சென்னைக்கு மாற்றலாகி வந்தவுடன், நண்பர் பிரேம் அண்ணனின் வீட்டுக்கு அருகிலேயே, அவருடைய நண்பரின் வீட்டில் வாடகைக்கு தங்கினேன். பிரேமுடனேயே அவருடைய splendor plus-இல் மடிப்பாக்கத்திலிருந்து தாம்பரம் அலுவலகத்திற்கு போய் வந்துக்கொண்டிருந்தேன். என்னிடம் இரு சக்கர வண்டி ஓட்டுவதற்கான license இல்லை. இதுவரையும் எடுக்கவில்லை. அவ்வப்போது உரிமையுடன் பிரேமின் வண்டி எடுத்து ஓட்டி பழகிக்கொண்டிருந்தேன்.
மடிப்பாக்கம்-கீழ்க்கட்டளை-க்ரோம்பேட்-தம்பரம் MEPZ, இதுதான் எங்களுடைய வழக்கமான வழி. அலுவலகத்தில் சில நல்ல விதிமுறைகள் இரு சக்கர ஓட்டுனர்களுக்கு இருந்தது. Helmet அணியாமல் உள்ளே போக முடியாது. கோடிடப்பட்ட parking slot. License சரிப்பார்ப்பதில் சில நடைமுறை படுத்துதல் பிரச்சனை இருந்ததால், ஹைதராபாத்-DLF-அலுவலகத்தில் இருப்பதுபோல் இங்கு license உள்ளவர்களை சரிபார்த்து, அவர்களுடைய வண்டியில் sticker ஒட்டி சரிபார்க்கவில்லை.
சில படித்த அறிவாளிகள், வழியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு சில நொடிகளை சேகரித்த்க்கொண்டு செல்வதை பார்த்து பிரேம் அவர்களுக்கு அறிவில்லாததுபோல் கோபப்பட்டு கேட்பார். சிலர் வண்டியை எடுத்து parking slot-க்குள் விட்டுவிட்டு செல்வார்கள். சிலர் இன்னும் வழி இருக்கிறது என லேசாக தலையை bike-க்கு அந்தப்புறம் எட்டி பார்த்துவிட்டு செல்வார்கள். ஒருமுறை ஒரு security இந்த படிக்காதவன்கிட்ட rules-ஐ சொல்லி தடுத்திடலாம். படிச்சவங்ககிட்ட ரொம்ப கஷ்டம் என பெருமூச்சுவிடுவதை பார்த்திருக்கிறேன். ஏன், ப்ரேமே பல நேரங்களில் mobile-இல் பேசிக்கொண்டு bike ஒட்டி செல்வார். அவரும், பேசிக்கொண்டிருந்தாலும் கவனாமகத்தான் வண்டி ஓட்டுவேன் என காரணம் சொல்லலாம்.
ஒரு
நாள் கீழ்கட்டளை – க்ரோம்பேட்
200ft ரோட்டில் வரும்போது எங்களுடைய வண்டியின் tyre வெடித்து, பிரேம் எப்படியோ balance
செய்து கீழே விழாமல் வண்டியை நிறுத்தினார். அப்போது அவருக்கு புது
வண்டி வாங்க வேண்டிய அவசியம் அதிகமானது. அவருடைய பிறந்த நாள் நெருக்கத்தில்
இருந்ததால், எப்போதும்
அவருடைய தேவையை அறிந்து பரிசு தரும் அவருடைய மனைவி வனிதா, இந்த முறை பைக் வாங்கிகொடுப்பது என
முடிவேடுத்திருந்தார். பல யோசனைக்குப்பிறகு Hero Honda CBZ என முடிவானது.
சிலநாட்கள் அவரோடு கிளம்பமுடியாத நேரங்களில் அவர் விஜயின் (எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் மற்றொரு மடிப்பாக்கம் நண்பர்) வண்டியில் சென்றுவிட்டு அவருடைய வண்டியை (புது CBZ) எனக்கு கொடுத்துவிட்டு செல்வார். நானும் தனிமையில் பைக்கில் வர பழகிக்கொண்டேன். அனைவரையும்போல் புதிதாக வண்டி ஓட்டுபவன், காலியான ரோட்டில் வேகமாக ஓட்டுவது போல் நானும் 200ft ரோட்டில் வேகமாக வருகையில், ஒரு எருமை மாடு கீழே விழுந்துக்கிடந்தது. அருகில் வந்து சுதாரித்து ஒதுங்கி வண்டியை control-லுக்கு கொண்டு வந்தாலும், என் இதய துடிப்பை என்னுடைய control-க்கு வரவில்லை.
அடுத்த
நாள் சிலரிடம் அதைப்பற்றி சொன்னதில், பலர் அறிவுரை கூறினர். அது மோசமான
ரோடு பார்த்து போகனும். மாடு, நாயெல்லாம் cross பன்னும். திருடங்க அதிகம்
இருப்பாங்க என. அதன் பிறகுதான் அலுவலகம் செல்லும்போது நான் இருபுறம்
ரசித்த ஏரிகளின் இரவு நேர ஆபத்து தெரிந்தது. இருபுறமும் ஏரிகள்
நிறைந்த அந்த ஏரிக்கரைகளில் போடும் குப்பைகளை நம்பி இருக்கும் நாய்கள், இரவில் எதற்க்கு ரோட்டில் இருக்கும் ஆபத்தை தெரிந்தும் குறுக்கும் நெடுக்கும்
விளையாடுகிறது என தெரியவில்லை. பகலில்
அங்கு மேயும் எருமைகள் இரவில் இரவின் நிறத்திலேயே எமனை சுமந்துக்கொண்டு
கடக்கின்றன. ஆளில்லாத அந்த road
இரவில் திருடர்கள் பழகுவதற்கு ஏதுவாக இருக்கும்.
அதிலுருந்து கொஞ்சம் ஜாக்கரதையாக செல்ல ஆரம்பித்தேன். வேகத்தை என்னுடைய control-க்குள் இருக்கும் அளவிற்கு குறைத்துக்கொண்டேன். இருந்தும், தெரிந்துகொள்ள வேண்டிய சில. நடந்து செல்லும் பலர், அவர்களுக்கு traffic rules இல்லை என, ரோட்டில் கடந்து/நடந்து செல்வர்கள். ரோட்டில் நடந்து செல்பவர்களுக்கு கூட License கொடுக்ககூடதா என தோன்றும். சிலர் indicator போட்டால் போதுமென மற்றவண்டியை பார்க்காமல் திடீரென வண்டியை திருப்புவான். இதெல்லாம் license பிரச்சனை இல்லை என்பதைபோல். சிலர், சிக்னலும் traffic police-ம் இருந்தால்தான் traffic rules follow செய்யவேண்டும் என்பதுபோல், traffic police இல்லாத சிக்னலில் red விழுந்தாலும் பின்னாலிருந்து horn அடித்துக்கொண்டிருப்பான் / நம் வண்டியை இடித்தாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை.
மற்றொரு நாள் பிரேமுடன் வரும்போது ஒரு சிலர் நின்றிப்பதை பார்த்துவிட்டு, விபத்தாகத்தான் இருக்கும் என வண்டியை நிறுத்தி அவர்கள் அருகில் சென்றோம். எதிர்புறமாக வந்த ஒருவன் எறுமை மாட்டில் மோதி ரத்தம் வடிய எழுந்து, பைக்கை நோக்கி போய்க்கொண்டிருந்தான். அங்கு நின்றவர், அதிகமா ரத்தம் வருதுங்க, ambulance –கு call பண்ணட்டுமா என கேட்டார். இல்லங்க நான் பார்த்துக்கறேன்னு பதில் சொல்லிக்கொண்டே bike-ன் condition-ஐ சரி பார்த்துக்கொண்டிருந்தான். இல்ல பக்கத்துல மருத்தவமனைக்காவது கூப்பிட்டுட்டு போகட்டுமா என கேட்டார். இல்லைங்க இங்க பக்கத்துல hospital தெரியும் நான் போய்க்கறேனு சொல்லிட்டு, வண்டிய கெளப்பி போய்விட்டான். ப்ரேம், தண்ணி அடிச்சிருக்கான் அதான் police case ஆகுமோன்னு பயப்படரானு சொன்னார். அதுக்காக …
வாங்க போலாம், அடிபட்டவனே கெளம்பிட்டான், நாம்ப ஏண்ணா இந்த ராத்திரியில விவாதிச்சிகிட்டு இருக்கறதுன்னு கெளம்பினோம்.
என்னுடைய வேலை பளு அதிகமானதால், நான் இரவில் தனியாக வருவது அதிகரித்தது. பிரேம் என்னிடம்
எங்களுடைய (அவருடைய) வண்டியை கொடுத்துவிட்டு, விஜயோடு
சென்றுவிடுவார். வழிப்பறியை தடுக்க,
Vel’s college-ல் (200ft
road-இல்) Check
post புதிதாக வந்திருந்தது. என்னிடம் expiry ஆன LLR மட்டுமே
இருந்தது. முதல் முறை மாட்டும் பொது, license இல்ல சார். Visa processing-கு
கொடுத்திருக்கிறேன் sir-னு சொன்னேன். எந்த company-னு கேட்டு விடு என உயர் அதிகரி சொல்ல, இவனுங்க
இப்படிதான் சார் ஏதாச்சி பொய் சொல்லுவாங்கனு முகத்தில் வேட்டு போட்டpolice சொன்னார்.
பரவா இல்ல விடுப்பா என்றார் உயர் அதிகாரி. அடுத்த முறை வேட்டுபோட்ட போலீசிடம்
மாட்டினேன். உயர் அதிகாரி இல்லை. இவர் என்னையும் மறந்திருக்கணும். அதே பொய்யை
சொன்னால் உபோயோகப்படாது என LLR தான் சார் இருக்கு என்றேன். LLR இருந்தா
பின்னாடி ஒரு ஆள் இருக்கனும்னு தெரியாதா என்றார். இல்ல சார்… புதிய பொய்
சொல்லத்தெரியாமல் பொய் சொல்லிக்கொண்டிருந்தேன். இந்த ராத்திரியில் வண்டிய police station-க்கு
தள்ளிட்டு போனா, வண்டிய
எடுக்கவே நாலு நாள் ஆகும். என்ன சொல்ற என்றார். அவர் நம்பும்படி சொன்னாலும் விடாத
போலீஸ் என புரிந்தது. அமைதியாக இருந்தேன். சரி 100 ரூபா
குடுத்துட்டு போ என்றார். இப்படியாக சில நாட்களாக 100 ரூபாய்
கொடுத்துவிட்டு போய்க்கொண்டிருந்தேன். சில நாட்க்களில் அந்த police குடியில்
duty பார்த்துக்கொண்டிருப்பார்.
அதிகாரத்துடன் தவறு செய்பவர்களிடம் நாம் தவறு செய்யாமல் இருந்தாலே கேட்கமுடியாது.
என்பதால் 100-ஐ கொடுத்துவிட்டு
வழக்கம்போல் செல்வேன்.
ஒரு நாள் இரண்டு மணி இருக்கும், க்ரோம்பேட் சிக்னலை கடக்கும்போது. ஒரு ஆள் லுங்கி அணிந்து கீழே விழுந்துகிடப்பதை பார்த்து ஒதுங்கி வண்டியின் வேகத்தை குறைத்து கடக்கமுயன்றேன். என்னை விட கொஞ்சம் நல்ல software engineer, அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷன்-ல் இருந்த போலீசிடம், சார், ஒரு வண்டி அந்த ஆள அடிச்சுடிசுடிச்சு சார். விழுந்துட்டார் சார். என பதற்றத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார். போலீஸ் அவசரம் ஏதுமில்லாமல் பொறுமையாக அவனை நோக்கி நடந்தார். இது அவருக்கு புதிதில்லை என்பதால் அந்த பொறுமை என்று நெனைக்கிறேன். இதை கவனித்ததில், என் வண்டியின் வேகம் முற்றிலுமாக குறைந்திருந்தது. வண்டியில் வேகத்தை கூட்டி, வீட்டை நோக்கி பறந்தேன்.
வீட்டுக்கு சென்றதும் எனக்குள் கேள்வி பதில் ஓடத்தொடங்கியது. எவ்வளவு மனிதாபிமானம் மங்கிப்போய் இருக்கிறேன். வேகமாக வண்டிகள் வரும் அந்த சாலையில் அடிப்பட்டு விழுந்திருக்கும் ஒருவரை காப்பாற்ற எந்த முயர்ச்சியும் எடுக்காமல் எப்படி இயந்திரத்தனமாக என் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்? அவன் லுங்கி அணிந்திருந்ததால் குடித்துவிட்டு விழுந்தது போல் தெரிந்தது அதனால்தான். காப்பாற்ற போலீஸ் வந்துக்கொண்டிருந்தார் என்ற நம்பிக்கை, அதில்லாமல் license இல்லை என்ற பயம் அதனால்தான்- என எத்தனை காரணங்கள் சொன்னாலும் என்னுடைய அலட்சியம், சுயநலமான செயல் என்னை சில மணிநேரம் உறங்கவிடவில்லை. என்னுடைய இந்த சிலமணிநேர உறக்கமின்மையோடு நான் நிறுத்திக்கொள்ளாமல், என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என எண்ணினேன்.
சில நாட்களில், நான், பிரேம், ரவி அண்ணன் (எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் மற்றொரு வேளச்சேரி நண்பர்) ஒன்றாக கிளம்பினால், பிரேம் ரவியுடன் சென்று கைவேலியில் இறங்கிக்கொள்வார். நான் பிரேமின் வண்டியில் பின்தொடர்ந்து, அங்கிருந்து நானும் ப்ரேமும் மடிப்பாக்கம் செல்வோம். அவர்கள் எனக்கு முன்னாள் செல்வதால், வழியில் போலீஸ் புடித்துக்கொண்டிருந்தால் எனக்கு சொல்வார்கள். பிரேம் என்னுடிய (ப்ரேமுடைய) வண்டியை ஒட்டிக்கொள்வார்.
அன்று, வழக்கத்துக்கு
மாறாக நான் சீக்கிரமாக கிளம்பினேன். எங்கள் (பிரேமின்)வண்டியின் insurance expiry ஆனதால்
பிரேம் புதுப்பித்துக்கொண்டிருந்தார். பிரேமுக்காக காத்திருந்த சில நிமடங்களில் எனக்கு ஒரு
சிறு வேலை வர அவர்கள், எனக்கு 5 நிமிடம்
முன்னால் கிளம்பிவிட்டார்கள்.
அவர்களை கைவேலி போவதற்குள் புடிக்கவேண்டுமென வேகமாகக்கிளம்பினேன். 200ft road சில இடங்களில் புதிதாக
போடப்பட்டிருந்தது. தெருவிளக்கு வெகு சில இடத்தில் மட்டுமே இருந்தது. ரோடு
இடப்பட்ட இடத்தில் இன்னும் கூடுதல் வேகத்துடன்
சென்றேன். அடுத்துவந்த Road
crossing-இல் ஏரியில் இருந்து வந்த ஒரு எருமை குறுக்கிட, நான் அப்பலி செய்த brake சக்கரத்தின் சுழர்ச்சியைமட்டுமே
கட்டுபடுதியது. வண்டிதேய்த்துக்கொண்டுபோக பிரேக்கை விட்டுவிட்டேன். மாட்டின்
பின்தொடையில் வண்டி மோதி கீழே விழுந்தேன். (இந்த விபத்தை பலரால் முன்பே
உகித்திருக்க முடிந்திருக்கும் என நெனைக்கறேன். என்னாலும் என்றைக்காவது இந்த
மாதிரியான விபத்து வரலாம் என்று தெரிந்தும், கொஞ்சம் over
confident அன்றைக்குத்தான் என யூகிக்க முடியவில்லை.)
எழுந்துபின்னால்
வரும் வண்டிகள் என்னை மொதும் முன் ஓரமாக நின்று என் காயங்களை பார்த்தேன். எதிர்ப்பார்த்ததைவிட
குறைவான காயங்களே. அந்த எருமையை காணவில்லை. என் மீது தெறித்திருந்த சாணம் மட்டும்
நான் எருமை மீது மோதியதர்க்கு அடையாளமாக இருந்தது. கீழே கிடக்கும் வண்டியை
தூக்கிக்கொன்டிருக்கும்போது ஒருவர் தன்னுடைய வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு எனக்கு
உதவினார். என் (பிரேமின்) வண்டியின் doom அமுங்கி
இருந்தது. எனக்காக காத்திருக்கும் பிரேமுக்கு போன் செய்து நடந்ததை சொல்லி
வரசொன்னேன். auto-வில் அவர் வரும் வரை அந்த நல்ல
நபர் கிளம்புங்கனு சொல்லியும் கேட்க்காமல் காத்திருந்து auto-வில் ஏற்றிவிட்டு சென்றார். வண்டியும் என்னை போல்
காயங்களுடன் இருந்தாலும் ஓட்டிச்செல்லும் அளவிற்கு இருந்தது. பிரேம் வண்டியில் வர
அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று எலும்புமுறிவு ஏதுமில்லை என்பதை
உறுதிசெய்துக்கொண்டு, காயங்களை
சுத்தம் செய்துக்கொண்டு, antiseptic, pain killer ஊசி போட்டுக்கொண்டு வீட்டுக்கு
கிளம்பினோம்.
மறுநாள், என் software தொழிலுக்கு தேவையான இருகைகளிலும் காயம் என்பதால் ஊருக்குகிளம்பினேன். காயத்திற்கு அவரவர் ஒரு மருந்து சொன்னார்கள், open-அ இருக்கட்டும்னு சில பேர், கட்டு போடு என சில பேர். ஆளுக்கொரு காயத்தை அவர்களுக்கு கொடுத்து, பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லலாம் போல் இருந்தது. கடைசியாக open treatment with wakodane ointment என முடிவெடுத்தேன். சிலர் தினமும் எப்படி இருக்கு என கேட்டனர். படமா இது அடுத்த சீன்லயே சரியாக - என பதில் சொல்ல நினைத்தாலும் பரவாயில்லைங்க என்பேன். சிலர் அப்போதும் விடாமல் இந்த ointment போட்டு பாரேன் என்பார்கள். அவர்களுக்கு சொல்ல நினைத்த பதிலை சொல்லி முடித்துக்கொள்வேன்.
அம்மா -அந்த அண்ணன் வீட்ல சாப்பாடு எல்லாம் போடுவாங்கன்னு சொல்லுவ, அவுங்க வண்டிய போய் போட்டுட்டியே, அந்த aunty-கிட்ட sorry கேட்டியா என்றார்கள். ஆண்களைவிட பெண்கள் அடுத்தவர் ஏற்படுத்தும் நஷ்டத்தை எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதால், என் அம்மா அப்படி சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன். இல்ல போனதும் கேட்க்கிறேன் என்றேன். பிரேம் வீட்டுக்கு போனதும், Sorry - எப்படி கேட்பது என்று வார்த்தை frame செய்ய தெரியாமல், வனிதாவிடம், எங்க அம்மா சொன்னதை அப்படியே சொன்னேன். அவுங்க, என்னை aunty-னா சொன்னங்க என இயல்பான சிரிப்புடன் கேட்டார்கள். ஏமாற்றாமான reaction மேலும் குற்ற உணச்சியை அதிகப்படுத்தியது.
அலுவலகத்தில், பிரேமின் இடத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது – என்ன பிரேம் இப்படி வண்டிய கொடுத்து பையன இப்படி ஆக்கிட்டியே?
இவன நம்பியேல்லாம் வண்டி கொடுக்கிறிங்கலே? என கேலியான பேச்சுக்கள் நண்பர்களிடம் இருந்து வர,
பிரேம் - உடம்ப பாருடானா, வண்டி என்னாச்சு, தப்பா நினைப்பங்கலானு போன்ல கேட்டுட்டு இருக்கான் என பதில்சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் - சரிங்கணா, என்னன்னா வண்டி வச்சுரிக்கிங்க, அடுத்து நல்ல திடமான வண்டியா வாங்குங்க. அடிச்சா மாடு கிழே விழனும். வால புடிச்சு தூக்கிபோட்டுட்டு போய்ட்டே இருக்கணும்.
அதுக்கு நீ போய் தெலுங்கு படம்தான் எடுக்கணும்னு பிரேம் பதிலளித்தார். ஒரு தெலுங்கு நண்பன் - ஏன் தமிழ் படம் எல்லாம் இல்லையா…
எவ்வளவு ஆகுதோ பில் போட்டு வாங்கிடுவ, இல்ல என ஒருவர் கேட்க்க…,
ஆமாணா காயம் எல்லாம் சரியாகட்டும், மொத்தமா பில் போட்டு ப்ரேம்கிட்ட வாங்கிடலாம் என் அவருக்கு முன் நான் பதிலளித்தேன்.
டாய், வண்டிய சரிபண்றதுக்கு நீ கொடுக்கறத சொன்னேன்டா. இவன் கொடுத்தாலும் கொடுப்பான், ப்ரேமை பார்த்து ஒருவர்...