வியாழன், 23 டிசம்பர், 2010

TNEB apprentice

recession - என்னனு அப்போதைக்கு தெரியாது. ஆனா வேலை தேடிட்டு இருந்ததால opening இல்லாததற்கு அதான் காரணம்னு தெரியும். சென்னையில் வேலை தேடுவதை விட்டுட்டு பெங்களூருக்கு போகலாம்னு கெளம்பினேன். ஊருக்கு போயிட்டு சொல்லிட்டு போய்டலாம்னு (phone வசதி, எங்க ஊருக்கே அப்போதைக்கு வரல), நண்பன் பரமேஷ் கொடுத்த 3000 ரூபாய வாங்கிட்டு கெங்கவரம் வந்தேன். அண்ணனும் பெங்களூருல இருந்ததால, அண்ணன்கூட போகலாம்னு வீட்ல சொன்னாங்க. அண்ணனின் வருகைக்காக எதிர்பார்த்துட்டு இருந்தேன். ஆனா TNEB apprentice letter அதற்க்கு முன்னால் வந்துடுச்சு. ஒரு safety க்காக பதிவுபன்னி வச்சிருந்தேன். ஆனா அப்போதைக்கு எனக்கு போக புடிக்கல. electronics field-ல வேலைக்கு போகணும்னு இருந்தேன்.

அப்பா TNEB apprentice போயே ஆகனும்னு கண்டிப்பா சொல்லிட்டார்.  பெங்களூர்-ல  இருந்து வந்த எங்க அண்ணனும், இவன் சோம்பேறி, உனக்கு goverment வேலதான்  correct-அ இருக்கும்னு சொல்லிட்டான். நான் போகமாட்டேன், பெங்களூர்-ல என் friends இருக்காங்க, நான் கெளம்பறேன்னு சொல்லிட்டேன். எனக்காக இந்த ஒன்னு மட்டும் செய்யுனு கெஞ்சி கேட்டார் அப்பா. என்னால் என்னுடைய விருப்பத்தை அவர்களுக்கு விளக்கமுடியவில்லை. கிராமத்து அப்பா என்பதால் goverment வேலை, goverment சம்பளம், ... என்று அவர்கள் என்னைவிட உறுதியாக பேசிக்கொண்டிருந்தார்கள். எங்கிட்ட எல்லாம் கெஞ்சாதிங்க, உங்களுக்காக போறேன். ஆனா அடுத்த முறையிலிருந்து நீங்க எது சொன்னாலும் கேட்க்கமாட்டேனு அந்தமுறை மட்டும் சம்மதிச்சுட்டேன். 

விழுப்புரத்துல training. 1975 ரூபாய் staifund.ஒரு வருஷம் contract. நடுவுல வந்தா staifund-அ திரும்ப கொடுக்கனும். ஒரு வருசத்த நாலா பிரிச்சு, மொத மூனு மாசம், 110KV SS maintenance. அடுத்த மூனு மாசம், MRT. அடுத்த மூனு மாசம், line maintenance. கடைசி மூனு மாசம், transformer maintenance. staifund பணத்த என்ன பண்ணலாம்னு plan பன்ன ஆரம்பிச்சேன். முதல்ல நல்ல துணி வாங்கணும். at least ரெண்டு மாசத்துக்கு ஒரு set-ஆச்சு எடுக்கனும். apprentice முடிக்கற time-ல ஒரு reliance mobile phone வாங்கனும். (reliance CDMA mobile appothaikku 2500 ரூபாய்க்கு கொடுத்துட்டு இருந்தாங்க. post paid connection. நெறைய பேரு bill கட்டாமலே ரொம்ப மாசம் உபயோகிச்கிட்டு இருந்தாங்க.)

விழுப்புரம், எங்க ஊரிலிருந்து 50 KM இருக்கும். மழவன்தாங்கல்   போயிட்டு விழுப்புரம் போனால் 4+6 ரூபாய் ஆகும். செஞ்சி போயிட்டு போனால் 5+7 ரூபாய் ஆகும். காலையில் மோத பஸ்சுக்கு மழவன்தாங்கல் போயிட்டு, மழவன்தாங்கல் ஏரிக்கரையை கடந்து, திருவண்ணாமலை- விழுப்புரம் பஸ்ஸ புடிச்சு, விழுப்புரம் கூட்ரோடிலேயே இருந்த SS-கு சென்று apprentice letter-ஐ AE-டம் நீட்டினேன். AE, நூல் மீசை, அயன்பன்ன light colour pant shirt, உடம்புக்கு சம்பந்தம் இல்லாத அளவுக்கு பெரிய தொப்பை. தேவையானப்போது மட்டும் மூக்கு கண்ணாடி அணிவார், மற்ற நேரங்களில் எப்போதும் அவரிடமோ அல்லது அருகிலேயே இருக்கும் கண்ணாடி பௌச்சில் வைத்துக்கொள்வர். உன் கையெழுத்து நல்லா இருக்குமானு  கேட்டார். இல்ல sir-னு சொன்னேன். எந்த பதிலும் இல்லை. அங்கிருக்கும் மற்ற apperantice-ஓடு அறிமுகம் ஆகிக்கொண்டேன்.

11 மணி ஆனது. எல்லோரும் கிளம்ப ஆரம்பித்தார்கள். வா tea குடிக்க போகலாம்னு apprentice நண்பர்கள் சொல்ல, நானும் கெளம்பினேன். எதிரில் இருந்த tea கடைக்கு போனோம். கீழ்நிலை ஊழியர்கலும் அங்கு accountஇல்  தம்மு அடித்துக்கொண்டு, tea, வடை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். tea வடை வாங்கி அரை மணி நேரத்தை போக்கிவிட்டு திரும்பினோம். AE யும், JE யும் வீட்டில் (அருகிலேயே இருக்கும் Quatres) tea அருந்திவிட்டு திரும்பி இருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தை போக்கிவிட்டு, மதிய உணவுக்கு கெளம்பினோம். சில நண்பர்கள் உணவு எடுத்து வந்திருந்தனர். நானும் மற்றொரு நண்பனும் அருகில் இருந்த woodland hotel-க்கு  போய், vegetable பிரியாணி (10 ரூபாய்) வாங்கி சாப்டுட்டு வந்தோம்.

கொஞ்ச நேரம் apprentice நண்பர்களிடம் வேலை எப்படி இருக்கும் என விசாரிக்க ஆரம்பித்தேன். SS maintenance ஒன்னும் வேலை இருக்காது. ஒனக்கு hand writting நல்லா இருக்குமானு கேட்டாரா? ஆமாம். என்ன சொன்ன? நல்லா இருக்காதுன்னு சொன்னேன். அப்ப பிரச்சனயே இல்ல. joly-ஆ maintenance-ல போய் ஒக்காந்து இருந்துட்டு போய்டலாம். அடுத்து என்ன? MRT. அது நல்லா இருக்கும். வெளிய installation எல்லாம் போகனும். நெறய கத்துக்கலாம். அடுத்து? Lines. Lines-ஆ, நீ ITI-யா? இல்ல BE. BE- யா........?அதுல யாரையும் இதுவரைக்கும் போட்டதில்ல. அங்கதான் இருக்கு. ஓரமாக இருந்த அறையை காட்டிவிட்டு, எல்லோரும் காலயில வருவாங்க. அப்புறம் van-ல போய்டுவாங்க. அதப்பத்தி தெரியல. உனக்கு தெரியுமா? அருகில் இருந்தவினிடம் கேட்க்க. ம்ம்ஹும் என பதில் வந்தது. சரி கடைசியா? Transformer... சொல்லிமுடிப்பதற்குள், செம்ம வேலை இருக்கும். இவங்களுக்கே panishment-னா அதுலதான் போடுவாங்க. செம்ம வேலை இருக்கும். ஆனா காசு வராது. அதுக்குள்ள 3.30 PM ஆகிடுச்சு. tea வடை போயிட்டு, கொஞ்சம் நேரத்துல வீட்டுக்கு கெளம்பியாச்சு. முதல் நாளே Goverment office-ல் இருந்தோம் என்பதை உணர, இல்லை உறுதி செய்துகொள்ள முடிந்தது.

காலையில 5 மணிக்கு எழுந்து, கெணத்துல குளிச்சுட்டு, வீட்ல சாப்டுட்டு, மழவந்தாங்கல்  வழியா office போயிட்டு, வரும்போது செஞ்சி வழியா ஊருக்கு திருப்புவேன். ஒரு நாளைக்கு ஒரு ஊரு line maintenance இருக்கும். காலயில 10 மணிக்கு கையெழுத்து போட்டுட்டு, shutdownபன்ன  line feeding transformer முன்னாடி உக்காந்து மொக்கை போட்டுட்டு, 3.30 மணிக்கு கெளம்பி வந்துடுவோம். நடுவுல wireman மேல போய் transformer-அ தொடச்சிட்டு, connection , oil எல்லாம் இருக்கான்னு check பன்னிட்டு வருவார். 30 நிமிஷ வேல. கையெழுத்து நல்லா இருந்தா, office-லயே ஏற்கனவே எழுதி இருக்கிற letter-அ பார்த்து date, ஊரு மட்டும் மாத்தி letter எழுதி, AE-கிட்ட sign வாங்கி file-ல pin பன்ற வேலை இருந்திருக்கும். வெளியலையே பரவா இல்ல.

பரமேஷ் கொடுத்த பணத்துல இருந்து 500 ரூபாய மோத மாசம் செலவுக்கு எடுத்துக்கிட்டேன். மீதி மாமா பையன் fees கட்ட பணம்கேட்டானு 2500 ரூபாய கொடுத்துட்டேன். வேலை தேடும் நேரத்தில், பல நேரம் அவன் தங்கி இருக்கும் college hostel-அ தங்கி இருக்கேன். அதனால அவனுக்கு நான் நண்பனிடம் பணம் வாங்கிட்டு வந்தது தெரியும். நானும் ஒரு வருஷம் முடிஞ்சு banglore போகும்போது வாங்கிக்கலாம்னு கொடுத்துட்டேன்.

முதல் மாசம் staifund வந்தது. 25 ரூபாய் change கொடுத்துட்டு, stamp paper-இல் கையெழத்துப்போட்டுட்டு, 2000 ரூபாய் வாங்கினேன். முதல்ல என்ன வாங்கலாம்? துணிதான் எடுக்கனும். என்னோட தோற்றத்த பார்த்து எவனும் engneering படிச்சவன்னு சொன்னா, நம்பவேமாட்டாங்க. நல்லா dress-அ போட்டாவது கொஞ்சம் நம்பவைப்போம். வீட்டுக்கு போனேன். அப்பாகிட்ட staifund இன்னக்கி கொடுத்தாங்கன்னு சொன்னேன். அப்பா எவ்வளவு கொடுத்தாங்கன்னு கேட்க்க? நான் 1975னு  சொன்னேன். வீட்ல கொஞ்சம் செலவு இருக்கு, உனக்கு செலவுக்கு எடுத்துகிட்டு மீதி கொடுப்பானு கேட்க்க, எனக்கு புரியவில்லை. 500 ரூபாய எடுத்துகிட்டு, மீதிய அப்பாவிடம் கொடுத்தேன். என்னிடம், கேட்பதைவிட அதிகம் பணம் கொடுக்கவேண்டும் என நினைப்பவர். இதுவரைக்கும், ஏழ்மையில் இருந்தும் நான் அதை உணரும்படியாக என்னை வைத்ததில்லை. கேட்கமலேயே தேவை அறிந்து பணம் கொடுப்பார். நான்தான் அப்பாவின் வருமானத்தை மீறி செலவாகிகொண்டிருக்கிறது என தெரிந்து கஞ்சனாக இருப்பேன்.  நான் தவறாக செலவு செய்பவன் எனவும் நினைத்து இருக்கமாட்டார்.


வேலை தேடனும்னு நெனைச்சிட்டு இருந்த எனக்கு வீட்டை பத்தி யோசிக்க மறந்திருந்தேன். நானும் அண்ணனும் BE graduate. தம்பி BTech படிச்சுட்டு இருந்தான். 5 ஏக்கர்ல விவசாயமும் ஒரு சின்ன தோப்பையும் வச்சு ஒருத்தர படிக்க வைக்கறதே கஷ்டம். அம்மாவிடம் வீட்டின் நிலவரம் கேட்டேன். ஆசையாக கட்டிய வீடு(கடைகள்) விற்கப்பட்டது தெரியும். அதோடு மேலும் 3 acre நிலம் விற்கப்பட்டு இருந்தது. அப்பாவின் நேர்மையின் பேரில் கிடைத்த ஏகப்பட்ட கடன். அண்ணன் அவன் செலவுக்கு ஏற்ப ஒரு சின்ன company-ல் வேலை செய்துக்கொண்டிருந்தான். கடன் - வட்டி, நாட்கள் கடக்க கடக்க நம்பிக்கை இழந்து வந்த கடன்காரர்கள், தம்பியின் படிப்பு, வீட்டு செலவு என அனைத்தையும் அப்போதுதான் முழுமையாக அம்மாவிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். அந்த வாரமே மாமாவிடம் 2500 ரூபாய கேட்டு நின்னேன். அவருடைய கஷ்டம் அவரால் அப்போது கொடுக்க முடியவில்லை.

மதியானம் woodland - vegetable பிரியாணியை cut பன்னிட்டு, வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துப்போக ஆரம்பித்தேன். திரும்பி வருவதும் மழவந்தாங்கல்  வழியாக வர ஆரம்பித்தேன்.

பஸ்ஸில் எப்போதும் ஊரு பெயர் சொல்லி ticket எடுப்பேன். பிறகு அமைதியாக, பணத்தை மட்டும் நீட்டினால் போதும், conductor ticket கொடுத்துட்டு மீதியை கொடுத்துடுவார். வீட்டின் முன்னாடியே bus stop. நான் கொஞ்சம் late செஞ்சாலும் எனக்காக கொஞ்சம் bus காத்திருந்தது. பார்வைக்கு என்னவோ, தினமும் காலையில் வேலைக்கு போறவன் மாதிரி கெளம்பினாலும் அங்கு சென்று வெட்டியாக நாளை கடத்திவிட்டுத்தான் வந்தேன்.

சிறுது நாளில் அம்மாவின் கஷ்டத்தைக்கண்டு காலையில் பழைய சாதம் சாப்பிட்டுவிட்டு மதியம் woodlands-vegetable பிரியாணி என மாற்றிக்கொண்டேன். பின் என் செலவை குறைக்க நல்லாப்பாளையம் சென்று சித்தி வீட்டில் தங்கினேன். அங்கிருந்து விழுப்புரத்துக்கு 5 ரூபாய் மட்டும்தான். சாந்தி சித்தி - அவுங்க அம்மா எப்படி வச்சிருக்கும் தெரியுமானு எனக்காக பயந்துக்கொண்டே சமைப்பார்கள். சின்னம்மா வீட்டு சாப்பாடு எந்த அளவிற்கும் குறைந்ததல்ல. மதிய சாப்பாடு கட்டி தருவார்கள். தம்பி கரிகாலனும் எனக்காக நெறைய செய்வான் (தினமும் காலையில் bus ஏத்திவிடுவதிலிருந்து). என்னைவிட பல வயது சிறியவன் என்பதால் கரிகாலனிடம் நிறைய பேசியதில்லை. எனக்காக அவர்கள் செய்வது எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது. இருந்தும் சின்னாம்மா, கரிகாலனுக்காக கொஞ்ச வாரம் அங்கிருந்து சென்றுக்கொண்டிருந்தேன்.

ஒரே timing-ல் bus ஏறுவது, வருவது என்பதால், அதே time-க்கு  வரும் ஒரு அழகான பெண்ணை (STD booth-ல் வேலை செய்துக்கொண்டிருந்தாங்க) bus பயணத்தில் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த வயதில் ஒரே பெண்ணை அதிகமாக சந்திக்கும்படி இருக்கக்கூடாது என நெனைக்கறேன். என்னுடைய நல்ல நேரம் என்னுடைய கூச்சசுபாவத்தால் நேரில் சென்று பேசியதில்லை.

SS maintenance - சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை. அடுத்து MRT வந்தேன். வெளியில் installation போவோம். apprentice-ஐ அருகில் இருந்து பார்க்க மட்டும் விடுவார்கள். என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது. திரும்பி வரும்போது, செல்லும் ஊரிலிருந்து, எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள இடத்தில் இறங்கி அப்படியே வீட்டுக்கு சென்றுவிடுவேன். இதிலிருந்து நல்லாப்பாளையம் போவதைவிட்டு திரும்பவும் கெங்கவரம் போக ஆரம்பித்தேன். என் உடல்வாகு அலைவதர்க்கோ, பொருட்களை தூக்குவதர்க்கோ ஏதுவாக இல்லை என்பதால் unofficial-ஆக accoounts-கு அனுப்பப்பட்டேன்.

அமைதியான ஒரு accounter-இடம் சேர்த்துவிட்டார்கள். அவர் ஒரு பெரிய notebook எடுத்து அதில் உள்ள employee-கு loan கணக்கிடுதலை   சொல்லித்தந்தார். ஒரு நீளமான கோடுபோட்ட pepper-ல்  - வட்டி விகிதத்தை வைத்து, மாதம் எவ்வளவு வட்டி வருகிறது என பார்த்து, அசலுடன் கூட்டி, அதிலிருந்து EMI கழித்து, ஒவ்வொரு மாதத்திற்கும் எழுதி, இப்போதைக்கு எவ்வளவு என பார்க்க வேண்டும். உயர் அதிகாரியின் loan மட்டும் கணக்கு பார்ப்போம். கீழ்நிலை ஊழியகள் வருவார்கள். tea வடை வாங்கி தந்து loan கணக்குப்பார்க்க சொல்வார்கள். பலர் loan முடிந்தும் கட்டிக்கொண்டு இருந்திருப்பார்கள். accounter, தம்பிக்கும் tea வாங்கி கொடுங்கன்னு சொல்வார். வேண்டாம் என்று சொல்ல அரசு ஊழியர்கள் தர்மம் ஒத்துக்கொள்ளாது. எனக்கும் tea வடை செலவு மிச்சமானது. மதிய உணவு அருகில் இருந்த mess-ல் 10 ரூபாயுக்கு ஒரு varity rice-ம் வடையும். main office-ல் accounts department இருந்தது. கூட்ரோட்டில் இருந்து 2 KM இருக்கும் (2 ரூபாய் ticket / share auto charge). நடந்துதான்  போய்வருவேன்.

ஒரு நாளைக்கு 4 loan கணக்கு பார்த்தால் போதும். ஒரு வாரத்தில் bore அடிக்க ஆரம்பித்தது. interview-க்கு prepare பன்னியிருந்த analytical skill-ஐ வைத்து formula derive பன்னினேன். formula மூலம் 5 நிமிஷ வேலை ஆனது. accounter-இடம் சொன்னேன். அவர் அதன் மேல் நம்பிக்கை இல்லாமல், அதை உபயோகிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஏற்க்கனவே போட்டுவைத்திருந்த 4 loan கணக்கை, இந்த formula-வை வைத்துப்போட்டுக்காமித்து இரண்டும் ஒரே answer வருவதை காமித்தேன். நம்ப ஆரம்பித்தார். கடைசியில் நான் derive பன்ன formula கூட்டுவட்டியின் formula. அது ஏற்க்கனவே நம் கணித book-ல் இருந்தது.

வேலை சுலபமானது. வாரத்திற்கு 2 நாள் போவதை நிறுத்திக்கொண்டேன். வாரம் ஒருமுறை MRT office-ல் அந்த வாரத்திற்கு மொத்தமாக கையெழத்து போடப்போவேன். மற்ற நாள் accounts போயிட்டு முடிந்தவரை loan கணக்கை முடித்துவிட்டு வருவேன். accounter-உம் வேலை முடிந்துவிடுவதால் வராத நாட்களைப்பற்றி கேட்பதில்லை.

தம்பிக்கு hostel fees,  செலவுக்கு 1500 ரூபாய் courier-ல் letter-உடன் வைத்து அனுப்ப அப்பா சொல்லியிருந்தார். அனுப்பிவிட்டு சில நாட்களில் தம்பியின் hostel-க்கு  விழுப்புரத்தில் இருந்து phone செய்து தம்பியிடம் கேட்டேன். தம்பி letter மட்டும்தான்  இருந்தது, பணத்தை எடுத்துவிட்டார்கள் என சொன்னான். ஒரு சில நொடிகளில் அந்த 1500 ரூபாயை வைத்து என்ன என்ன பன்னியிருக்கலாம் என வேகமாக ஓடியது. பதில் வராததால் தம்பி தொடர ஆரம்பித்தான். போன முறை அப்பா அனுப்பும்போதே இதுபோல்தான் எடுத்துவிட்டார்கள் அதனால்தான் courier-ல் அனுப்பவேண்டாம் என சொல்லிருந்தேன். எனக்கு தெரியாது. அப்பாவிடம் சொன்னாயா? என அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே கேட்டேன். இல்லை. சொன்னா கஷ்டப்படுவாங்கனு courier-ல அனுப்ப வேண்டாம்னு மட்டும் சொன்னேன் என்றான். இரட்டை நஷ்டம் ஆனதை  எண்ணி மனது பாலமாகியது. தம்பி - நண்பனிடம் வாங்கி கட்டிக்கொள்கிறேன், அப்பாவிடம் இனிமேல் courier-ல் அனுப்பவேண்டம்னு சொல்லு என்றான்.

ஏழ்மை விதியை மீறுவதற்கு விதிவிலக்கல்ல. அதே நேரத்தில் தேவையற்ற இடத்தில் over sentiment இருக்கக்கூடாது. முடிந்துவிட்டதை ஒன்றும் மாற்றமுடியாது என்றாலும் பல நாட்கள் 3000 ரூபாயில் என்ன என்ன வாங்கிருக்கலாம் என bus பயணத்தில் பலமுறை யோசித்திருப்பேன்.

அடுத்து lines. அதிகமாக 11KV/22KV power line-ல் போயிட்டு, line-ல் அடிக்கும் மரம் வெட்டிவிட்டு வருவார்கள். AE போனவுடனே சொல்லிவிட்டார். எதுக்கு உன்னை போட்டாங்கனு தெரியலன்னு. கொஞ்ச நாள் office-லேயே உட்கார்ந்து இருந்தேன். பிறகு எங்கள் ஊர் பக்கம் போகும்போது அவர்களுடன் வண்டியில் போயிட்டு மரம் வெட்டுவதை பார்த்துவிட்டு வீட்டுக்கு போக ஆரம்பித்தேன். அங்கு எல்லோரும் கூடுதலாக ஒரு business வைத்திருந்தார்கள். mutual undrstanding-ல் ஒருவர் மாற்றி ஒருவர் ஆபீசுக்கு வரமாட்டார்கள்.


(TNEB ஊழியர்கள் குறிப்பாக மழைக்காலங்களில் எப்போது வேலை இருந்தாலும், நள்ளிரவில்கூட  வேலைக்கு வருவார்கள். மற்றபடி, மற்ற அரசு ஊழியர்கள் போல, OT-ன் போது அதிகமாக பார்க்கலாம். அரசியல் கூட்டம் நடக்கும்போது அதிகம் பார்க்கலாம். அரசியல் வாதிகளிடம் இருந்து திருட்டு connection-க்கு தனி கவனிப்பு, பிரியாணியுடன் வரும். பண விசயத்தில், ஒன்று கடன் கொடுப்பவராக  (வட்டிக்கு) இருப்பார்கள் அல்லது கடன் வாங்கியவராக இருப்பார்கள்.)


van-ல் போகும்போது ஒரு sex படம் கேட்ட மாதிரி இருக்கும். வீட்டுக்கு wiring வேலை போகும்போது அல்லது line-ல் மரம் வெட்ட போகும்போது பெண்களை correct பன்ன கதை, ஏதும் கிடைக்கவில்லை என்றால் அடுத்தவன் வீட்டில் எத்தனை முறை உறவுகொண்டாய் என கிண்டல் அல்லது அவருக்கு தெரிந்த பெண்ணின் உடலமைப்பு அல்லது உடல் மாற்றத்தைப்பற்றி   பேசிக்கொண்டு போவார்கள்.

போகும் இடங்களில் உள்ள விவசாயிகள், அவர்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை இலவசமாக தருவார்கள். அப்போதுதான் fault வந்தால் உடனே பார்ப்பார்கள்.

அப்பா அந்த மாத சம்பளத்தில் தோப்புக்கு வேலி வாங்கிவந்து போட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு என்னுடைய தேவை தெரியாமல் போயிருக்கலாம் என நெனைக்கறேன். நான் துணிகூட வாங்காமல் உங்களிடம் கொடுத்துக்கொண்டிருக்கிறேன், நீங்க இப்படி வேலிவாங்கிவந்து போட்டுக்குனு இருக்கறிங்கலே, நீங்க strict-ஆன ஆளா இருந்தாகூட பரவாயில்ல. வரவங்க எல்லாம் உங்கள கேட்காமலேயே, உங்க முன்னாடியே தோப்புக்கு போய் அவன்  அவனுக்கு வேண்டியது எடுத்துக்கிட்டு போவாங்க, வேலி தேவையான்னு கேட்டேன். இல்லப்பா கண்ணுக்கு தெரியாம போறத தடுக்கலாம் இல்லையானு சொன்னார். அதுவும் இல்லாம வேலி போட்டிருந்தா, குத்தகை பணம் கொஞ்சம் அதிகமா கேட்கலாம். அடுத்த மாசம் துணி எடுக்க போலாம்னு சொன்னார்.

அடுத்து tranformer maintenance. 11KV/230V பழுதான transformer-கள் பழுது பார்பதற்காக வரிசையில் இருக்கும். பல கிலோ எடை கொண்ட அதை எடுத்து, திறந்து, oil-ஐ வெளியேற்றிவிட்டு, coil கட்டி, புது oil போட்டு, check பன்னிட்டு close செய்ய வேண்டும். அந்த oil-ல் வேலை செய்வதற்கு, ஒரு set துணி எடுத்துவந்து அங்கேயே வைத்துவிட்டோம். அங்கிருந்து கொசப்பாளயத்தில் உள்ள பெரியம்மா வீட்டிற்க்கு செல்ல ஆரம்பித்தேன். கொசப்பாளயத்திர்க்கும் 5 ரூபாய்தான். 

வழக்கம்போல அங்கேயும் bus-ல் சூரப்பட்டு பெண் (higher secondary school பெண்) ஒன்றை பார்த்துக்கொண்டிருப்பேன். பெரியம்மாவும் சின்னம்மா போலவே பயங்கரமாக கவனிப்பார்கள். அண்ணன் சுதாகரும் கரிகாலனை போலவே எனக்காக நெறைய செய்வான். என்னைவிட ஒரு வயதுதான் பெரியவன் என்பதால் சுதாகரிடம் நிறைய பேச முடிந்தது. இருவரும் கொல்லையில் உள்ள பாறையில் இரவு ஆறு மணிக்குமேல் உட்க்கார்ந்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்போம். ஒரு நாள் அந்த கொல்லையிலேயே விளைந்த மொசக்காயை  இரவு வெவிச்சு அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்தோம். ஒரு நாள் இரவு பணம்கிழங்கு வெவிச்சு சாப்பிட்டோம். மறக்கமுடியாத சுவையான அனுபவம், என்னுடைய எழுத்துக்களால் சரியாக சொல்லமுடியவில்லை.

அந்த மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு ஒரு நாள் பாண்டிச்சேரிக்கு அப்பா துணி எடுக்க அழைத்து சென்றார். துணி எடுத்துக்கொண்டு, அங்கு வேலை செய்துக்கொண்டிருந்த குப்பன் அண்ணன் வீட்டுக்கு போனோம். குப்பன் அண்ணன் ஒரு நாள் தங்கிவிட்டு போகலாம்னு சொன்னார். பீச்சுக்கு போகலாம், படத்துக்கு போகலாம்னு கேட்க்க ஆரம்பித்துவிட்டார். வரும்போது jacki chaan போஸ்டரை பார்த்த ஜாபகம் வந்தது (police story). படம் மட்டும் அண்ணனுக்காக பார்த்துவிட்டு கேளம்பிவிடலாம் என தோன்றியது. நானும் படத்துக்கு போகலாம்னு கூப்பிட்டேன். english படமாக இருந்தாலும் அப்பா எனக்காக வந்தார். படம் துவங்குவதற்கு முன்னதாகவே (love bite) என்ற சீன் படத்தின் trailer போட்டுவிட்டார்கள். அப்பாவையும் அண்ணனையும் அருகில் வைத்துக்கொண்டு, என் தலை கீழே தொங்கிக்கொண்டிருந்தது.  லேசாக trailer-ஐ பார்க்க என் கண்கள், புருவத்தை தொட்டுக்கொண்டு இருந்தது. (சீன் படம் பார்த்தும் ரொம்ப மாதம் ஆயிருந்தது). என் கழுத்தே ஜெயித்துகொண்டிருந்தது. Jackie chaan படம் சிறிது நேரமே ஓடியது, இடைவேளை விட்டுவிட்டார்கள். அப்பா இடைவேளைவிட்டதும் கேளம்பலாம் என சொல்ல, மறுப்பின்றி மூவரும் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தோம். அண்ணன் மெதுவாக, தம்பி இந்த மாதிரி படம் பாக்கனும்னா முதல்லயே சொல்லவேண்டியதுதான. அப்பாவ ஊருக்கு அனுப்பிட்டு நாளைக்கு போகலாம்னு சொன்னார். அவரிடம் நான் புரிய வைப்பதற்குள் எனக்கு அருகில் அப்பாவை வைத்துக்கொண்டு சங்கடம் ஆகிவிட்டது. அது சீன் படம் ஓட்டும் theatter-ஆக இருந்திருக்ககூடும் என நெனைக்கிறேன்.ஒரு வழியாக வீட்டுக்கு கிளம்புகிறோம் என சொல்லிவிட்டு அப்பாவுடன் வீட்டுக்கு ஊமையாக வந்து சேர்ந்தேன்.

ஒருமுறை அம்மாவிற்கு கண்ணாடி மாற்றுவதற்கு அப்பாவும் அம்மாவும் TNEB office-க்கு எதிரில் இருக்கும் கண் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். நான் ஆயில் படிந்த துணியுடன் வேலை செய்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு பதறிப்போய், அப்பா - இதுபோல் இருக்கும் என தெரியாதுப்பா, வந்துடு என்றார். ஒரு மாசம்தான் முடிந்துவிடும், இல்லனா staifund எல்லாம் திரும்ப கொடுக்கணும்னு சொன்னேன். அப்பா பரவாஇல்லை வந்துடு என்றார். நான் ஒரு மாசம் தான, நீங்க கெளம்புங்க என அனுப்ப்பிவைத்தேன்.
 
transformer maintenance-ன்  போது, மதிய உணவருந்திவிட்டு, லேசாக இடிந்த, ஆளில்லாத qatres-ல் ஒரு மணிநேரம் சீட்டுக்கட்டு விளயாடுவோம். பாயிண்ட் வைத்து, பணம் வைத்து அல்ல. நாட்கள் கடந்தன. ஒரு வழியாக உருப்படியாக ஏதும் தெரிந்துகொள்ளாமல் apprentice முடிந்தது. நான் சோம்பேறிதான் என்றாலும் புதிதாக ஏதாவது தெரிந்துகொள்ள முடியும் என்றிருக்கிறவரை சுறுசுறுப்பான வேலைக்காரன் என்ற நம்பிக்கை வந்தது. Goverment வேலையே இனி எதிர்பாக்ககூடாது, நல்ல வேலைக்கு போய்விடவேண்டும் என்ற எண்ணத்தில் experiance certificate ஏதும் வாங்கவில்லை.

கடைசியில் பாண்டியில் எடுத்த ஒரு செட்டு புது துணிமட்டும் apprentice முடிவில் என்னிடம் இருந்தது . மாமாவிடம் சென்று 2500 ரூபாயை கேட்டேன். அவரால் அப்போதும் கொடுக்கமுடியவில்லை. இதற்க்கிடையில் எங்க ஊரு பெண் ஒன்றை அடிக்கடி பார்க்க அவள் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது. அந்த வயதில் வேலையில்லாமல் இருக்ககூடாது, அப்படி இருந்தாலும் ஒரே பெண்ணை அடிக்கடி பார்க்ககூடாது என நினைக்கிறேன். காதலா இருக்குமோ, எப்படி சொல்வது, என்ன சொல்வாள், எப்படி சம்மதிக்கவைப்பது... என இது போல எண்ணங்களே அதிகம் வந்தது. மற்ற அத்தியாவசிய பிரச்சனைகளை யோசிப்பதைவிட. ஓரிரு மாதத்தில் அண்ணன் வந்து அவன் வேலை செய்த company-லேயே வேலை இருப்பதாக அழைத்து சென்றான். ஒரு set புதிய துணியுடன் சில பழைய துணிகளை polithene cover-ல் எடுத்துக்கொண்டு, கையில் 500 ரூபாயுடன் அண்ணனுடன் banglore சென்றேன்.

நான் இந்த காலங்களில், சில ரூபாய்க்காக பல தூரம் நடந்திருக்கிறேன். பொய் (உண்மையில் எனக்கு புதியது) சொல்லி இருக்கிறேன். பட்டினி இருந்திருக்கிறேன். அதேபோல் என் பாட்டிக்கு (அம்மாவின் அம்மா) வெத்தல பாக்கு வாங்க 5 ரூபாய் கேட்டுகூட கொடுக்காமல் இருந்திருக்கிறேன். அவர்கள் இறந்தபோதுதான் என் கஞ்சத்தனத்தை நினைத்து வெகு நேரம் அழுதுக்கொண்டிருந்தேன். அதுதான் நான் முதல் முறை சாவுக்காக அழுதது. நான் நல்ல நேரத்திற்காக காத்திருந்தேன். என் பாட்டியின் வயது அவரை காத்திருக்கவிடவில்லை. சிலவற்றிர்க்காக சேமிப்பை விளக்கி, கஞ்சனாக இருப்பதை தவிர்த்து சேமிப்பாலனாக மட்டும் மாற முயற்சித்தேன்.

கருத்துகள் இல்லை: