சனி, 3 டிசம்பர், 2011

இழப்பு


ஹைதராபாத்திலிருந்து சென்னை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு சென்னை வந்தேன். பல யோசனைகளுக்கு பிறகு,  நண்பர் பிரேம் அண்ணன் வீட்டுக்கு அருகிலேயே வீடு பார்ப்பது என முடிவெடுத்து மடிப்பாக்கத்தில் வீடு தேடினேன். பிரேமுடன் பார்த்த வீடுகள், என் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் இல்லாமல், அவருடைய வீடு திரும்பும் முன், அவருடைய நண்பர் தயாளன் அண்ணனை பார்பதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றோம். பல வளைவு பாதைகளை கடந்து, ஒரு மேடு பள்ளம் நிறைந்த வழியையும் கடந்து அவரது வீடு இருந்தது. இந்த பக்கம் மட்டும் வீடு பார்க்கக்கூடாது என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
பல நாள் தேடலுக்கு பிறகு, தயாளன் வீட்டின் முதல் மாடி காலியாகப்போகிறது என்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு தரமாட்டார்கள் என்றும், ப்ரேமுடைய நண்பர் என்பதால் எனக்கு மட்டும் தருவதாக சொன்னார்கள். அட்வான்ஸ் & ரென்ட் எல்லாம்,  இதற்க்கு முன் இருந்தவர்கள் கொடுத்ததுதான். நானும் வேறு வழி இல்லாததால் அந்த வீட்டுக்கு வாடகைக்கு சென்றேன்.
வீடு தனியாக எடுப்பது எனக்கு புதிது. திருமணம் ஆகாதவனுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மட்டும் என்னிடம் இருந்தது. தயாளனின் அம்மா, பால் காச்சலயாப்பனு கேட்க்க, அதெல்லாம் பழக்கம் இல்லை என பதிலளித்தேன். என்னப்பா நீ எனக்கூறி, ஒரு சிறு சாமி புகைப்படமும், பால் காச்ச தேவையான பாத்திரங்களும் எடுத்து வந்து கொடுத்து, பால் காச்சிவிட்டு, எனக்காக கடவுளிடம் வேண்டிவிட்டு சென்றார்கள்.
ஒரு பெரிய வரவேற்ப்பு அறை, இரண்டு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஒரு படுக்கை அறையுடன் சேர்ந்த குளியலறை, மற்றொரு குளியல் அறை வரவேற்ப்பரையின் ஓரத்தில், ஒரு பால்கனி (பால்கனியில் உட்க்கார்ந்து நான் பார்பதற்கு ஒன்றும் இல்லை). நல்ல வசதியான வீடு, கிரானைட் கல்லால் ஆன தரை. அப்போதுதான் அந்த வீட்டையே பார்க்கிறேன். என் வீட்டிலிருந்து யாராவது வந்தால் தங்குவதற்கு வசதியாக, நான் தனியாக வீடு எடுத்திருந்தேன்.
ஒரு அறையை பார்த்து அதில் என் போருட்க்களை வைத்துக்கொண்டு அங்கேயே என் படுக்கையையும் போட்டுக்கொண்டேன். முதல் நாள் இரவு. என் தனிமையைப்போக்கும் லேப்டாபை எடுத்தேன். புதிதாக வந்த வீடு என்பதால், என் கவனம் லேப்டாபை நோக்கியும் போகவில்லை, தூக்கமும் வரவில்லை. பல சிந்தனைகளுடன் லேப்டாப்பில் ஏதோ தட்டிக்கொண்டு இருந்தேன்.
அமைதியான அந்த இரவில், நோயாளியின் முனகல் கேட்டது. முனகல் சத்தம் பயப்படும்படியாக கொஞ்சம் சத்தமாக இருந்ததால் உள்ளுக்குள் ஒரு பயம். எங்கிருந்து வந்திருக்கும் என யோசனை. திரும்ப திரும்ப சில நிமிடத்திற்கு. நான் இருக்கும் அறைக்கு கீழ் இருக்கும் அறையிலிருந்துதான் வந்தது என யூகிக்க முடிந்தது. தயாளனின் மனைவி, அம்மா, இரண்டு குழந்தைகள் - இவர்களை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அவருடைய அப்பாவாகத்தான் இருக்கவேண்டும் என யூகிக்கமுடிந்தது.
அவர்களுடைய வரவேற்ப்பறையில் இருந்து பார்த்தால் ஓரளவிற்கு அந்த அறை தெரியும். ஆனால் எப்போதும் ஏறக்குறைய கதவு மூடியே இருக்கும். அவரை பார்க்க வேண்டும் என என்னுவேன். அனால் கட்டில் மட்டும்தான் லேசாக தெரியும். அவர்களும் உடல்நிலை சரியில்லாதவர் என்பதால் எனக்கு அறிமுகப்படுத்தவும் இல்லை.
அவர்களிடம், அவரை பற்றி கேட்டால் தப்பாக நேனைத்துக்கொல்வார்களோ என நினைத்தேன். சத்தம் கேட்க்காமல் இருக்க, ரேடியோ கேட்க்க ஆரம்பித்தேன். சில நாட்க்களுக்கு  பிறகு பிரேமிடம் தயாளனின் அப்பாவைப்பற்றி கேட்டேன். அவர் சில வருசங்களாக கை கால் வராமல் படுக்கையிலயே இருப்பதாகவும், எவ்வளவு வைத்தியம் செய்தும் சரியாகவில்லை எனவும் சொன்னார். என்னுடைய அப்பா நோயாளியை பார்ப்பதை எப்போதுமே தவிர்த்துவிடுவார். அவர் கண்டிப்பாக இங்கே இருக்கமாட்டார் என தோன்றியது. 


இரவில் என்னுடைய ரூமுக்கு நடந்து வருவது மிகவும் கடினமாக இருக்கும். மழைக்காலங்களில் - வழி நெடுக்க தண்ணீர், தவளையின் சத்தம், ஒரு சில இடங்களில் வெளிச்சம். எல்லாம் சேர்ந்து ஒருவித பயத்தை ஏற்படுத்தும். மற்ற நாட்களில் – வழி நெடுக்க இருக்கும் நாய்கள் பயமுறுத்தும். எந்த நாயும் கொளைக்கவில்லை என்றால் நிம்மதியாக வீட்டை போய்  சேரலாம். இல்லையேல், உள்ளுக்குள் பயத்துடன், வெளியில் தைரியத்துடன் நாயை விரட்டிக்கொண்டே போக வேண்டும்.  பிரேமுடன் அலுவலகத்தில் இருந்து வந்தால் என்னை அவரே வீட்டீல் விட்டுவிட்டு செல்வார். காலையிலும் அவரே அழைத்துக்கொண்டு செல்வார்.
ஊரிலிருந்தோ, அலுவலகத்திலிருந்தோ தனியாக வரும்போது (பொதுவாக நள்ளிரவில்தான் வருவேன்), பிரேமை நள்ளிரவில் தொந்தரவு  செய்யக்கூடாது என, என்னுடைய தைரியத்தை பரிசொதித்துக்கொல்வேன்.
மேலும் இது போல சில காரணங்கள், தண்ணீர் பிரச்சனை என அந்த வீட்டை காலி செய்வது என முடிவெடுத்து, அவர்களிடம் முன்னதாக சொல்லிவிட்டு கிளம்பினேன். திருமணம் ஆகப்போகும் நண்பன் ஸ்டாலின் வீட்டில் சில மாதம் தங்கி வீடு தேடிக்கொடிருந்தேன். என்னுடைய சோம்பேறித்தனத்தால் வீடு கிடைக்கும் முன்னதாகவே அவனுடைய திருமணம் வந்துவிட்டது. 
வேறு வழியில்லாமல் மடிப்பாக்கத்தில் உள்ள பழைய வீட்டுக்கே வந்தேன். என்னுடைய பழைய வீட்டில் பிரேமின் சொந்தக்காரர் வாடகைக்கு குடுமபத்துடன் தங்கி இருந்தார்கள். அதற்க்கு மேலே மொட்டைமாடியில் பாதி இடத்தில், ஒரு அறை, படுக்கை அறை, ஒரு சமையல் அறை என ஒருவருக்கு ஏற்றார் போல் அழகான வீடு கட்டிமுடிக்கப்பட்டிருந்தது. நான் இருக்கும்போதே தயாளன், அவருக்காக அதை கட்டிக்கொண்டிருந்தார். ஏதோ காரணத்தால், எனக்கு அந்த வீட்டை வாடாகைக்கு கொடுத்தனர்.
தயாளன் அப்பாவின் அறைக்கு மேலே இரண்டாவது அறையில் தான் இப்போதும் படுக்கை அறை இருந்தது.  முதல் நாள் இரவு, அவரின் சத்தம் கேட்குமா என எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். கேட்கவில்லை. ஒரு வேலை இரண்டாவது மாடி என்பதால் சரியாககேட்க்கவில்லையா என காதை கூர்மையாக்கி கேட்டேன். சத்தம் ஏதும் இல்லை. என்னவாகயிருக்கும் என பதைபதைத்தது. வழக்கம் போல் அவர்களிடம் கேட்கவில்லை.
இப்போதெல்லாம் எனது தைரியத்தை சோதிப்பதில்லை. பிரேமின் பொறுமையை சோதித்துக்கொண்டிருக்கிறேன். எந்த  நேரமானாலும் பிரேமின் வீட்டுக்கு சென்று வண்டி வாங்கிக்கொண்டு செல்கிறேன். நானும் அதனால் நன்றாக பைக் ஓட்டவும் பழகிக்கொண்டேன். அப்படியே பிரேமின் வீட்டில் காலையும் இரவும் சாப்பாடு, தேவையான போதெல்லாம் அவருடைய வண்டி என உரிமை எடுத்துக்கொண்டேன். அவருடைய வீட்டிலும் என்னை வேறு ஆளாக பார்ப்பதில்லை என நம்புகிறேன். என்னை (யும்) நம்பும் இன்னொரு நல்ல குடும்பம்.
ஒரு முறை தயாளன் அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தயாளனின் அப்பாவின் உடல்நிலை பற்றி கூறினார்.  அப்போது தயாளனும் பிரேமும் மைசூர் சென்றிருந்தார்கள். இவன் ஊருக்கு போனால் அவருக்கு உடல் சரி இல்லாமல் போய்விடுகிறது என போலம்பினார். தயாளன் அண்ணன் மேல் சிறிது கோபம், உடம்பு முடியாத பெரியவர்களை விட்டு விட்டு எப்படி போக தோனுகிறது என்று. இருந்தும், வேலை, முடியாத அப்பா, அம்மா என தன்னை பல வருடமாக இருக்கிகொள்ள முடியாது. இந்த இயந்திர உலகத்தில் கொஞ்சமாவது ரிலாக்ஸ் செய்யாமல் இருக்க முடியாது என தோன்றியது. தயாளன் அம்மாவிடம் பேசுகையில் அவருடைய உடல்நிலை இன்னும் மோசமாகி உள்ளது என தெரிந்தது. அவரிடம் இருந்து வந்த முனகலும் முற்றிலுமாக குறைந்திருந்ததாக சொன்னார். தயாளன் சித்தப்பா இவர்களுக்கு உதவுவதற்கு வந்திருந்தார். 
தயாளன் சித்தப்பாவின் வரவு அதிகரித்தது. அவர் வந்தால் தயாளன் அப்பாவிற்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது என தெரிந்துக்கொள்வேன்.  மொட்டை மாடியில் தனியாக படுத்துக்கொள்வார். என்னுடைய அறையில் படுத்துக்கொள்ளுங்கள் என்றாலும்,  இல்லப்பா, இங்க தான் நல்லா (நல்ல) காத்து வரும் என்பார். கொஞ்சம் வசதி குறைவானவர் என நினைக்கிறேன். அதனால்தான் இயற்கையோடு ஓரளவிற்கு ஒன்றி இருக்கிறார்.  
தயாளன் மனைவி – ஆர்த்தி, தயாளன் அப்பாவை இன்னொரு குழந்தையாக பார்த்துக்கொள்வார். நான் வியந்த ஒரு மருமகள். எங்க மாமனார் 5 மணிக்கெல்லாம் எழுந்து குளிச்சுட்டு வாக்கிங் போயிட்டு, பால் வாங்கிட்டு வந்துடுவார். எப்பவும், சுறு சுறுப்பாதான் இருப்பார். கல்யாண ஆன புதுசுலிருந்து அத்தை தான் எதாச்சு என்னை திட்டுவாங்க. மாமா தான் எப்படியெல்லாம் நடந்துக்கணும்னு பொறுமையா எடுத்து சொல்லுவார். அப்பா போல பார்த்துக்கொள்வார். இப்பதான் இப்படி ஆயிடுச்சி. என பிளாஷ் பாக்குடன் புலம்புவார். அடிக்கடி, மாமா இன்னக்கி ரெண்டு பிஸ்கட் சாப்பிட்டார், ரெண்டு இட்லி full-அ சாப்பிட்டார், ஒரு தோசை சாப்பிட்டார், என சந்தோசமாக சொல்லுவார்.
தயாளன் அம்மா, எல்லாம் விதி இவர இப்படி பார்க்கனும்னு இருக்கு. அந்த மருவத்தூர் அம்மா கொஞ்சம் கண்ண தெறந்து பார்க்ககூடாதா? போகாத டாக்டர் இல்ல? அம்மாவையும் வேண்டிக்கொண்டுதான் இருக்கிறேன். என்ன பண்றது. நல்லா செலவு பண்ணுவார், எல்லாரையும் நம்புவர், எல்லாருக்கும் நல்லதுதான்பன்னார். ஏன் அம்மா இப்படி சொதிக்குதுனு தெரியல? என கடவுளுடன் கலந்து சோகத்தை சொல்வார். எப்போதாவது அவரை வெளியே மருத்தவமனை அல்லது கோயிலுக்கு அழைத்து செல்வார்கள். அவரு, புது வேட்டி, சட்டை போட்டுட்டு வெளிய போயிட்டு வந்தார் தெரியுமா, என பெருமையாக அனைவரிடமும் சொல்லி சந்தோசப்படுவார்.
தயாளன், அதிகமாக அனைவரிடமும் புலம்பாத ஆணின் குணம். குடும்ப தலைவர் பொறுப்புடன், தந்தையின் வெளியுலக உதவி அனைத்தும் பார்த்துக்கொள்வார்.
ஒரு நாள் அவசரமாக அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். தயாளன் அப்பா அறையில் கூட்டமாக இருந்தது. உள்ளே சென்றேன். அப்பா, மாமா, தயாளன் அப்பா (தயாளன் அம்மாவின் குரல்), அண்ணா என  கத்தி கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அவரை நேராக பார்த்தேன். பல வருடம் உடல்நிலை சரியில்லாதவர் என்பதால், உடல் இளைப்பின் எல்லையை தொட்டு இருந்தார். குளிப்பாட்டிட்டு சாப்பாடு குடுக்கலாம்னு லேட் ஆகிடுச்சு அதான், என சொல்லிவிட்டு அசைவின்றி இருக்கும் அவரை திரும்ப கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
தயாளனுக்கு அடுத்தவர்கள் பார்த்து பரிதாபப்படுவது பிடிக்காது என நினைக்கிறேன். என் பார்வையிலிருந்து அவருடைய அப்பாவை மறைத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் அறையை விட்டு அவர் வெளியே வந்ததால் நானும் அவரோடு வெளியே வரவேண்டியதாகிவிட்டது. ஒண்ணும் இல்ல சரியாகிடும் என அதே காரணத்தை சொன்னார். தோசை, பாலுக்கு பதிலா, கொஞ்சம் ஜூஸ் போல நீராகரமா கொடுங்கணா என சொல்லிவிட்டு அவரை சங்கடப்படுத்தாமல் அலுவலகம் கிளம்பினேன்.
தயாளன் வெளிநாடு சென்றிருந்த நேரம், திரும்பவும் உடல்நிலை சரியில்லை என பிரேமுக்கு தகவல் வர. அவரும் மருத்துவரை வீட்டுக்கு அழைத்துவந்து பார்த்துவிட்டு சென்றார். அடுத்த தகவல் தயாளன் அண்ணனிடம் இருந்து அவருடைய இறப்பு செய்திதான் வந்தது. அலுவலகத்திலிருந்து, பிரேமுடன் வீட்டுக்கு நேராக வந்தோம்.
வீட்டுக்கு முன்னால் பந்தல், லைட், சேர் எல்லாம் போடப்பட்டிருந்தது. அமைதியான முகத்துடன் தயாளனுடன், சில ஆண்கள் வெளியில் நின்றுக்கொண்டிருந்தனர். தயாளன், உள்ளே சென்றுபாருங்க என சொன்னார். உள்ளே தயாளன் அப்பாவின் உடலுக்கு அருகில் அமர்ந்து இருந்த தயாளன் அம்மா, பிரேமின் கையை பிடித்து அழ ஆரம்பித்தார். பிறகு என் கையையும் பிடித்தும் சில நொடிகள் அழுதார். ஆறுதல் கூற முடியாத ஒரு விஷயம் இறப்பு என்பதால், பேசாமல் சிறிது நேரம் அங்கு அமர்ந்துவிட்டு வெளியில் வந்தோம். 
வீட்டுக்கு வெளியில் அந்த அளவிற்கு சோகம் இல்லை. யார் யாருக்கு சொல்லி அனுப்புவது? எப்போது எடுப்பது? எரிப்பதற்கான ஆயுத்தம் அனைத்தும் கலந்தோலோசித்து அதற்க்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.
சாவுக்கு மாமாவ கூப்பிடு, அம்மாவோட சமாதானப்படுத்திடலாம். சாவுன்னு தெரிஞ்சா அவரா வரக்கூடாதா? .... உள்ளூர் சங்குகாரற கூப்புடுங்க, அப்பத்தான் பிரச்சன பண்ணமாட்டாங்க.... என சில பிரச்சனைகளும் அங்காங்கே கேட்டது. ஐஸ் போட்டியில் உடலை வைத்துவிட்டு இரவு ரெண்டு மணிப்போல் பிரேம் வீட்டுக்கு தூங்க கிளம்பினோம். என்னுடைய ரூமில் தயாளனின் சொந்தக்காரர்கள் ஆக்கரமித்துக்கொண்டார்கள்.
காலையில் திரும்ப வரும்போது கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. எதிர்ப்பார்த்த சோகம் ஒருவர் முகத்திலும் தெரியவில்லை. பலகாலம் கழித்து சந்தித்தவர்கள் பலர் தொழிலைப்பற்றி பரிமாறிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் ரியல் எஸ்டேட் பற்றியே இருந்தது. நான்கு வருடம் என்பதால் அவருடைய இறப்பை ஏற்றுக்கொள்ள அனைவரும் தயாராகவே இருந்தார்கள். ஒரு பாட்டி மட்டும் வீட்டை நெருங்க நெருங்க நடக்கும் வேகத்தையும் அதிகரித்துக்கொண்டே போனார்கள். ஒருவர், போறதப்பாத்தா சத்தமா அழவும் போல இருக்கு என்றார். நகரத்தில் சத்தமாகக்கூட அழக்கூடாது போல.
சவ ஊர்வலத்திற்கு தயார் செய்யும் வேலைக்காரர்கள் வாங்கிய முன் பணத்தில் சரக்கு போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தனர். அவரவர் வேலையை செய்யும்போது தன்னுடைய வேலையின் நேர்த்தியை அப்பப்போது சொல்லிக்காட்டிகொண்டார்கள். எல்லாம் பணம் கேட்கத்தான் என அறிந்தவர் சிலர் முணுமுணுத்தனர். ஒருவர் வேலைக்காரர் தன் வேலையை பற்றி சொல்லி, கொஞ்சம் போட்டு குடுப்பா என சில நிமிடத்திலேயே அதை உறுதிப்படுத்தினார்.
நகரம் என்பதால் அக்கம்பக்கத்து வீட்டார்களின் தலைக்கு மட்டும் எட்டிப்பார்க்க அனுமதி கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். சில தலைகள் அப்பப்போ வெளியில் எட்டிப்பார்த்தது. அதில் ஒரு தலை, எங்க வாசல் முன்னாடி இதெல்லாம் வச்சி வேலை செய்யாதிங்கனு நகரத்தின் நாகரித்தோடு சொன்னது. சில இளம் ஆண்கள் மட்டும் ஆட்சேபனை இன்றி சிறு உதவிகள் செய்தார்கள்.
கேட்டப்பணத்திற்கு மேல் கேட்க்கும் வேலைக்காரர்களுடன் பேரத்துடன் சவ ஊர்வலமும் சிதை எரிப்பும் முடிந்தது. கடைசிவரை தயாளனின் கண்ணில் கண்ணீரை நான் பார்க்கமுடியவில்லை. அவர் தந்தையின் இத்தனை வருட கஷ்டத்திர்க்கான விடுதலை என்பதால் இருக்கலாம். வீடு வந்தவுடன், தயாளன், இதோட முடிக்கமாட்டாங்க. டெய்லி 15 நாளைக்கு பெண்கள் அழனும்.  முஸ்லிம், கிறிஸ்டியன் தான் இதுல பெஸ்ட். தன் அம்மாவின் உடல்நிலையையும், நகர வாழ்க்கைக்கு ஒத்து வராது என்பதையும் மனதில் வைத்து சொல்லிருப்பார் என நினைக்கிறேன். இறந்தவரின் பெருமைகளை நினைவுகூறும்வகையில் அவருடைய சில நிகழ்வுகளை பாட்டாக பாடி அந்த 15 நாட்கள் அழும் பெண்களை எங்கள் கிராமத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கு விளக்கம் சொல்லும் நேரம் அது அல்ல என்பதால் அமைதியாக ஆமோதித்தேன்.
ஆர்த்தி, இவர் தான் மேலே இருக்கும் அறையில் வசிப்பவர். பிரேமின் நண்பர் என என்னுடைய அறையை உபயோகித்தவர்களிடம் அறிமுகப்படுத்தினார். ரொம்ப நன்றி தம்பி என்பதையெல்லாம் கேட்க்காமல், அறிமுகத்திர்க்கோ பெருமைப்படவோ இது நேரம் அல்ல என, பரவாயில்லைங்க என விரைவில் அந்த இடத்தை கடந்தேன். அந்த நாளும் பிரேமின் வீட்டில்தான் உறக்கம்.
அடுத்த நாள் அஸ்தியை கடலில் கரைத்துவிட்டு வீடு வந்ததும், எங்களுக்கான உணவு தயாராக இருந்தது. உணவருந்த அமர்ந்தோம். இதற்க்கு முன் ஒரு சிலமுறை அவர்களுடைய வீட்டில் உணவருந்தியிருக்கிறேன்.  வழக்கம்போல் என் கண்கள் என்னை அறியாமல் தயாளன் அப்பாவின் அறை பக்கம் திரும்பியது. இழப்பை உண்மையில் அப்போதுதான் உணர்ந்தேன். கண்ணீரை வெளியேற்றாமல் சோகத்தை மறைத்து சாப்பிட்டுவிட்டு வெளிவந்தேன்.

சனி, 22 அக்டோபர், 2011

சந்தோசம்

அனைவருக்கும் போல என்னுடைய குழந்தை பருவமும் எனக்கு சந்தொசத்தைமட்டுமே அதிகமாக தந்தது. என்னுடைய ஏழ்மையும் கிராம சூழ்நிலையும் சேர்ந்து எனக்கான சந்தோசத்தை நிர்ணயத்ததும் இல்லாமல் அதற்க்கான வசதியை நானேதான் உருவாக்கிகொள்ளவேண்டும் என்பதையும் கற்றுத்தந்தது.
 
அத்தியாவசிய தேவை அனைத்தும் போதுமான அளவிற்கு இருந்தது/கிடைத்தது. உணவு - வீட்டைவிட்டால் உறவினர்கள் (அக்கம்பக்கத்தினர் உள்ப்பட), பள்ளி, தோட்டம், காடு என பல இடங்களில் கிடைத்தது. பசிக்கான உணவு வீடுகளிலும் பள்ளியிலும் கிடைத்தது. ருசிக்கான உணவு தோட்டத்திலும் காடுகளிலும் கிடைத்தது. உறைவிடம் - ஒரு விவசாய குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் உள்ள அழகான ஓட்டு வீடு. நான் உண்ண, உறங்க, வெளியில் விளையாட செல்லமுடியாத நேரத்தில் சகோதரகளுடன் விளையாட அல்லது சண்டைபோட போதுமான இடம். என்னுடைய உலகம் வீட்டுக்கு வெளியில் இருந்தது. உடை - நான் கூச்சபடாத அளவிற்கு தேவையான உடை. உடையின் தேவை அந்த அளவிற்கு தெரியாத காலம்.



எதுவாக இருந்தாலும் என் தம்பி மற்றும் அண்ணன் இருவரின் விருப்பு வெறுப்புகளை தாண்டியே எனக்கு வந்துசேரும். அதனால் என்னுடைய எதிர்பார்ப்புகளை அது ஏறக்குறைய முழுவதுமாக அழித்து ஏமாற்றம் அற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது.

முதலீடு இல்லாத பல கிராமத்து விளையாட்டுக்கள்  என்னை சூழ்ந்து என் வயதுக்கு சவால்விட்டுக்கொண்டிருந்தது. விளையாட்டின் வெற்றியோ தோல்வியோ என் சந்தோசத்தை அவ்வளவாக நிர்ணயக்கவில்லை. என்னுடைய  திறமையின் உச்சத்தை தீண்டினாலே போதும். என்னுடைய சந்தொசத்திர்க்கான தேடல்கள் என் வீட்டிலும், தோட்டத்திலும், தெருவிலும், எங்கள் ஊர் கிணற்றிலும், காட்டிலும் இருந்தது. தோல்வி வெற்றி என என் தேடலுக்கு ஏதுவும் இல்லை. ஒவ்வொரு தேடலின்போதும் ஒரு அடி முன் சென்றாலே போதும்.

என் நண்பர்களின் சந்தோசமும் என்னுடைய சந்தொசத்திலிருந்து வித்தியாசப்படவில்லை. எங்களைவிட பணத்தளவில் உயர்ந்தவர்களுடன் (போம்மை வாங்கி விளையாடுபவர்கள் அல்லது  வீட்டுக்குள்ளேயே விளையாடுபவர்கள் அல்லது பெற்றோர்கள் சொல்லித்தர விளையாடுபவர்கள்) அதிகம் சேர்ந்ததில்லை. வீட்டிலேயே விளையாடுவதை கேவலமாக கருதியதால் அவர்களிடமிருந்து தள்ளியே இருந்தோம்.


என்னுடைய இளமையின் ஏழ்மையை (பணத்தால்) என்னுடைய கிராமம் இனிமையாய் மாற்றித்தந்து. இளமை, ஏழ்மை, கிராமம் - இந்த மூன்றும் சேர்ந்த சிறுவயது அனுபவத்தை வேறெந்த combination-உம் இந்த அளவிற்கு சந்தோசத்தை (எனக்கு) தந்திருக்காது என நினைக்கிறேன்.

குறைவான ஆபத்து, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பெற்றோர்கள், இருப்பதை ஏற்று இல்லாததை அறிந்துக்கொள்ளாமல் / மறந்து வாழும் மனப்பான்மை,  முதலீடு இல்லாத பல சந்தோசங்கள், ஒத்த மனப்பான்மை உள்ள நண்பர்கள், சந்தோசத்தை மட்டுமே தேடி அலையும் குழந்தை பருவம், முக்கியமாக தன்னுடைய சந்தோசத்தை தான் மட்டும் முடிவுசெய்யும் குழந்தை பருவம்.  என என் சிறுவயது சந்தோசத்திற்கு காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

பள்ளி பருவமும் வெளி உலகத்தை அதிகம் எனக்கு காட்டவில்லை. சந்தோசமும் துக்கமும் சரியான கலவையில் என்னை சுற்றி சுழன்றுக்கொண்டிருந்தது.

கல்லுரி சென்றவுடன் என்னுடைய பார்வை விரிவடைந்தது. பல புதிய சந்தோசங்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன . எனக்கு ஒருவருட செலவுக்கென்று கிடைத்த பணம் இருமுறை சந்தோசமாக ஊரை சுற்றினாலே  தீர்ந்துவிடும்.

செலவில்லாத சந்தோசங்களை தேட ஆரம்பித்தேன். பல இருந்தன. சந்தோசத்தின் அளவு பணத்தால் அளக்கப்பட்டதால், அதையும் மீறி வெகு சில மட்டுமே நண்பர்களால் அங்கீகரிக்கப்பட்டன. அங்கீகரிக்கப்படாத சந்தோசங்களை என்னக்குள்ளாகவே கொண்டாடிக்கொண்டேன்.

ஒரு சிலர் மட்டும் என்னைப்போல் ஏழ்மையானவர்கள். பலர் பணம் படைத்தவர்கள். அதில் பலர் குணம் படைத்தவரும் கூட. பல நேரம் அவர்கள் அழைத்தும், செலவுகூட அவர்களே செய்யக்கூடியவர்களாக இருந்தும், சில காரணங்களை சொல்லி ஒதுங்கி இருந்தேன். என்னுடைய பங்களிப்பு (பணத்தளவில்) இல்லாமல் என்னால் அவரகளுடன் சந்தோசத்தை அனுபவிக்க முடியாது என்பதால். பெரும்பாலும் என்னை சோம்பேறியாக்கிக்கொண்டேன். இருந்தும் சில நண்பர்களுக்கு என் மேல் உரிமை இருந்தது, அவர்களுடன் போவதை நான் தவிர்ப்பதில்லை.

படிப்பு முடிந்தது. கடமை வந்தது. சந்தோசங்களை தள்ளிப்போட்டுவிட்டு வேலை தேட ஆரம்பித்தேன். சில காலங்களுக்கு பிறகு, சந்தோசத்தை தள்ளிபோடுவதர்க்கும் வேலை கிடைப்பதற்கும் என்ன சம்பந்தம் என தோன்றியது. எப்படி இருந்தாலும், பணம் இல்லாமல் பெரிதாக எந்த சந்தோசத்தையும் நான் பெறமுடியாது. ஆனால் என் மனத்தின் இருக்கத்தை குறைத்துக்கொள்ளலாம் என தோன்றியது. தனிமையும் கனவுகளும் சந்தோசமாக மாறிக்கொண்டிருந்தன.

எனக்கு நெருக்கமானவர்கள் ஒரு சிலரே, வேலை இல்லாமல் எப்படி கவலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறான் என கேவலமாக பேச ஆரம்பித்தனர். கவலைப்படுவது தீர்வாகாது என அவர்களுக்கு விளக்கும் நிலைமையில் நான் அப்போது இல்லை. அதற்காக என்னை மாற்றிக்கொள்ளவும் விரும்பவில்லை. வேலை தேடலில் விரக்தி அடைந்தாலும், எனக்கான வேலையை என் வழியில் தேடிக்கொண்டிருந்தேன்.

ஒருபுறம், பணம்கொண்டு வாங்கும் சந்தோசத்தின் மேல் வெறுப்பானது. மனம் அதற்க்கான காரணங்களை சொல்லிக்கொண்டிருந்தது. வியாபாரிகளிடம் சந்தோசம் மாட்டிக்கொண்டிருப்பதாக தோன்றியது. நான் எது செய்தால் எனக்கு சந்தோசமாக இருக்கும் என்பதை  அவர்கள் யார் சொல்வது? அடுத்தவர் என் சந்தோசத்தை அங்கீகரித்தால்தான்  சந்தோசமா? என கேள்விகள் கேட்டது.

வேலை கிடைத்தது. என் தகுதிக்கு குறைவான வேலை/சம்பளம் என்பதை எனக்கு மேல் வேலைசெய்பவர்களை பார்த்து தெரிந்துக்கொண்டேன். வேலைகிடைத்த சந்தோசம் குறைய ஆரம்பித்தது. என்னுடைய பொறாமை ஏமாற்றம் போல் தோற்றமளித்தது. போராட்டங்களுக்கு பிறகு அடுத்த வேலை. அங்கும் அதே நிலை. எங்குபோனாலும் அதே பிரச்சனை என்றால் என்னுள்தான் பிரச்சனை என்பதை உணர்ந்தேன். ஏதோ ஒருவகையில் அவர்கள் என்னைவிட உயர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. முடிந்த அளவுக்கு என்னை சரிசெய்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

இதநிடையே சந்தோசத்தை அவர்களுக்கு காமிப்போம் என்ற நம்பிக்கையில் எங்களுடைய பெற்றோர்கள் எங்கள் பின்னால். அவர்களுக்கு பின்னலும் இதைப்போல் ஒரு சந்தோஷ கதை. அமைதியான கிராம சுழலில் இருக்கும் அவர்களுக்கு பரபரப்பான எந்திர உலகத்தை காண விரும்பும் அவர்களது மனது. அமைதியான சுழலை தேடும் எங்களுடைய மனது. அவரவர் வயதிற்கேற்ற எதிர்பார்ப்பு அவரவர்களிடம். எதிர்மாறான சந்தோசங்கள்.  பெற்றோர்களை விட்டுவிட்டு சந்தோசப்பட விரும்பாத மனம். இருவரும் சந்தொசப்படாமல் இருப்பதற்கு, சிலநாள் அவர்களுக்காக செலவழித்தால் இருவரும் சந்தோசமாக இருக்கலாம் என முடிவுக்குவந்துள்ளேன்.
சரியோ தவறோ, என் வாழ்வில் நான் அறிந்த சந்தொசத்திர்க்கான வரையறை:
  1.  பணம்  கொண்டு பெறுவது மட்டும் சந்தோசம் அல்ல. சந்தோசம் பணத்தால் அளக்கப்படுவதும் அல்ல. மனம் சென்று அடையும் அனைத்துமே சந்தோசம்தான்.
  2.    உன்னுடைய சந்தோசத்தை அடுத்தவர் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் ஒருவர் சந்தோசம் அடுத்தவருக்கும் போருந்தகூடியது அல்ல.
  3. சந்தோசத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு/கஷ்டம்/துக்கம் தான் சந்தோசத்தின் அளவை நிர்ணயிக்கும்.
  4. சந்தோசம் வெற்றியில் மட்டும் இருக்ககூடியது அல்ல. நம் திறமையின் உச்சத்தை தொடுவதில்தான் இருக்க வேண்டும்.

வியாழன், 23 ஜூன், 2011

அன்பு ஒலி

கிட்னி failure. இரண்டும் இருபத்தி எட்டு வருடத்திலேயே பழுதடைந்துவிட்டது. பேரதிர்ச்சி அவனுக்கு. நல்லவங்களுக்கு ஏன்தான் இப்படி நோய் எல்லாம் வருதுன்னு தெரியல -என சில பேர். எல்லாம்  ராஜேந்திரன் அப்பா செஞ்ச பாவம் - என சில பேர். அடுத்தவர்களின் பேச்சில் நம்பிக்கை இல்லாதவன், உடலை சரியாக பார்த்துக்கொள்ளாதது நமது தவறுதான் என்று காலம் கடந்து புரிந்துக்கொண்டான். இப்போது உடல் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதில், அவனுக்கு இன்னும் வாழ்நாள் இருப்பதாக நம்பிக்கை வந்தது. பல மருத்தவமனைகளை அணுகியும் அவனுக்கேற்ற கிட்னி கிடைக்கவில்லை. செலவு செய்ய பணம் இருந்தும் அப்போதைக்கு உபயோகப்படவில்லை. விளம்பரம் செய்துப்பார்த்தான். இப்போது மக்கள் தன் தேவையை பூர்த்திசெய்துக்கொள்ளும் அளவிற்கு சம்பாதிக்கும் வழிகள் பல வந்துவிட்டது. யாரும் பிழைப்புக்காக உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவதுமில்லை, உயிருடன் இருக்கும்போது இரண்டில் ஒரு உறுப்பை தைரியமாக கொடுக்கும் அளவிற்கு பெரிய வள்ளலாகவும் இல்லை. ஆனால் அவனுடைய அப்பாவுக்கு விளம்பரம் மூலம் செய்தி சென்றடைந்தது.

அப்பாவின் கட்டப்பஞ்சாயத்து வாழ்க்கையை வெறுத்து வீட்டைவிட்டு தனியாக வந்திருந்தான். ஒரே மகனை பிரிய நேரிட்டாலும் நாகேந்திரனுக்கு அந்த வாழ்க்கையை விட்டு வெளியே வர விருப்பமில்லை. எப்படியும் மகன் நன்றாக இருக்கிறான் என்ற நம்பிக்கை.

மகனின் வீட்டுக்கு வந்து, மகனால் திருப்பி அனுப்பப்பட்டவன், என் பையனுக்கு இவ்வளவு பெரிய கஷ்டம் வந்திருக்கு என்ன கண்கானிக்கிரிங்க? பத்திரிக்கையை பார்த்து நானே தெரிஞ்சிக்கவேண்டிருக்கு என கோபப்பட்டான். அந்த அளவிற்கு கோபப்பட்டு அவனுடைய அடியாட்கள் பார்த்ததில்லை. எதிரியை கொல்வதாக இருந்தாலும் கூலாகத்தான் முடிச்சுடுனு சொல்லுவார்.

பிளான் செய்வதில் பதற்றம். இதுபோல விஷயம் புதிதாக இருந்தது. கொன்றுவிட்டு வருவதென்றால் பரவாஇல்லை. கொலை செய்து கிட்னியை எடுத்துக்கொண்டு வரவும் முடியாது. மருத்துவரை மிரட்டி செய்ய சொன்னாலும் அவனுடிய மகன் அப்படியெல்லாம் வாழ்வதற்கு இறந்தே போய்விடுவான் .

மகன் விசாரித்த சில மருத்தவமனைக்கு சென்று விபரங்களை சேகரித்தான். அவனுடைய blood group-ஐ சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால்தான்  கிடைக்கும் என்பதை புரிந்துக்கொண்டான். மருத்துவரை மிரட்டி தன் மகனின் blood group-இல் உடல் தானம் செய்தவர்கள் பட்டியலை வாங்கினான். மூன்று பேர் இருந்தார்கள். ஒரு பெண். கொலை செய்வது சுலபமாக இருந்தாலும், அனுதாபத்தில் பலர் கூடிவிடுவர். சிக்கலான விஷயம். அடுத்தது வயதானவர். அவருடைய கிட்னி எந்த அளவுக்கு வேலை செய்யும் என தெரியவில்லை. அடுத்தது கல்யாணம் ஆகாத இளைஞன். குடும்பத்தை விட்டு நகரத்திற்கு வந்து வேலை செய்யும் கல்யாணமாகாத இளைஞன். மூன்றில் நல்ல சாய்ஸ், இவன்தான்.

ஆள் தேர்வு முடிந்தது. accident போல இருக்கவேண்டும், மரணம் நேராத அளவிற்கு இருக்க வேண்டும். ஆனால் சில மணி நேரத்தில் மரணமடையவேண்டும். என முடிவெடுக்கப்பட்டது. பொருள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். கூட்டமாக போகவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நால்வர் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டனர். அந்த இளைஞன், இருசக்கர வாகனத்தில் வேலைக்கு போவது சாதகமாக இருந்தது. இருவர் car-ஐ மோதி தூக்குவது. மற்ற இரண்டு பேரும் வேறொரு car-ல் அங்கிருந்து மருத்துவமனைக்கு தூக்கிவருவது என்று.

பிளான்படி முடிக்காமல் தோல்வியுடன் திரும்பி வந்தனர். என்ன பன்றிங்கனே தெரியல?... உங்கள எல்லாம் .....? என் மகன் செத்துக்கிட்டு இருக்கான்... இல்லைங்கையா அவன் சாவுக்கு பயந்தவன் போல வண்டி ஓட்றான். close-அ போனோம் சுதாரிச்சுட்டான். உங்கள நம்ப முடியாது. சில நேர அமைதிக்கு பிறகு, நானே போறேன் என்றார். ஐயா வேணாங்கய்யா - பதற்றத்துடன் கூட்டமாக. எவ்வளவு பெரிய கொலை எல்லாம் பண்ணியிருக்கோம், இப்ப ஏதோ மிஸ்-ஆகிடுச்சு. உங்க பழைய கதை எல்லாம் வேண்டாம். இதுவரைக்கும் எப்படி பண்ணிங்கன்றது முக்கியமில்லை. உங்கள அனுப்பிட்டு திரும்ப இதே போல பதிலை கேட்க்க முடியாது. அதே ப்ளான்-தான் நான் தூக்கரேன் பின்னாடியே வந்து அள்ளிடுங்க.

அந்த இரவிலேயே இன்னொரு plan உருவானது. மகன் தானா செத்துடுவான், இவனுக்கு அப்புறம் நாம்ப பார்த்துக்கலாம்னு நெனைச்சா...? என மகனை கண்காணித்த பீட்டர் ஆரம்பிக்க. அவனோடு ஒத்துப்போன சிலரும் ஆமோதித்தனர். இப்பவும் ஒன்னும் இல்ல அப்பனோட ப்லான்லயே அவனையும் தூக்கிடலாம். இன்னும் சீக்கிரமா முடிஞ்சுடும். அந்த இளைஞனின் பின்னால் லாரியில் வந்து காரோடு தூக்கிடலாம் என முடிவெடுக்கப்பட்டது.

வளைவில் தயாராக இருந்தது car.  இளைஞன் வருவதை அறிந்து, காரை நாகேந்திரன் உருமச்செய்துக்கொண்டிருந்தான். குறிப்பிட்ட தூரத்தில் வந்ததும் கியரை போட்டு தூக்க, இளைஞன் லாரியின் horn சத்தம் கேட்டு ஒதுங்கி வழிவிட, சில வினாடிகளில் எல்லாம் நடந்து முடிந்தது. முதல் சதி தோல்வியடைந்தது. இரண்டாவது சதி ஓரளவிற்கு வெற்றிபெற்றது. இளைஞன் ஆபத்தின்றி தப்பியிருந்தான். நாகேந்திரனின் கவிழ்ந்த காரிலிருந்து இளைஞனை பார்த்துக்கொண்டிருந்தான். தோல்வியை எண்ணி தன்னை தானே நொந்துக்கொண்டு கீழே பார்த்ததில் காரின் ஒரு சிறு துண்டு அவன் அடி வயிற்றை கிழித்திருந்தது. ரத்தத்தை பார்த்துக்கொண்டே மயக்கத்திற்கு போனான்.

lorry நிற்காமல் சென்றுவிட்டது. நாகேந்திரனின் அடியாட்கள் அவனை காப்பாற்ற வருவதற்குள், அந்த இளைஞன், கார்-ஐ நெருங்கி மயங்கிய நாகேந்திரனை வெளியெடுத்து ஆட்டோவில் தூக்கிக்கொண்டு மருத்துவமனையை அடைந்தான். 

நீங்க யாருங்க என மருத்துவர் கேட்க்க, நான் முருகன் என அந்த இளைஞன் சொல்ல, இல்லைங்க, இவருக்கு என்ன வேண்டும் என மருத்துவர் கேட்க்க, நான் வழியில் வந்தேன், அடிப்பட்டுக்கிடந்தார் என சொல்லி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிட்டு, நான் ஆபீஸ் வேலையாக போக வேண்டிருக்கு, சாயங்காலம் வருகிறேன் என சொல்லி அங்கிருந்து முருகன் கிளம்பினான்.

நாகேந்திரனின் அடியாட்கள் அவனை தேடிவருவதர்க்குள் மதியமாகிவிட்டது. உயிருக்கு ஆபத்தில்லை, ஒரு கிட்னிதான் போய்விட்டது என மருத்துவர் சொல்ல, சிலரிடம் சோகம், சிலரிடம் சந்தோசம், சிலரிடம் இரண்டுக்கும் நடுவில் என அனைத்தும் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்தாலும், சோகத்தை மட்டும் வெளிக்காட்டிக்கொண்டு நின்றார்கள். நாகேந்திரனை பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை தொலைபேசிமூலம் அறிந்துக்கொண்ட முருகன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என அன்று சாயங்காலம் வரவில்லை.

பலரின் வற்புறுத்தலுக்காக பல நாட்கள் கடந்து, அப்பனை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பினான் ராஜேந்திரன். அதில் ஒரு அடியாள் accident-க்கான காரணத்தை சொல்லி இருந்தான். கோபம் தலைக்கேறி அப்பனை பார்க்க போனான்.

அப்பனை பார்த்தவுடன் மனம் ஏனோ சட்டென மாறிவிட்டது. கோபம் மறந்து கண் கலங்கிற்று. அப்பனுக்கு அவன் முன்னாள் இருக்க குற்ற உணர்ச்சி இருந்தாலும், பாசம் அவன் முன்னாள் கண் கலங்க செய்தது. ராஜேந்திரன் அழுகையை ஒளித்து கோபத்தை வெளிக்கொண்டுவந்தான். இதுவெல்லாம் புடிக்காம தானே உங்கள விட்டு வந்தேன். இப்படி எல்லாம் நான் உயிர் வாழ்வேன்னு நம்பரிங்களா? இதுக்கா நான் டயாலிசிஸ்-பண்ணி உயிரை பிடித்துவைக்கணும்? இதுபோலவெல்லாம் நடக்கவா? சேத்துப்போறேன். இல்லப்பா... சமாதானமாக நாகேந்திரன் பேச முயலும்போதே வெளியேறினான்.

மருத்துவமனையில் சேர்த்ததுக்கு அப்புறம் வெகு நாட்கள் கழித்து நாகேந்திரனை பார்க்க வந்த முருகன், மருத்துவரை பார்த்துவிட்டு நாகேந்திரனை பார்க்க வந்துக்கொண்டிருந்தான். முருகனை பார்த்ததும் அறைக்கு வெளியில் இருந்த அடியாட்கள் சிறிது பதுங்கினாலும், உடனே சுதாரித்துக்கொண்டு தெரியாத ஆளைப்போல நடந்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.  முருகன், வெளியே வந்துக்கொண்டிருந்த ராஜேந்திரனிடம், நீங்க தான் அவருடைய மகனா?  அமாம் என ராஜேந்திரன் தலையாட்ட, மருத்துவர் நீங்க வந்திருப்பதாக சொன்னார். உங்க அப்பா ஒரு கிட்னியை accident-இல் இழந்துவிட்டார் என்று சொன்னார். sorry sir. ராஜேந்திரன் - பரவா இல்ல sir. முருகன் - கொஞ்சம் பத்திரமா பார்த்துக்குங்க சார். பாவம் வயசானவர்.

ராஜேந்திரன் பின்னாலேயே சமாந்தனப்படுத்த வந்த நாகேந்திரன், முருகனை பார்த்து கதவோரம் லேசாக பதுங்கி நின்று கேட்டுக்கொண்டிருந்தான். முருகன் - உங்களுக்குள்ள பிரச்சனை, இப்பதான் பார்க்கவே வந்திங்கன்னு கேள்விப்பட்டேன். முடியாதவரு, பிரச்சனை எல்லாம் மறந்துட்டு கொஞ்சம் அவர பார்த்துக்குங்க. ராஜேந்திரன் - அவரப்பத்தி தெரிஞ்சா அப்படியெல்லாம் பேசமாட்டிங்க.  அவரப்பத்தி எத்தன வருசமா உங்களுக்கு தெரியும்? முருகன் - இல்லைங்க நான்தான் அவர மருத்துவமனையில சேர்த்தேன். நாகேந்திரனுக்கு லேசானஅடி விழுந்ததுபோல் இருந்தது.

ராஜேந்திரன் சட்டென, அவரப்பத்தி தெரிஞ்சிருந்தா காப்பாத்தி இருக்கமாட்டிங்க.  முருகன் - இல்லைங்க என்னதான் இருந்தாலும் ... முருகனை தொடரவிடாமல் ராஜேந்திரன், எனக்காக யாரையோ கொலை பண்ண போயிருக்கிறார், இதெல்லாம் பார்க்க சகிக்காம தான் எங்க அம்மா உலகத்தவிட்டே போய்ட்டாங்க. நானும் அவரைவிட்டு வந்தேன். இல்லைங்க, தழுதழுத்த குரலுடன் ... முருகன் கொலை என்ற வார்த்தையை கேட்டவுடன் பேசமுடியாமல் நின்றான். ராஜேந்திரன் தொடர்ந்தான் - எனக்கு கிட்னி failure-ங்க. என்னோட blood group கிட்னி எங்கயும் கிடைக்கல. நம்ம வயசுல யாரோ ஒருத்தன் உடல் தானம் பன்னவன கொன்னு என்ன காப்பத்தலாம்னு நெனைச்சு கொலைப் பண்ண போன இடத்துல இவருக்கு accident ஆகி இருக்கு. எனக்கு இப்பவெல்லாம் கடவுள் நம்பிக்கை இல்ல. கடவுள் இருந்திருந்தா இந்த accident-லயே , அவர கொன்னு இருப்பாரு.

நாகேந்திரனுக்கு மகனின் வார்த்தைகள் பலமாக தெரிந்தது. அவன்மீது இவ்வளவு வெறுப்பு இருக்கும் என்பது இப்போதுதான் உணரமுடிந்தது. மற்றொருபுறம் - முருகனால் ஊகிக்க முடிந்ததால், அவன் முகத்தில் ஏதேதோ உணர்ச்சிகள் மாறி மாறி வந்துக்கொண்டிருந்தது. ராஜேந்திரன், முருகன் குழன்புவதை பார்த்து, இப்போதாவது புரிந்திருப்பிர்கள் என நெனைக்கிறேன், என சொல்ல. சில நேர அமைதிக்கு பிறகு, முருகன், அவர் கொல்ல நினைத்தது நான்தான் என சொல்ல. மகனின் கோபம் அதிகமாகி, அப்பனிடம் அவனை அழைத்து செல்ல முயல, கதவோரம் நின்றிருந்த நாகேந்திரன் முதல் முறையாக குற்ற உணர்ச்சியில் குறுகி இவர்களை நோக்கி வார்த்தை வராவிட்டாலும், அவனது கால்கள் நகர்ந்து வந்துக்கொண்டிருந்தது.

ராஜேந்திரன், பாருங்க நீங்க கொல்ல நேனைச்சவன்தான் உங்களையே காப்பாத்தி இருக்கார். உங்களுக்கெல்லாம் ... அந்த அளவுக்கு திட்ட வார்த்தை இல்லாததால் நிறுத்திக்கொண்டான்.

முருகன் - பழச மறந்துடுங்க என ஒரு முடிவுக்கு வந்தவனை போல், எனக்கும் மூலையில ப்ளூட் clat ஆகி இருக்கு. சில மாதங்களில் நானே செத்துடுவேன். நான் இறந்து என் உறப்புகள் மூலம் பல பிறவி எடுக்கனும்னு நினைத்துக்கொண்டிருந்தேன். உயிருடன் இருக்கும்போதே தொடங்கிவிடுவதுதான் நல்லது என நெனைக்கிறேன். என்னுடைய ஒரு கிட்னியை தருகிறேன். நீங்க எடுத்துக்கோங்க.

மகன் வாயை திறப்பதற்குள், அப்பன் - வேண்டாயா, உன் கிட்னிய கொடுத்து என்னோட குற்ற உணர்வ அதிகமாக்கிடதிங்கய்யா. நானும் என் பையனோட blood குரூப்தான். என்னோட கிட்னியை கொடுத்துட்டு, நான் செத்து போறேன். 

இல்லங்கய்யா அப்படி எல்லாம் பேசக்கொடாது, என முருகன் சொல்ல. நாகேந்திரன், இல்லப்பா, நான் வாழ்ந்தேனா, பலருக்கு ஆபத்துதான், உங்கள போல நல்லவங்க இருந்தா பல பேர் உயிர் வாழ்வாங்க. முருகன் - இல்லைங்கையா எனக்கு நல்ல சாவு வந்துடுச்சுனா அது பல பேருக்கு உதவும். இதைப்போல கேட்ட சாவு வந்தா நானும் செத்து என்னுடைய உறுப்புகளும் செத்துட வாய்ப்பிருக்கிறது. நானும், உயிரோடு இருக்கும் போதே தானம் செஞ்சு, என்னால் ஒருவர் உயிரோடு வாழ்வதை பார்க்கற பாக்கியமும் கிடைக்கும்.

நாகேந்திரன் - இல்லப்பா நீ உயிரோடஇருக்கணும். நல்லவங்களுக்கெல்லாம் எதுவும் ஆகாது. என்னோட பாவத்துக்கு நான் பலன் அனுபவிச்சே ஆகனும். என்னோட ஒரு கிட்னியும் கொடுத்துட்டு இறந்திடறேன். முருகன் - இல்லைங்கையா, திருந்தனவன் நல்லவனைவிட நல்லவனாத்தான் இருப்பான். உங்க பாவத்துக்கு பரிகாரம் இறப்பு அல்ல. நீங்க நிறைய நல்லது செய்ய வேண்டி இருக்கு. நானும் உடனே சாக போறதில்ல. என்னோட வாழ்நாளுக்கு ஒரு கிட்னி போதும்....

சோகம், செண்டிமெண்ட், மகிழ்ச்சி  என கலந்து ஓடி, கடைசியில் மூவரும் ஆளுக்கொரு கிட்னியுடன் புதிய வாழ்க்கைக்குள் நுழைந்தனர்.

உடல் தானம் செய்யுங்கள். உங்கள் இறப்புக்கு பின் உங்கள் உறுப்புகளாவது வாழட்டும்.

புதன், 27 ஏப்ரல், 2011

LOKPAL

ஊழல் தடுப்பு சட்டம் (Lokpal Bill) அமலுக்கு வருவதற்குமுன், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது, அப்போது, தமிழக அரசியல்வாதியிடம் பேட்டி எடுப்பதுப்போல்  ஒரு கற்ப்பனை.

பத்திரிக்கையாளர்: ஐயா இருக்காருங்களா?
தொண்டன்: எதுக்கு? 
ப: பேட்டி எடுக்க வந்திருக்கேன்.
தொ: ஐயாகிட்ட முன்னாடியே அனுமதி வாங்கிருக்கியா?
ப: ஆமாம். ஐயாதான் வர சொன்னார்.
தொ: இல்ல, ஐயா ரொம்ப கோபமா இருக்காரு, அதான்.
எவனோ வட நாட்டு கெழவன் உண்ணாவிரதம் இருந்தானு, இவரு டென்ஷன்-ஆ இருக்காரு. செத்தா வயசாகி செத்தான்னு முடிக்கறதவிட்டுட்டு , கெழவன் சொல்றானு சட்டம் எழுதப்போராங்கலாம். நம்ம ஆளுங்க பிரதமரா இருந்திருந்தா இதெல்லாம் நடுக்குமா? பத்திரிக்கக்காரனாச்சே, உனக்குத்தான் தெரியும் இல்ல. என்ன அது?
ப: Lokpal bill-னு, corruption தடுப்பு சட்டம் paass பன்னச்சொல்லி  fasting இருந்தாரு.
தொ: என்ன எழவு bill-ஒ ? நானும் ஐயாக்கிட்ட கேட்டேன். நல்ல தடுப்பு சட்டமா இருந்தா, ஆதரிச்சு, நம்ப தலைவர் பெயர்லயே அந்த சட்டத்த போட்டுடலாம்னு. தலைவர் தண்டபாணி தடுப்புச்சட்டம். பெரும் நல்ல தமிழ் பேரா இருந்திருக்கும். 
சொன்ன உடனே தலைவர் அடிக்கவத்துட்டாரு.
தலைவர் வரார்னு நெனைக்கறேன். பாத்து கேள்வி கேளு. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.
ப: வணக்கம் ஐயா.
அரசியல்வாதி: ம்... எங்க ஆளு என்ன சொல்றான் (பத்திரிக்கைகாரனை பார்த்து).
அதிகமா பெசாதேனா கேட்க்கமாட்டேங்கறான்(chair ஐ. பார்த்து நடந்தபடி)
சரி.... ஆரம்பிப்போம் . (பத்திரிக்கைகாரனை பார்த்து) இந்த சட்டத்தைப்பத்தி பேச எல்லா அரசியல்வாதிகளும் பயப்படற நேரத்தில தைரியமா பேட்டி கொடுக்கிறேனா, என்ன பாராட்டனும்பா. (லேசாக தலையை  குனிந்தபடி)
ப: நிச்சயமா ஐயா. (உடனே ஆமோதித்தான்)
அ: சரி கேளு. (நேராக நிமிர்ந்து)
ப: இந்த ஊழல் தடுப்புச்சட்டம் பாராளுமன்றத்தில அறிமுகப்படுத்தி, வாக்கெடுப்பு நடக்கப்போகுது. நீங்க support பண்றிங்களா, ஐயா?
தொ(மனதுக்குள்): ஊழல் தடுப்பு சட்டமா? அதான் ஐயா இவ்வளவு கோபமா இருக்காரா?
அ: நானும் ஊழலை...
தொ: ஐயா ......? (பதற்றத்துடன்)
அ: டாய் (தொண்டனை அதட்டிவிட்டு), நானும் ஊழலைத்  தடுக்கவேண்டும் என்பதை ஆமோதிக்கிறேன். ஆனால் இதற்க்கென ஒரு சட்டம் தேவையா என்றால், அது தேவையற்ற ஒன்று.
தொ: அமாம்  தலைவா.
ப: இல்லங்கையா, இப்ப நிறைய ஊழல் செய்திகள் வந்துக்கிட்டு இருக்கு. அதை தடுக்க ஒரு கடுமையான சட்டம் கொண்டுவந்தாதான் நல்லா இருக்கும்னு மக்களும் நம்பறாங்க இப்ப.
அ: இதுல இரண்டு கேள்விங்க இருக்கு. ஒன்னு ஊழல் செய்திகள், இன்னொன்று மக்கள் அதை நம்ப ஆரம்பித்தது. எந்த ஒரு அரசியல்வாதியும் ஊழல் செய்வதற்காக அரசியலுக்கு வருவதில்லை. இத்தனை கேஸ்-கள் நடக்கிறதே, இதிலிருந்தே இதற்க்கான சட்டம் ஏற்க்கனவே இருக்கிறது என்பது தெரிய வேண்டாமா?

தொ: ஆமாங்கய்யா, தேவை இல்லாம சட்ட புத்தகத்தில இன்னொரு பக்கம் சேத்துக்குனுமா? 
அ: சும்மா இருடா. (தொண்டனை அமைதிப்படுத்திவிட்டு) இத்தனை வருடங்களாக case நடந்துக்கொண்டிருக்கிறதே ஏதாச்சும் நிரூபிக்க பட்டிருக்கிறதா?
தொ: அதற்குத்தான ஐயா இந்த சட்டம் கொண்டுவரணும்னு போராடறாங்க.
அ: நான் சொல்ல வருவது  என்னவென்றால், நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதிகூட தன்டிக்கப்படக்கூடாது.
தொ: யாரு தலைவா அது?
அ: டாய்.. சும்மா  இரு (கண்டிப்பான குரலில்). அதுவும் மக்களை காப்பாற்றும் எங்களுக்காக சட்டம் முழுகவனத்துடன் செயல்படவேண்டும். இது தன்னார்வத்தொண்டர்கள் அரசியல்வாதிகளின் வளர்ச்சியை பொறுக்காமல் எங்கள் மீது சுமத்தும் பழி. ஏழை மக்கள் சேவைக்காகவே வாழும் எங்களை மக்களிடமிருந்து பிரிக்கப்பார்க்கும் திட்டம். இதை மற்றவர்கள் நம்பினாலும், என் தமிழ் மக்கள் நம்பமாட்டார்கள். இப்போது உன்னுடைய கேள்வியின் இரண்டாவது பகுதிக்கும் பதில் வந்ததா?
தொ: கலக்கிட்டிங்க தலைவா.
ப: சில அரசியல்வாதிகளும் ஆதரிக்கிறார்களே, ஐயா?
அ: அதனுடைய பின்னணி தெரியாமல், சுய விளம்பரதிற்க்காக சிலர் ஆதரிக்கிறார்கள்.
தொ: ஆமாங்கய்யா, இந்த விசயத்தில் தமிழ்நாடு அரசியல் தொழிர்ச்சங்கம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இந்திய அரசியல் தொழிர்ச்சங்கத்திடமும் இதையே வலியுருத்த....
அ: டாய்.. சும்மா இருக்கமாட்ட... சூழ்நிலை தெரியாம பேசிக்கிட்டு.
ப: பிரதமர்கூட ஒத்துக்கொண்டவுடனே தானே இதனை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்?
அ: பிரதமர் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். பிரதமர் மட்டுமல்ல, அனைத்து மத்தியில் ஆளும்கட்சி உறப்பினர்களும்தான். இருந்தாலும், அதனை மறைமுகமாக தடுப்பதற்கான முயற்சிகளை அக்கட்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அரசியல் சார்ந்தவர்கள் இந்தியாவில் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள்? ஒரு சதவிகதத்திர்க்கும் குறைந்தவர்களா? அதனால்தான் இந்தக்  கூட்டத்தை எதிர்த்து தங்களுடைய கருத்தை நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக தடுக்க நினைக்கிறது.
தொ: ஆமாங்கய்யா. மைனாரிட்டி அரசியல் சமூகத்தின் மேல் சட்டத்தை திணிக்க பார்க்கிறார்கள்.
அ: டாய்  பத்திரிக்கைகாரங்க இருக்கும்போது பெசக்கூடாதுனு எத்தனைமுறை சொல்லியிருக்கேன்.
கடைசியாக தமிழ்நாட்டு மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது  இதுதான், மக்கள் மாக்களாக இருங்கள்.
தொ: ஐயா.......? (பதற்றத்துடன்)
அ: ச்சே.. மக்கள் மக்களாக இருங்கள். உங்களுக்கான அனைத்தையும் அரசு செய்யும். செய்துக்கொண்டுதான் நாங்கள் இருக்கிறோம். சமூக தொண்டர்கள் என்ற போர்வையில் இருந்துக்கொண்டு மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் இதுபோன்ற  செய்திகளை ஆதரிக்காதிர்கள்.
இப்போதுகூட நான் அறிமுகப்படுத்திய கொசுவத்தி திட்டத்தில், ஒரு கோடியே இருபது லட்சத்து நாற்பத்தி ரெண்டாயிரத்து இருநூற்றி எல்ம்பத்தி ரெண்டு பேர் பலனடைந்திருக்கிறார்கள்.
தொ: ஐயா ஆறு பேர் அதிகமா சொல்லிட்டிங்க.
அ: மக்கள் நலனுக்காக, பல கணக்கு போடுகிறேனா, கொஞ்சம் தப்பாயிடுச்சு. என் கூடவே பேசற இடத்துக்கெல்லாம் வரானா? அதான் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான்.
ப: (மனதுக்குள்) உங்க துணைவியார் குடும்பத்தையும் சேர்த்து சொல்லி இருப்பிங்க.
அ: ஏழை மக்களுக்கான திட்டத்தை தடுக்க நினைப்பவர்கள், அதில்கூட ஊழல் நடந்ததாகத்தான் கூறுகிறார்கள். மக்கள் பணி தொடர, மக்களிடம் தடையின்றி போய்சேர இதுபோன்ற சட்டங்கள் வருவதை தடுக்கவேண்டும்.
ப: ஆமாம், சாக்கடைய சுத்தம்பன்னாதிங்க, கொசுவத்தி கொடுங்க. (மனதுக்குள்)
 அ: அவ்வளவுதாம்ப்பா. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நீ கெளம்பு, பிறகு பாக்கலாம்.


தொ:ஐயா இப்பத்தான் உங்க கோபத்தை எல்லாம் கொட்டிட்டிங்கலே. காலையிலிருந்தே சாப்படல, சாப்பட வாங்க ஐயா.
அ: போடா, பசிக்கல.
தொ: கொஞ்சமாச்சி சாப்புடுங்கயா.
அ: போடா, போய் அவர அனுப்பிவச்சுட்டு வா.
தொ: வாப்பா. என்னப்பா நீ? அவருகிட்ட போய் சட்டத்தப்பத்தி கேட்டுக்கிட்டுருக்க. சட்டத்தை பத்தி அவருக்கும் தெரியாது, அதப்பத்தி கவலைப்படவும் மாட்டாரு. எதாச்சு திட்டத்தப்பத்தி கேட்டிங்கனா நல்லா சொல்லியிருப்பாரு. (வாசலை நோக்கி நடந்துக்கொண்டே)
ஒரு நாள், ஒரு கிராமத்த பார்க்க போகும்போது, ஒருத்தன் அவன் பையன்கிட்ட இருந்து சத்துணவு முட்டைய வாங்கி சாப்பிடறத பார்த்துட்டார். உடனே ரேசன் கடையிலேயும் முட்டைய போடலாமேன்னு சொன்னார்.
ப: ஆமாம் அவரு முட்ட போடலாம். (அமோதிப்பதுபோல்). ஜெயில்லே இருக்கரவனுக்கே சிக்கன் போடறோம், வெளியிலேருக்கரவங்களுக்கு முட்டையாவது போடனும்.
தொ: அதவிடு, ஒரு நாள் பிச்சைகாரன் ரோட்ல கஷ்டப்பட்டு தூங்கரத பார்த்துட்டு, ஏன், உடனே ஒவ்வொரு முக்கியமான நகரத்தின் சந்திப்பிலும் தலையனையுடன்கூடிய தரைவிரிப்பு போடக்கூடாதுன்னு? கேட்டாரு.
ப: ஏன் வேற எதாச்சும்  கொடுக்கலாம்னு சொல்லலியா? (அலுப்புடன்)

தொ: (உடனே)  ம்ம்.... அவங்களுக்கும் ஓட்டு உரிமை கொடுக்கலாம்னு சொன்னார்.  
ப: ஹ்ம்ம். உங்க தலைவர் போல யாரும் யோசிக்கமுடியாது. (பெருமிதமாக சொல்வது போல்)
(பிறகு மனதுக்குள் அலுப்புடன்) ஏன் அவங்களுக்கும் ரேசன் கார்டு கொடுத்து, மக்களோடு சேர்ந்து இலவச பொருட்களை வாங்கிக்கொள்ள சொல்லலாம் இல்லையா?
தொ: இதப்போலத்தான் என்ன என்ன மக்கள் நலத்திட்டங்கள் கொண்டுவரலாம்னு யோசிச்சிக்கிட்டே இருப்பார். இந்த திட்டத்தை எல்லாம் வெளிய சொல்லிடாதிங்க. ஏற்கனவே இலவச கொசுவத்தி திட்டத்தை சொன்னதும், எதிர்கட்சிக்காரங்க இலவச allout தரோம்னு copy அடிச்சி சொன்னாங்க. தலைவர் சொல்றவரைக்கும் பொருத்திருங்க.
ப: (மனதுக்குள் எரிச்சலுடன்) இத நான்வேற வெளிய சொல்றேன்.
தொ: சரி போய் ஒழுங்கா எழுதுங்க. உங்க பத்திரிக்கை ஆபீஸ் நல்லதுக்குத்தான் சொல்றேன்.
அ: டேய். இவ்வளவு நேரமா? (உள்ளிருந்து குரல் வர)
தொ:
தோ, வந்துட்டேங்கய்யா. சரி நீ கேளம்புப்பா. சொன்னது ஞாபகம் இருக்கட்டும்.
வாங்கய்யா இப்பவாவது சாப்படலாம்.
அ: நீ போய் சாப்புடுடா. எனக்கு பசிக்கல.
தோ:
இப்படி சாப்படாம இருப்பிங்கனு முதல்லயே தெரிஞ்சிருந்தா, எதுக்காகவாவது உன்னாவிரதமாச்சு இருந்திருக்க்கலம். (என முனுமுனுத்துக்கொண்டே நகர்ந்தான்.)
அ: அந்த கொசு வத்தி company காரங்க வந்திருந்தா அனுப்பிவச்சுட்டு போ?
தோ:
இன்னும் வரலிங்கய்யா. அதுக்குத்தாங்கய்யா, என்பெர்லயே பினாமியில ஒரு company ஆரம்பிச்சு நமக்கே contract கொடுத்திருக்கலாம்னு சொன்னேன்.  தேவை இல்லாம மூணாவது மனுசன எல்லாம் உள்ள கொண்டுவந்து...
அ: எல்லாம் எனக்கு தெரியும். போ. அப்புறம் பாக்கலாம்.

வியாழன், 17 மார்ச், 2011

இலவசம்

இலவசம், தமிழக அரசியலில் புழங்கிக்கொண்டு இருக்கும் வசீகரமான வார்த்தை. இந்த பதிப்பின் நோக்கம், இந்த இலவசத்தால் அரசியல்வாதிகளின் உண்மையான நோக்கம்தான் என்ன? எந்த அளவுக்கு இந்த சலுகை மக்களை போய்ச் சேர்கிறது. இதனால் பயனடைவது மக்களா / அரசியல்வாதியா / அவரை சார்ந்தவர்களா என்பது அல்ல. அதனுடைய பலன் ஒரு ஏழையின் முன்னேற்றதிர்க்காவாவது போய்ச் சேர்ந்தாலும் சந்தோசம்தான்.

நான் பார்த்த சில அனுபவத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

என் பக்கத்து வீட்டு அண்ணன் சென்னைக்கு சித்தால் வேலைக்கு சென்று, சம்பாதித்து, முதல் கட்டமாக தன்னுடைய கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றினார். மனைவி, குழந்தைகளை விட்டு, கொசு கடியில் ரோட்டோரம் டென்ட் போட்டு வாழ்ந்து, கொளுத்தும் வாயிலில் வேலை செஞ்சு சம்பாதித்து கட்டிய வீடு. அதனை முழுமையாக அனுபவிக்கும் முன், இலவச வீடு திட்டம் வந்தது. தான் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பார் என எண்ணியவருக்கு ஏமாற்றமாக போனது. 

கூரை வீட்டை மாற்ற உழைத்தவன் ஓட்டு வீட்டில் இருக்கிறான். மற்றவர்கள் மெத்தை வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.  உழைத்து கட்டிய வீட்டில் இருக்கிறோம் என திருப்த்தி இருந்தாலும், அன்புள்ள முதல்வருக்கு, அழகான வீட்டுக்கு ... என இலவச டிவியில் அடிக்கடி பார்க்க நேரும்போது மனம் லேசாக கனக்கத்தான் செய்கிறது அவருக்கு. சிறிது பொறுத்திருந்தால் இலவச வீடும் கிடைத்து இருக்கும் என. (ஓட்டு வீட்டுக்கு இலவச வீட்டு திட்டம் கிடையாது.) சம்பாதித்த பணத்தை வேறு எதுக்காவது உபயோகித்திருக்கலாம். என்ன செய்வது உணவுக்கு அப்புறம் உடைக்கு சொல்லும்படியாக செலவு செய்யாவிட்டாலும் உறவிடம்தான் அடுத்து உள்ளது.

இதை போல்தான், கஷ்டப்பட்டு கால்காணி நிலம் வாங்கியவன் இலவசமாக 2 ஏக்கர் நிலம் வங்கியவனை எட்டிப்புடிக்க முடியாமல் இருக்கிறான். கஷ்டப்பட்டு விவசாய கடனை அடைத்தவன், கடன் தள்ளுபடி ஆனவனின் ஏலனத்திர்க்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறான்.

அரசு ஒரு பக்கம் எப்படி எல்லாம் இலவசம் தரலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறது. சம்பாதிக்க ஆரோக்யமான போட்டிப்போட்ட மக்களும், இப்போது இலவசங்களைப் பெற தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறார்கள். கால் ஊனமாக இருப்பவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றால் நொண்டி நடக்கத்தான் செய்கிறார்கள். கடைசி ஏழை இருக்கும் வரைக்கும் இலவசங்கள் தொடரும் என்பது நல்ல விசயம்தான். ஆனால் கடைசி இலவசம் இருக்கும் வரை ஏழை ஏழையாகத்தான் இருக்க விரும்புவான் என்பது யோசிக்கவேண்டிய விஷயம்.

இந்த காலத்தில் தரமான வாழ்க்கை வாழ அதிகமாக பணம் தேவைப்படுவதால், மக்கள் இல்லவசமாக எது வந்தாலும் வாங்கத்தான் செய்கிறார்கள். இலவசத்திர்க்கும் உணமையான விலைக்கும் வித்தியாசமும் எட்டிபிடிக்கும் அளவிற்க்கு இல்லை. இலங்கை தமிழர்கள் படுகொலையை தடுக்காமல், வாழ்க்கையை, உறவை இழந்த இலங்கை தமிழர்களுக்கு உதவியது போல விலைவாசி உயர்வை கட்டுபடுத்தாமல், விவசாயின் உற்பத்தி பொருளுக்கு சரியான விலையை நிர்ணயிக்காமல் இலவசம் வழங்கிக்கொண்டு இருக்கிறது அரசு.

கவர்ச்சியான திட்டங்கள், வாக்கு வங்கியை நோக்கி சலுகைகள், ... என அரசின் திட்டங்கள் லாட்டரி சீட போல இருக்கிறது. லாட்டரியை கூட தடை செய்துவிட்டார்கள். படிக்காதவனுக்கு தரமான படிப்பும், படித்தவனுக்கு வேலையும் இலவசமாக கிடைத்தால் போதும். அவரவர் தேவையை அவரவர் பார்த்துக்கொள்வார்கள். 

ஊனமுற்றவர்களுக்கு கூட இட ஒதுக்கீடும், சலுகைகளும்தான் இருந்துக்கொண்டு இருந்தது. ஏழைகளுக்காகத்தான் இலவசங்கள் வர ஆரம்பித்தது. உணமுற்றவர்களையும் உழைக்க வழி வகை செய்த அரசெல்லாம் மாற்றி, இலவசம் கொடுத்து ஏழைகளை ... மாற்றிக்கொண்டு இருக்கிறது.

இலவசம் வாங்கும் அளவிற்க்கு நாமும் ஒன்றும் கேவலமாக மாறிவிடவில்லை. இருப்பவர்களின் வரிப்  பணம், இல்லாதவருக்கு உதவியாக போவதை யாரும் மறுக்கமாட்டார்கள். நானும் பலரின் வரிப்பணத்தில் படித்தவன்தான் (Goverment aided school). நான் படித்த ஆரம்பப்  பள்ளியில் நான் இருந்தபோது இருந்த அளவிற்க்கு இப்போது ஆசிரியர்கள் இல்லை. அனால் அப்போது இருந்ததைவிட நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள். ஆசிரயர் பயிற்சி முடித்து பலர் இலவசம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அது இலவசமாக இல்லாமல் சம்பளமாக கிடைத்தால், மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும்.

அரசு செய்வதற்கு நிறைய உள்ளது. எல்லாம் அரசு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது என வாதிடுவார்கள். எவனையாவது நிறுத்தி, அரசிடம் இருந்து என்ன எதிர்ப்பார்க்கிறாய் என கேட்டுப்பாருங்கள். இலவசத்தை தவிர எத்தனை பட்டியலிடுகிறான் என்று. அதில் முக்கால்வாசி இந்த சமூகத்தின் தேவையாகத்தான் இருக்கும்.

அதிகமாக சம்பாதிப்பனவன் கூட, ஒரு ரூபாய் பிச்சைப் போட்டால் உண்மையாகவே முடியாயதவனா என ஒரு நொடி  யோசித்துவிட்டுப் போடுகிறான்.  மக்களின்  வரிப்பணத்தை எடுத்து சிலரின் அரசியல் நோக்கத்திற்க்காகவும், சுய விளம்பரத்திர்க்காகவும் வீணடிக்கப்படக்கூடாது. சொந்த பணத்தில் அன்னதானம் போடுபவன்கூட விளம்பரம் இல்லாமல் போடுகிறான். அரசின் பணத்தை வீணடிப்பவன் எல்லா வகையிலும் விளம்பரப்படுத்திக்கொள்கிறான்.

தரமான  திட்டங்கள் வராமல் இதுப்போல திட்டங்களே பெருகிக்கொண்டிருந்தால் ஒரு நாள் அரசியல்வாதியின் சுய விள்ளம்பரத்திர்க்காக, இலவசத்தாலியில் கூட முதல்வரின் முகத்தை  அச்சடித்து கொடுத்தாலும் கொடுப்பார்கள். நாமும் இல்லவசமாக வருவதை ஏன் விட வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வந்தாலும் வரும்.

இன்னும் சிலர்அரிசி கொடுத்தார்கள். குழம்புக்கு? டிவி கொடுத்தார்கள். cable connection? தாலி கொடுக்கிறார்கள். பெண்ணுக்கு? என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் கொடுத்தாலும் சாப்பாட்டுக்கு போரியல், டிவியில் sports, movie channel, ........ என கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

மக்களின் பேராதரவுடன் அரசியல் சாக்கடையில் வளரும் இலவச கிருமியை மக்களிடம் விழுப்புணர்வில்லாமல், அரசியல்வாதிகளிடம் தொலை நோக்குப் பார்வை இல்லாமல் தடுக்க முடியாது.