது. வாரத்திற்கு 2 நாள் போவதை நிறுத்திக்கொண்டேன். வாரம் ஒருமுறை MRT office-ல் அந்த வாரத்திற்கு மொத்தமாக கையெழத்து போடப்போவேன். மற்ற நாள் accounts போயிட்டு முடிந்தவரை loan கணக்கை முடித்துவிட்டு வருவேன். accounter-உம் வேலை முடிந்துவிடுவதால் வராத நாட்களைப்பற்றி கேட்பதில்லை.

தம்பிக்கு hostel fees,  செலவுக்கு 1500 ரூபாய் courier-ல் letter-உடன் வைத்து அனுப்ப அப்பா சொல்லியிருந்தார். அனுப்பிவிட்டு சில நாட்களில் தம்பியின் hostel-க்கு  விழுப்புரத்தில் இருந்து phone செய்து தம்பியிடம் கேட்டேன். தம்பி letter மட்டும்தான்  இருந்தது, பணத்தை எடுத்துவிட்டார்கள் என சொன்னான். ஒரு சில நொடிகளில் அந்த 1500 ரூபாயை வைத்து என்ன என்ன பன்னியிருக்கலாம் என வேகமாக ஓடியது. பதில் வராததால் தம்பி தொடர ஆரம்பித்தான். போன முறை அப்பா அனுப்பும்போதே இதுபோல்தான் எடுத்துவிட்டார்கள் அதனால்தான் courier-ல் அனுப்பவேண்டாம் என சொல்லிருந்தேன். எனக்கு தெரியாது. அப்பாவிடம் சொன்னாயா? என அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே கேட்டேன். இல்லை. சொன்னா கஷ்டப்படுவாங்கனு courier-ல அனுப்ப வேண்டாம்னு மட்டும் சொன்னேன் என்றான். இரட்டை நஷ்டம் ஆனதை  எண்ணி மனது பாலமாகியது. தம்பி - நண்பனிடம் வாங்கி கட்டிக்கொள்கிறேன், அப்பாவிடம் இனிமேல் courier-ல் அனுப்பவேண்டம்னு சொல்லு என்றான்.

ஏழ்மை விதியை மீறுவதற்கு விதிவிலக்கல்ல. அதே நேரத்தில் தேவையற்ற இடத்தில் over sentiment இருக்கக்கூடாது. முடிந்துவிட்டதை ஒன்றும் மாற்றமுடியாது என்றாலும் பல நாட்கள் 3000 ரூபாயில் என்ன என்ன வாங்கிருக்கலாம் என bus பயணத்தில் பலமுறை யோசித்திருப்பேன்.

அடுத்து lines. அதிகமாக 11KV/22KV power line-ல் போயிட்டு, line-ல் அடிக்கும் மரம் வெட்டிவிட்டு வருவார்கள். AE போனவுடனே சொல்லிவிட்டார். எதுக்கு உன்னை போட்டாங்கனு தெரியலன்னு. கொஞ்ச நாள் office-லேயே உட்கார்ந்து இருந்தேன். பிறகு எங்கள் ஊர் பக்கம் போகும்போது அவர்களுடன் வண்டியில் போயிட்டு மரம் வெட்டுவதை பார்த்துவிட்டு வீட்டுக்கு போக ஆரம்பித்தேன். அங்கு எல்லோரும் கூடுதலாக ஒரு business வைத்திருந்தார்கள். mutual undrstanding-ல் ஒருவர் மாற்றி ஒருவர் ஆபீசுக்கு வரமாட்டார்கள்.


(TNEB ஊழியர்கள் குறிப்பாக மழைக்காலங்களில் எப்போது வேலை இருந்தாலும், நள்ளிரவில்கூட  வேலைக்கு வருவார்கள். மற்றபடி, மற்ற அரசு ஊழியர்கள் போல, OT-ன் போது அதிகமாக பார்க்கலாம். அரசியல் கூட்டம் நடக்கும்போது அதிகம் பார்க்கலாம். அரசியல் வாதிகளிடம் இருந்து திருட்டு connection-க்கு தனி கவனிப்பு, பிரியாணியுடன் வரும். பண விசயத்தில், ஒன்று கடன் கொடுப்பவராக  (வட்டிக்கு) இருப்பார்கள் அல்லது கடன் வாங்கியவராக இருப்பார்கள்.)


van-ல் போகும்போது ஒரு sex படம் கேட்ட மாதிரி இருக்கும். வீட்டுக்கு wiring வேலை போகும்போது அல்லது line-ல் மரம் வெட்ட போகும்போது பெண்களை correct பன்ன கதை, ஏதும் கிடைக்கவில்லை என்றால் அடுத்தவன் வீட்டில் எத்தனை முறை உறவுகொண்டாய் என கிண்டல் அல்லது அவருக்கு தெரிந்த பெண்ணின் உடலமைப்பு அல்லது உடல் மாற்றத்தைப்பற்றி   பேசிக்கொண்டு போவார்கள்.

போகும் இடங்களில் உள்ள விவசாயிகள், அவர்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை இலவசமாக தருவார்கள். அப்போதுதான் fault வந்தால் உடனே பார்ப்பார்கள்.

அப்பா அந்த மாத சம்பளத்தில் தோப்புக்கு வேலி வாங்கிவந்து போட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு என்னுடைய தேவை தெரியாமல் போயிருக்கலாம் என நெனைக்கறேன். நான் துணிகூட வாங்காமல் உங்களிடம் கொடுத்துக்கொண்டிருக்கிறேன், நீங்க இப்படி வேலிவாங்கிவந்து போட்டுக்குனு இருக்கறிங்கலே, நீங்க strict-ஆன ஆளா இருந்தாகூட பரவாயில்ல. வரவங்க எல்லாம் உங்கள கேட்காமலேயே, உங்க முன்னாடியே தோப்புக்கு போய் அவன்  அவனுக்கு வேண்டியது எடுத்துக்கிட்டு போவாங்க, வேலி தேவையான்னு கேட்டேன். இல்லப்பா கண்ணுக்கு தெரியாம போறத தடுக்கலாம் இல்லையானு சொன்னார். அதுவும் இல்லாம வேலி போட்டிருந்தா, குத்தகை பணம் கொஞ்சம் அதிகமா கேட்கலாம். அடுத்த மாசம் துணி எடுக்க போலாம்னு சொன்னார்.

அடுத்து tranformer maintenance. 11KV/230V பழுதான transformer-கள் பழுது பார்பதற்காக வரிசையில் இருக்கும். பல கிலோ எடை கொண்ட அதை எடுத்து, திறந்து, oil-ஐ வெளியேற்றிவிட்டு, coil கட்டி, புது oil போட்டு, check பன்னிட்டு close செய்ய வேண்டும். அந்த oil-ல் வேலை செய்வதற்கு, ஒரு set துணி எடுத்துவந்து அங்கேயே வைத்துவிட்டோம். அங்கிருந்து கொசப்பாளயத்தில் உள்ள பெரியம்மா வீட்டிற்க்கு செல்ல ஆரம்பித்தேன். கொசப்பாளயத்திர்க்கும் 5 ரூபாய்தான். 

வழக்கம்போல அங்கேயும் bus-ல் சூரப்பட்டு பெண் (higher secondary school பெண்) ஒன்றை பார்த்துக்கொண்டிருப்பேன். பெரியம்மாவும் சின்னம்மா போலவே பயங்கரமாக கவனிப்பார்கள். அண்ணன் சுதாகரும் கரிகாலனை போலவே எனக்காக நெறைய செய்வான். என்னைவிட ஒரு வயதுதான் பெரியவன் என்பதால் சுதாகரிடம் நிறைய பேச முடிந்தது. இருவரும் கொல்லையில் உள்ள பாறையில் இரவு ஆறு மணிக்குமேல் உட்க்கார்ந்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்போம். ஒரு நாள் அந்த கொல்லையிலேயே விளைந்த மொசக்காயை  இரவு வெவிச்சு அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்தோம். ஒரு நாள் இரவு பணம்கிழங்கு வெவிச்சு சாப்பிட்டோம். மறக்கமுடியாத சுவையான அனுபவம், என்னுடைய எழுத்துக்களால் சரியாக சொல்லமுடியவில்லை.

அந்த மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு ஒரு நாள் பாண்டிச்சேரிக்கு அப்பா துணி எடுக்க அழைத்து சென்றார். துணி எடுத்துக்கொண்டு, அங்கு வேலை செய்துக்கொண்டிருந்த குப்பன் அண்ணன் வீட்டுக்கு போனோம். குப்பன் அண்ணன் ஒரு நாள் தங்கிவிட்டு போகலாம்னு சொன்னார். பீச்சுக்கு போகலாம், படத்துக்கு போகலாம்னு கேட்க்க ஆரம்பித்துவிட்டார். வரும்போது jacki chaan போஸ்டரை பார்த்த ஜாபகம் வந்தது (police story). படம் மட்டும் அண்ணனுக்காக பார்த்துவிட்டு கேளம்பிவிடலாம் என தோன்றியது. நானும் படத்துக்கு போகலாம்னு கூப்பிட்டேன். english படமாக இருந்தாலும் அப்பா எனக்காக வந்தார். படம் துவங்குவதற்கு முன்னதாகவே (love bite) என்ற சீன் படத்தின் trailer போட்டுவிட்டார்கள். அப்பாவையும் அண்ணனையும் அருகில் வைத்துக்கொண்டு, என் தலை கீழே தொங்கிக்கொண்டிருந்தது.  லேசாக trailer-ஐ பார்க்க என் கண்கள், புருவத்தை தொட்டுக்கொண்டு இருந்தது. (சீன் படம் பார்த்தும் ரொம்ப மாதம் ஆயிருந்தது). என் கழுத்தே ஜெயித்துகொண்டிருந்தது. Jackie chaan படம் சிறிது நேரமே ஓடியது, இடைவேளை விட்டுவிட்டார்கள். அப்பா இடைவேளைவிட்டதும் கேளம்பலாம் என சொல்ல, மறுப்பின்றி மூவரும் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தோம். அண்ணன் மெதுவாக, தம்பி இந்த மாதிரி படம் பாக்கனும்னா முதல்லயே சொல்லவேண்டியதுதான. அப்பாவ ஊருக்கு அனுப்பிட்டு நாளைக்கு போகலாம்னு சொன்னார். அவரிடம் நான் புரிய வைப்பதற்குள் எனக்கு அருகில் அப்பாவை வைத்துக்கொண்டு சங்கடம் ஆகிவிட்டது. அது சீன் படம் ஓட்டும் theatter-ஆக இருந்திருக்ககூடும் என நெனைக்கிறேன்.ஒரு வழியாக வீட்டுக்கு கிளம்புகிறோம் என சொல்லிவிட்டு அப்பாவுடன் வீட்டுக்கு ஊமையாக வந்து சேர்ந்தேன்.

ஒருமுறை அம்மாவிற்கு கண்ணாடி மாற்றுவதற்கு அப்பாவும் அம்மாவும் TNEB office-க்கு எதிரில் இருக்கும் கண் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். நான் ஆயில் படிந்த துணியுடன் வேலை செய்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு பதறிப்போய், அப்பா - இதுபோல் இருக்கும் என தெரியாதுப்பா, வந்துடு என்றார். ஒரு மாசம்தான் முடிந்துவிடும், இல்லனா staifund எல்லாம் திரும்ப கொடுக்கணும்னு சொன்னேன். அப்பா பரவாஇல்லை வந்துடு என்றார். நான் ஒரு மாசம் தான, நீங்க கெளம்புங்க என அனுப்ப்பிவைத்தேன்.
 
transformer maintenance-ன்  போது, மதிய உணவருந்திவிட்டு, லேசாக இடிந்த, ஆளில்லாத qatres-ல் ஒரு மணிநேரம் சீட்டுக்கட்டு விளயாடுவோம். பாயிண்ட் வைத்து, பணம் வைத்து அல்ல. நாட்கள் கடந்தன. ஒரு வழியாக உருப்படியாக ஏதும் தெரிந்துகொள்ளாமல் apprentice முடிந்தது. நான் சோம்பேறிதான் என்றாலும் புதிதாக ஏதாவது தெரிந்துகொள்ள முடியும் என்றிருக்கிறவரை சுறுசுறுப்பான வேலைக்காரன் என்ற நம்பிக்கை வந்தது. Goverment வேலையே இனி எதிர்பாக்ககூடாது, நல்ல வேலைக்கு போய்விடவேண்டும் என்ற எண்ணத்தில் experiance certificate ஏதும் வாங்கவில்லை.

கடைசியில் பாண்டியில் எடுத்த ஒரு செட்டு புது துணிமட்டும் apprentice முடிவில் என்னிடம் இருந்தது . மாமாவிடம் சென்று 2500 ரூபாயை கேட்டேன். அவரால் அப்போதும் கொடுக்கமுடியவில்லை. இதற்க்கிடையில் எங்க ஊரு பெண் ஒன்றை அடிக்கடி பார்க்க அவள் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது. அந்த வயதில் வேலையில்லாமல் இருக்ககூடாது, அப்படி இருந்தாலும் ஒரே பெண்ணை அடிக்கடி பார்க்ககூடாது என நினைக்கிறேன். காதலா இருக்குமோ, எப்படி சொல்வது, என்ன சொல்வாள், எப்படி சம்மதிக்கவைப்பது... என இது போல எண்ணங்களே அதிகம் வந்தது. மற்ற அத்தியாவசிய பிரச்சனைகளை யோசிப்பதைவிட. ஓரிரு மாதத்தில் அண்ணன் வந்து அவன் வேலை செய்த company-லேயே வேலை இருப்பதாக அழைத்து சென்றான். ஒரு set புதிய துணியுடன் சில பழைய துணிகளை polithene cover-ல் எடுத்துக்கொண்டு, கையில் 500 ரூபாயுடன் அண்ணனுடன் banglore சென்றேன்.

நான் இந்த காலங்களில், சில ரூபாய்க்காக பல தூரம் நடந்திருக்கிறேன். பொய் (உண்மையில் எனக்கு புதியது) சொல்லி இருக்கிறேன். பட்டினி இருந்திருக்கிறேன். அதேபோல் என் பாட்டிக்கு (அம்மாவின் அம்மா) வெத்தல பாக்கு வாங்க 5 ரூபாய் கேட்டுகூட கொடுக்காமல் இருந்திருக்கிறேன். அவர்கள் இறந்தபோதுதான் என் கஞ்சத்தனத்தை நினைத்து வெகு நேரம் அழுதுக்கொண்டிருந்தேன். அதுதான் நான் முதல் முறை சாவுக்காக அழுதது. நான் நல்ல நேரத்திற்காக காத்திருந்தேன். என் பாட்டியின் வயது அவரை காத்திருக்கவிடவில்லை. சிலவற்றிர்க்காக சேமிப்பை விளக்கி, கஞ்சனாக இருப்பதை தவிர்த்து சேமிப்பாலனாக மட்டும் மாற முயற்சித்தேன்.

சனி, 4 டிசம்பர், 2010

காத்தி

எங்கம்மா வழக்கத்துக்கு மாறாக காலங்காத்தால எழுப்பி வெளியப்போயிட்டு பல்ல தேச்சிக்குனு சீக்கிரமா குளிக்க வாங்கனு எழுப்பிவிட்டாங்க. நாங்க மூணு பெரும் சேர்ந்து மூணு பக்கமும் மூடி வச்சிருந்த எங்கப்பா கெளம்பிப்போயிருக்க, அரை தூக்கத்தில் ரமேஷும் (அண்ணனும் -பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்) சீத்தாவும் (தம்பியும் -அவனையும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்) எழுந்தாச்சானு உறுதி செஞ்சிக்குனு பாயிலிருந்து எழுந்தேன். தோப்புக்கு மூவரும் கெளம்பினோம்.லேசான குளுரு. அப்பப்ப மழை பெஞ்சி சேறு, சகதி. தோட்டத்து பக்கமா நாலு எட்டு வச்சா பின்னாடியே தோப்பு. அந்த சின்ன தூரத்திலையும் வெளியப்போய் லேசான மழையில கால்வாசி கரைஞ்சு நாத்தம். காலை கொஞ்சம் மோடா இருக்கற எடத்துல எட்டி எட்டி வச்சுகுனு முடிஞ்ச அளவுக்கு எதிலையும் படாம முன்னேறினோம். எங்க ஊரில் மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து மற்ற இடங்களை பிரித்து காண்பிப்பது இந்த வளையம்தான். நாங்க வழியிலோ ஊரின் ஓரமோ போறதில்ல. ஏன்னா, இதை எல்லாம் தாண்டி, நடக்கறது எவ்வளவு கஷ்டம்னு எங்களுக்கு தெரியும்.  அதுவும் இல்லாம வழிலயே போன கட்டி வந்துடும்னு ஒரு நல்ல மூட நம்பிக்கை. 

வேலி ஓரம் நீலமா வளந்து இருக்கும் பல்லி குச்சிய மூணா ஒடிச்சு, ரமேஷுக்கும் சீத்தாவுக்கும் கொடுத்துட்டு நானும் ஒன்ன வாயில வச்சுக்குனு, தாங்கல் கரையை நோக்கி நடந்தோம். தாங்கல் ஓரமா இருக்குற களத்தின் ஓரமா வெளியப்போயிட்டு , தாங்கலிலேயே கழிவிட்டு, வீட்டுக்கு திரும்பினோம். வீடு, தண்ணி ஊத்தி கழுவி வச்சிருந்தாங்க. எங்கம்மா குளிச்சுட்டு, மஞ்சா எல்லாம் பூசி நல்லா மங்களகரமா இருந்தாங்க. எங்கப்பாவும் குளிச்சுட்டு நல்லா தொவைச்ச வெள்ளை வேட்டி சட்டைய போட்டுட்டு நின்னுட்டு இருந்தாங்க. எங்கம்மா, எவ்வளவு நேரமா? வாங்கனு மூணு பேரையும் குளுப்பாட்டி விட, தொவட்டிக்குனு நல்ல துணியா போட்டுக்குனு சாப்பட ஒக்கந்தோம். இட்லி - இட்லி எப்பவாவது விசேசம் அப்பத்தான் இருக்கும்.

காலை சாப்பாட்ட முடிச்சுட்டு, விளையாட்டு நெனப்புல வேகமா வாசல் வழியா தெருவுக்கு ஓடினேன். ஓடி வந்த வேகத்தில் சானிய மேதிசுட்டு, அய்யனு சொல்லிக்கினே தெருப்பக்கம் போட்டு இருக்குற கருங்கல்ல காலை தொடச்சிக்கிட்டு இருந்தேன்.   ஸ்ரீதர் பூசனி பூவ மேரிச்சிட்டான் எம்மானு ஒரு சத்தம் கேட்டது. சாணியோட பூசணி பூவு நசிஞ்சி கல்லுல பாக்கும்பொதுதான் சானிய மட்டும் மெரிக்கலன்னு தெரியும். மெரிச்ச எடத்துல கோலம் வேற கொஞ்சம் கலைஞ்சு இருந்தது. இன்னக்கி காலயிலயே அடிதான்னு நெனச்சேன். இங்கவா, கண்ண பின்னாடியா வச்சிக்குனு இருக்கற, முன்னாடி பாத்து நடக்க மாட்டியா? உள்ளப்போய்  கால கழுவு. நல்ல நாளா இருக்கணும். அதான் கோவத்த அம்மா அடக்கிட்டாங்க. சானிய மெதிச்ச காலின் பகுதி தரையில படாம கொஞ்சம் நோன்டிக்குனே தோட்டம் பக்கம்போய்  காலை தேச்சு கழிவிட்டு திரும்பினேன், தண்ணிய யாரு ஊத்துவா? - அம்மா கேட்க்க, தண்ணி கொஞ்சம் எடுத்து தரைய கழுவிட்டு, தலைய குனிஞ்சுட்டு,  அம்மா இருக்கற எடம் வரைக்கும் பொறுமையா நடந்து வந்துட்டு, அப்புறம் வேகமா ஓடிவிட்டேன்.

சாயங்காலம் ஆனதும், வீட்ல படைக்கற வேல வேகமா நடந்துக்கொண்டு இருந்தது. வழக்கமான சாப்பாடு கூட இன்னும் கொஞ்சம் அதிகமான உண்ணும் பொருட்கள் செஞ்சிவச்சிருந்தாங்க. ஆனா படைக்கறவரைக்கும் காத்திருந்துதான்  சாப்படனும்னு சொல்லிட்டாங்க. அஞ்சிபெரும் பக்தியா நடுவீட்டில் இருக்கும் போட்டா, காலாண்டர், ஒரு சின்ன செலை சாமிக்கு முன்னாடி பக்தியோட நின்னுட்டு இருந்தோம். அம்மா எல்லாத்தையும் தயாரா வச்சுட்டு, நகர்ந்துட்டாங்க. அப்பா கல்புரத்த கொளுத்தி மூணு சுத்து காமிச்சுட்டு, தேங்கவ கர்புரதுல லேசா காமிச்சுட்டு, வெளிய வந்து வாசல்ல இருக்கும் கல்லுல தேங்கா  தண்ணி கிழ சொட்டாம ஒடைச்சு எடுத்துட்டு வந்து, சாமிக்கு முன்னாடி ஒரு பெரிய கோடு போடற மாதிரி உத்தனார். நாங்களும் அப்பா பின்னாடியே போயிட்டுவந்து, எல்லோரும் கண்ண மூடி வேண்டிக்குட்டு கல்புரம் நிக்கரவரைக்கும் அமைதியா காத்திருந்தோம் . கர்புரம் நின்ன உடனே ஒருமுறை பெருசா குமுட்டுட்டு, திருநீறு எடுத்து நெத்தியில வச்சிகுனு, சாப்பட ஒக்காந்தோம். நடுவுல வச்ச பெரிய இலைய அப்பாவுக்கு வச்சுட்டு, சின்ன சின்ன இலையில எங்களுக்கும் சாப்பாடு போட்டாங்க. எல்லாரும் சாட்டதுக்கு அப்புறம் அப்பாவுடைய இலையில எங்கம்மா சாப்பிட்டுட்டு வந்தாங்க.

அகல் விளக்கு வீட்ல எங்க எங்க வைக்க முடியுமோ அங்க எல்லாம் அகல் விளக்கு வச்சு, தோட்டத்துல வெளஞ்ச பஞ்சால திரி திரிச்சு வச்சு, நல்லஎண்ணை ஊத்தி அம்மாவோட சேர்ந்து வெளக்கு பத்தவைச்சோம். எமா அதுல திரி உள்ள போகுது, இதுல எண்ணை இல்லன்னு வெளக்க அணையாம பத்த வச்சுக்குன்னு இருந்தோம்.

தெருவுல பசங்க காத்தி சுத்த ஆரம்பிச்சு இருந்தாங்க. ஊருல எல்லா தெருவும் நெருப்பு பொறி வட்ட வட்டமா கொட்டிக்குட்டு இருந்தது. காத்தி சுத்தறது ஒரு போட்டியா பண்ணிக்குனு இருந்தாங்க.

ஓரமா நின்னுகுனு பாத்துக்குனு இருந்த என்னை, ஆறுமுக அண்ணன் வந்து அவர்கூட நிக்கவச்சு, ஒடகுடாதுன்னு சொல்லிட்டு, அவர் காலுக்கு ஒட்டி நிக்கவச்சுக்குன்னு , ஒரு கைய தோள் வழியா முன்னாடி விட்டு என் நெஞ்சிக்கு குறுக்கால அழுத்தி புடுச்சுக்குனு, காத்திய இன்னொரு கையாள சுத்துனாரு. காத்தி பொறி என் கண் முன் அறை வட்டம் அடிச்சுட்டு அடிச்சுட்டு போனது. அடுத்து நானு நானுனு மூணு பேரும் சுத்திட்டு, வீட்டு திண்ணையில ஓரமா நின்னு வேடிக்கை பாக்கப்போய்ட்டோம். சிலர் காத்திய சுத்திக்குனே தெரு தெருவாக காமிச்சுக்குனு வந்தாங்க.

ஒரு சில வருசத்துக்கு பிறகு,

காத்திக்கு முன்னாடியே , ஆறுமுக அண்ணனும் எங்கப்பாவும் எப்படி காத்தி செய்யறதுன்னு சொல்லிகொடுத்தாங்க. அடுப்பு கரிய நல்லா இடுச்சி, அறை அடி அகலம், ரெண்டு அடி நீளம் துணியின் நடுவுல நீளத்துக்கும் பொடியாப்போட்டு ரெண்டு பக்கமும் மடிச்சுவிட்டு , அழகா உருட்டி ஒரு சின்ன சணலாலக்  கட்டி, மூணு எருக்கன் குச்சிக்கு நடுவுல வச்சு, எருக்கன் குச்சியின் ரெண்டு முனையையும் நல்லா கட்டி, ஒரு முனியில கை நீட்டுக்கு ஒரு கையிறக்கட்டி  கொடுத்தாங்க.

அடுத்த நாள் காத்தி.
காலயில எழுந்திருக்கறது, மத்தது எல்லாம் அதேதான், குளியல் மட்டும் பம்ப் செட்ல.
சாப்டுட்டு தெரு பக்கம் வெளியில வந்தா, வாசல்ல அதே கோலம், அதே சாணி, அதே பூசணி பூ. கொஞ்சம் ஒதுங்கி ஓடியாச்சு.

அதே போல ராத்திரி படைச்ச உடனே சாட்டுட்டு, அடுப்புல இருந்து கொஞ்சம் நெருப்பு துண்ட காத்தியிலப்போட்டு கனிய வச்சு, நெருப்பு துண்ட கீழ கொட்டிட்டு, வெளிய போயிட்டு லேசா சுத்தி பார்த்தேன். நெருப்பு பொறி லேசா என்னை சுத்தி வட்டமடிக்க ஆரம்பிச்சது. சுத்த சுத்த அதிகமாயிட்டே போக, சந்தோசத்துக்கு நடுவில் பயம் சிறிது எட்டிப்பார்த்தது. நடுவுல நிறுத்த முயற்சித்தேன். காத்தி கயிறுடன் என்னை ஒரு சுத்து சுத்திடுச்சு. நெருப்பு பொறி மேலப்பட்டு நல்ல சட்டியில ஊது வத்தியால ஓட்டைகள் போட்டா மாதிரி ஆயிடுச்சு. முதல் முறை தப்பு வரத்தான செய்யும்.

ஒரு சில வருசத்துக்கு பிறகு,

அடுப்பு கரியவிட மலாட்ட தொலும்புல கரிப்பன்னா நல்லா வரும்னு பக்கத்து வீட்டு குப்பன் சொன்னான். வீட்ல இருந்து மலாட்ட தொலும்பு எடுத்துவந்து மோதல் முறை, கொளுத்தி சாம்பல் ஆக்கிட்டோம்., அடுத்த முறை குப்பனயே கூட்டுகுனு வந்து தொலும்பு எரியாம நெருப்ப கனிய வச்சே கரியாக்கிட்டோம். இந்த முறை காத்தி சுத்தும்போது நல்லா பொறி வந்துச்சு.

ஒரு சில வருசத்துக்கு பிறகு,

பக்கத்து வீட்டு ரவி பனம் புடுக்குல காத்தி செஞ்சா சுப்பரா இருக்கும்னு சொன்னான். ரவி - நீ மட்டும் என்கூட வா, நான் உனக்கு ஓடுச்சுத்தரேன். கெணத்துல குளிக்கபோகும்போது ஆம்பள பன மரம் எங்க இருக்குன்னு பார்த்து, ஏறி, பனம் புடுக்கு ஓடுச்சி எடுத்துட்டு வந்தோம். ஒரு குழிய வெட்டி, அதுல முதல்ல கொஞ்சம் நெருப்பு போட்டு அதுக்கப்புறம் பனம் புடுக்க வச்சு மேல பச்சை மண்ணை வச்சு பூசிட்டு, எல்லாம் கரி ஆனதுக்கப்புறம் எடுத்து அரைச்சு காத்திக்கட்டனோம். ஓனான் குச்சிக்கு பதிலா பனம் மட்ட உபயோகித்தோம். இன்னும் நல்லா வந்துச்சு.

ஒரு சில வருசத்துக்கு பிறகு,

காலயில எழுந்திருக்கறது, மத்தது எல்லாம் அதேதான்.
காலயில சாப்டுட்டு வெளிய வந்தா, நல்லா சானிய தெரு வாசபடியில தெளிச்சு, அழகா கோலம்போட்டு, நடுவுல கையளவு சானிய உருட்டி, பூசணி இலையில வச்சு, அதுக்கு மேல பூசணி பூவ சொருகி வச்சிருந்தாங்க. 

எப்பவும்போல ராத்திரி அகல் விளக்கு வெளிச்சம், காத்திப்  பொறி வலயம் எல்லாம் நல்லா இருந்துச்சு . ஒரு சில வீட்ட தவிர மத்த வீட்ல எல்லாம் ஒத்த பல்புதான் இருக்கும். தெரு விளக்கும் எங்காவுது ஒரு எடத்துலதான் எரியும். அப்படி இருந்த கிராமம், இப்ப இன்னும் எல்லா வீட்லயும் அகல் விளக்கு வெளிச்சம், காத்தி சுத்தற நெருப்பு பொறி வலயம் எல்லாம் பாத்தாதான் தீப ஒளித் திருவிழாவோட அழகு தெரிந்தது.

என் சிறு வயது என்னை இதுவரைக்கும் இப்படி நின்னு இத்திருவிழாவின் அழகை ரசிக்க  நேரம் ஒதுக்கியதில்லை. விளயாட்டு மனப்பான்மையும் போட்டி மனப்பான்மையும் என்னை வெளியிலிருந்து பார்த்து ரசிக்க மறுத்துவிட்டது. சிறு வயதில் வேடிக்கை பார்ப்பது கேவலமான விசயமாகவேறு தெரிந்தது. போட்டியாலனாக இருப்பது மட்டும்தான் பெருமையாக இருந்தது.

சில வருசத்துக்கு பிறகு,

காத்தி சுத்தறது எல்லாம் மறந்துவிட்டார்கள். படைக்கறது. சாப்படறது. TV பாக்கறது. திருவண்ணாமலை தீபத்துக்கு கூட்டம் கூட்டமா போகறதுன்னு மாறியிருந்தார்கள். ஒரு சில அகல் விளக்கு மட்டும் அங்காங்கே பார்க்க முடிந்தது. பூசணி பூவை காணோம். சாணி தெளித்த வாசலை பாக்க முடியல.காத்திய காணோம்.மின்சாரம் இருளை போக்கியதுடன் தீபத்தின் ஒளியை ரசித்த மனிதர்களையும் மாற்றிவிட்டது. தீபத்தை ஓரிடத்தில் வைத்து  அங்கு குவிய ஆரம்பித்துவிட்டர்கள்.

நெருப்பு, நீர், காற்று, நிலம், ஆகாயம், ஒளி, ஒலி, .... என அனைத்தையும் தெய்வமாக்கி பாதுகாத்தவர்கள், ஒவ்வொன்றுக்கும் திருவிழா கொண்டாடி நன்றி தெரிவித்தவர்கள், தூரம் நின்று ரசித்தவர்கள் நம் முன்னோர்கள்.

அறிவியலின் வளர்ச்சி, முன்னோர்களின் நல்ல நம்பிக்கைகளை மூட நம்பிக்கையாக மாற்றிக்கொண்டு வருகிறது. ஆனால் இக்காலதிர்க்கேற்ற சரியான மாற்று முறையை கொடுக்காமல் - உண்மையான ரசனையை கெடுத்து, விளம்பரமாக்கி, வியாபாரமாக்கி, இயற்கையை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறது.