சனி, 21 ஜூலை, 2007

சின்ன முதலாளி

[When I was working in chennai (in the time of 2007), I got the chance to watch from the starting to completion of the independent house construction and its house warming ceremony (which was near by my room). One of the family stayed construction place itself and worked till the end - as a watchman cum house constructor ("Sitthal"). I like to share their son experience here]

அவன் பள்ளி விடுமுறைக்கு அவன் பெற்றோர்களிடம் வந்து இருந்தான். அவனுடைய ஆறு வருச வாழ்க்கையில் அவன் பால் மறக்க கூட பெற்றோரை இந்த அளவுக்கு பிரிந்தது இல்லை. ஒரு மாதம் தன் பாட்டியுடன் இருந்த அவனுக்கு தன் பெற்றோர்களிடம் வந்ததும், அவனுக்கு தனி கவனிப்பு இருந்ததில் ஆச்சர்யம் இல்லை.

பல சலுகைக்கு இடையில் அவனால் சில நாட்க்கள் மட்டுமே சந்தோசமாக இருக்க முடிந்தது. அவன் பெற்றோர்களும் முழு நேர வீடு கட்டும் பணியில் இறங்கிவிடுவர். அவனுக்கு விளயாடுவதர்க்கு துணை இல்லாமல் சலிப்பு ஏற்பட்டது. மகனின் மனதை நன்கு அறிந்த அப்பா, அவனுக்கு சில விளையட்டு பொருட்க்கள் வாங்கி தந்தார். அவனும் அங்கு கைக்கு அடக்கமாக உள்ள பொருட்களை எல்லாம் விளையாட்டு பொருளாக மாற்றிக் கொண்டு இருந்தான். தனிமையில் விளயாடவும் பழகிக்கொண்டான். அவன் தாய்க்கு அதை மேற்பார்வை இடுவது ஒரு கூடுதல் வேலை ஆனது. ராட்சச மிருகங்கள் நிறைந்த hollywood படங்களின் படபிடிப்புக்கு இணையாக அவன் தனிமை விளையட்டு இருக்கும்.

புது வீட்டின் மாடியில் ஏறுவது என்றால் அவனுக்கு பயம். படிக்கட்டுகள் கைப்பிடி இல்லாமல் இருக்கும். வீட்டிலும் மிரட்டியே வைத்திருந்தனர்.எப்போதாவது அவனுடைய அப்பா அவனை மேலே அழைத்து செல்வார். அவரும் அவனை மேலே அழைத்து செல்ல கொஞ்சம் யோசிப்பார். அவனுடைய பாதுகாப்பை அவரால் சுலபமாக பார்த்துக்கொள்ள முடியும், ஆனால் அவனுடைய கேள்விகலுக்கு பதில் அவ்வளவு சுலபமாக சொல்ல முடியவில்லை. மாடியில் இருந்து பார்ப்பதால் அவன் கண்னுக்கு கேள்வி கேட்பதர்க்கு நிறயவே தெரிந்தது. நிமிர்ந்தே பார்த்துக்கொண்டு இருந்த அவனுக்கு, மாடியில் இருந்து குனிந்து கீழே உள்ளவர்களை பார்க்கும் போது மனதளவிலும் உயர்ந்தவணக்க சந்தோசபடுவான்.

ஒரு நாள், அவனுடைய கேள்விகளில் ஒன்றாக, வீட்டுக்கு முன்னால் காலியக விடப்பட்ட இடத்தை பற்றி கேட்டான். அவனுடைய அப்பாவும் அது கார் நிருத்துவதற்க்கு விடப்பட்ட இடம் என்பதை விளக்கினார். உடனே அங்கு நிருத்திவைக்க கார் வேண்டும் என அடம்பிடித்து, ஒரு சிறிய காரை வாங்கினான். அதுவும் பெரிதானவுடன் பெரிய கார் தர வேண்டும் என்ற சிறிய கட்டளையுடன் ஏற்றுக்கொண்டான். அதற்க்கு பின் அங்கு வேலை பார்ப்பவர்கள் அங்கு சைக்கிள் விடுவதே பெரிய விசயமாக ஆகிவிட்டது. அங்கு வேலை செய்பவர்கள் அவனை சின்ன முதலாளி என்றே செல்லமாக அழைப்பார்கள். சில நேரங்களில் தன் அப்பா யாரையாவது வேலை வாங்கும்போது இவனும் பெயர் சொல்லி அதட்டுவான். அவன் அப்பா மிரட்டினாலும், வேலைக்காறார்களின் ஆதரவு இவனுக்கு இருக்கும்.

பல நேரங்களில் அவன் தந்தையின் முதலாளி வருவார். கட்டட வேலைகளை மேற்பார்வை பார்த்துவிட்டு 'வாட்ச்மேன் நான் Engineerஐ பார்த்து சொல்லிவிட்டு போகிறேன். ஏதாச்சு problem இருந்தா சொல்லுப்பா' என்று கேட்டுவிட்டு சென்று விடுவார். அவர் சென்ற பின், கட்டிட வேலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும்.

இவன் விருப்பத்திற்க்கு ஏற்ப்ப, அறைகளின் உபயோகத்தை மாற்றி அமைத்துக்கொண்டான். ஹால், விளயாட்டு அரங்கம் ஆனது. - அவன் தத்ரூப விளயாட்டு அரங்கேரும் இடம். கார் ரேஸ் மட்டும் கார் பார்க்கிங்கிள் நடக்கும். பாத் ரூமும் ஸ்டோரூமும், பதுங்கும் இடமானது. - அவன் தந்தைக்கு தெரிந்தும் கண்டுபிடிக்க முடியாத இடம். படுக்கை அறை உணவு அறை ஆனது. - அவனால் தட்டும் தரையும் சம உரிமை பெறும் இடம்.

ஒரு நாள் அவன் உணவு அறையில் வேலை நடந்து கொண்டு இருந்ததால் வெளியில் சாப்பிட பணித்தனர். அவனிடமிருந்து மறுப்பே திரும்பி வந்தது. அறையின் ஒரு ஓரம் வேலை நிறுத்தப்பட்டு உணவு ஊட்டப்பட்டது. அந்த நேரம் அவன் தந்தையின் முதலாளி உட்பட அனைவருக்கும் அவன் மேல் சிறிது எரிச்சலே வந்தது.

கார் பார்கிங்கில் அவன் தந்தையின் முதலாளியின் கார் விட்டு சரிபார்த்த போது, அவன் தந்தையுடன் பெரிய யுத்தமே நடத்தி தோற்றுப் போனான். எளிதில் வெல்பவனுக்கு தோற்றதன் காரணம் புரியவில்லை.

வீடு குடிபோகும் நாளும் வந்தது. அனைவரும் அவன் தந்தையின் முதலாளிக்கு தெரிந்த்தவர்களாகவே இருந்தனர். இவன் குடும்பத்திற்க்கே வீட்டினுல் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. முதலாளி, அவர் குடும்பத்திற்க்கு சஸ்பன்சை உடைத்து புது வீட்டை அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தார். அவர்கள் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்தனர். இவன் ஆக்ரோஷமும் அழுகையுமாக பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் வீட்டை முதலாளி குடும்பத்தினர் ஆக்கரமித்துக்கொண்டார்கள் என்று. அவன் தந்தை அவனை கண்டிக்க ஆரம்பித்தார். முதலாளி வெளியில் வந்து அவன் தந்தையை பாராட்டிவிட்டு, புது துணிகலும் பணமும் கொடுத்துவிட்டு 'பையன் ஏன் அழரான்னு' கேட்டுக்கொண்டே, பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டார்.

இவர்களுக்கு உணவும் வெளியிலேயெ கொடுக்கப்பட்டது. உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற இவனுக்கு எதிராக, உணவு தினிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவன் அழுகையை நிறுத்த எடுத்த முயர்ச்சிகள் அனைத்தும் வீணாகிக் கொண்டு இருந்தது. அவன் தந்தை, இவனை வீட்டுக்குள் அழைத்துசென்ரால் கொஞ்சம் சமாதானம் ஆவான் என எண்ணினார். அவருக்கு தோன்றிய ஒரு வழி, அவனை கழிவறைக்கு அழைத்து செல்ல அனுமதி கெட்க்கலாம் என்பது.அதிலும் சிரியவர்கலுக்கான சலுகை அவனுக்கு எதிராக நின்றது. முதலாளி 'பெரிய ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்க, சின்ன பையந்தானே தெருவோரமாக போகட்டும்' என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
சிறுவன், முதலாளி பதவி பறிக்கப்பட்டு தெருவில் விடப்பட்டதை போல் உடைந்து போனான்.

கோடையில் மழை இல்லாததால், நகரத்துக்கு வேலைக்கு வந்த அவன் தந்தை, அடுத்த கோடையில் மழை வரும் என்ற நம்பிக்கையும், மகன் பக்குவம் அடைந்துவிடுவான் என்ற நம்பிக்கையும் இல்லாமல், யோசனையில் குடும்பத்தோடு ஊர் திரும்பினார்.


[Kindly forgive me for spelling mistakes. Due to tool I used for composing this and time, I couldn’t avoid spelling mistakes]

சனி, 30 ஜூன், 2007

கடைசியில் ஒரு திருத்தம்

கடைசியில் ஒரு திருத்தம்
மண் ஆசை. விபரம் தெரிய ஆரம்பித்ததும் பொதுவாக அனைவருக்கும் வரும் ஒன்று. அதற்க்கு முன்னும் பலருக்கு தோன்றும், அதை அடைவதர்கான முழு தகுதி இல்லாமலேயே. அது வசதி படைத்தவர்கலுக்கு பெரிய விசயமாக இருப்பதில்லை. சிலர் நிலத்தை வாங்கி, பின்பு கை மற்றிவிடுவதை பொழுது போக்காகவே செய்தனர். தன் சொந்த்த உழைப்பில் ஒன்றாவது ஈட்டவென்டும் என்ற குறிக்கொல் எனக்கும் இருந்தது. ஆனால் எந்த வயதில் என் மனதில் உதயமானது என்பது என்னால் கணிக்க முடியவில்லை.

சிலவற்றை பார்க்கும் போது இது கிடைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். ஆனால் கண்ணில் படும் அனைத்து விற்பணை இடங்களையும் அடையும் எண்ணம் என் மனதில் இறுந்தது. முதலில் நானும் சில வறைமுரைகள் வைத்திருந்தேன். பின்பு நானும் தளர்த்திக்கொண்டேன். இப்பொது ஏரக்குரைய எந்த வரைமுரையும் இல்லாமலே பொய் விட்டது.

எனக்கென சில கட்டுபாடுகலும் வைத்திருந்தேன். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடையது தவிர மற்றதின் மேல் கவனம் செலுத்துவது என்று. இதை மட்டுமே என்னால் இன்று வரை கடை பிடிக்க முடிந்தது..

முதலில் என்னை ஆசை அற்றவன் போல் காட்டிக்கொண்டு இருந்தேன். அதர்க்கான முழு காரணம் நானும் என்னுடைய சூழ்நிலையும். தேவை அற்ற முயர்ச்சி என்று நினைத்துக்கொண்டு அதில் இருந்து தள்ளியே இருந்தேன். ஒரு கட்டத்தில் அது என்னில் இருந்து வெளிப்பட்டு என்னை காட்டி கொடுத்தது. இந்த திடீர் மாற்றத்துக்கான காரணங்கலை தேட அரம்பித்தேன். இது எனக்கான ஆராச்சி அல்ல, அடுத்தவர் கேட்பதர்க்கு சொல்வதர்க்கான பதில்.

எப்படி ஆரம்பிப்பது என யொசித்ததில், நகரத்தில் தேடுவது என் தகுதிக்கு அப்பாற்பட்டது என்பது எனக்கே தெரிந்த ஒன்று. அதனால் கிராமத்து பக்கம் என் கவனம் திரும்பியது அதுவும் எனக்கு பரிட்சயமான எங்கல் ஊரிலேயே.ஏதாவது ஒன்றின் மீது கவனம் செலுத்தி அதனை பெருவது என, என் குறிக்கோலை நேர் படுத்தினேன். அப்பொது ஒரு பேருந்து பயணத்தில் என் பார்வையில் பட்டது ஒரு பயிர் இடுவதர்க்கு தயராக இருந்த அந்த நிலம்.

அதன் மீது எனக்கு ஈர்ப்பு வந்ததன் காரணம், என் தேடலின் ஆரம்பத்தில் பார்த்த ஒன்று என்பது மட்டுமே. பின் அதனை பற்றி விசாரிக்க அரம்பித்ததில் அது என் நண்பனுடையது என்று தெரிய வந்தது. என் சுய கட்டுப்பாட்டில் இப்படி ஒரு சருக்கல் ஏர்ப்பட்டது. இதில் என் ஆசை கட்டுப்பாட்டை ஏர்க்க மருத்தது. எனவே முன்பு போல் முடிவை முதலில் எடுத்துவிட்டு, ஏன் இந்த முடிவு எடுத்தேன் என்று சொல்ல காரணங்களை பிறகு சேகரிக்க ஆரம்பித்தேன். அதில் எளிதாக கிடைக்க கூடிய ஒரு காரணம் முதலில் கண் முன் தோன்றியது. இது இப்ப எல்லாம் சகஜம்- தடம் மாற்றத்தின் முதல் படி.

என் விருப்பத்தை சிலரிடம் பகிர்ந்து கொள்ள அரம்பித்தேன். பலர் இந்த ஊருல எதுக்குப்பா நகரத்துல பார்க்கலாம் என்றனர். எனக்கொ இங்கு கிடைப்பதே பெரிய விசயமாக இருக்கிறது, எங்க அங்க எலலாம் போயிட்டு.. என தொன்றியது. சில கைமற்றுக்காரர்கள் அவர்கள் வழிக்கு என்னை அழைத்தனர். என் விருப்பத்தை சிலர் எதிர்க்கவில்லை, அதுவும் எனக்காக. நான் என் முடிவில் இருந்து பின்வாங்குவது இல்லை என இருந்தென்.

இதில் நிலத்து காரர்கலுக்கே இதில் விருப்பம் இல்லை என்பது மறுபுரம். அதனை பெற வெண்டும் என்ற என்னுடைய நோக்கத்தால் சில இன்னல்கலை நானாகவே ஏற்றுக்கொண்டேன். இருந்தும் கிருக்கனாக பல நாட்க்கள் அதர்க்காக அலைந்து ஒரு கட்டதில் அதிலுருந்து முழுவதுமாக விடுபட்டென். பின் என் கொள்கைகளை மாற்றி அமைத்துக்கொண்டேன். வறைமுறை இன்றி பல இடங்கலை பார்க்க ஆரம்பித்தேன். அதில் விர்பனைக்கு வர முடியாத சில விலை நிலங்கலும் அடங்கும். பார்த்துவிட்டு அதனை எப்படி பயன்படுத்தலாம் என கர்பனை கனவு கான்பதொடு என் தெடல் முடிந்துவிடும். எதையும் வாங்குவதர்கான அடுத்த முயரற்ச்சியை என்னால் எடுக்க முடியவில்லை. அதற்காக பலரிடம் ஆலோசனை கேட்டதும் உண்டு.

அடுத்த கட்டமாக மின் வலையில் தேடுவதென்று முடிவெடுத்தேன். உண்மையில் மின் வலை ஒரு சுரங்கம். அதில் அனைத்தும் பாகுபாடின்றி கொட்டிக் கிடந்தது. நண்பர்களுக்கு தெரியாமல் மாற்று பெயருடன் தெடுதலை ஆரம்பித்தென்.
அதில் புகைபடத்துடன்கூடிய விளம்பரங்கலும் இருந்தது. அந்த விளம்பரங்கலை பார்த்துவிட்டு அதர்க்கான தகுதியும் இல்லாமல், சினிமா பார்க்க முடியாதவன் ட்ரைலர் பர்த்துவிட்டு திருப்தி அடைவதை போல என்னையும் சமாதான படுத்திக்கொண்டேன்.

இந்த இயந்திர வாழ்க்கையில் தனிமையில் கனவுகான ஒரு சிறந்த இடம் குளியலறை. என் ரூமில் குளியலறையும் கழிவரையும் ஒண்ராக இருந்ததால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. சில நேரங்களில் என் நண்பர்கள் கதவை தட்டும் பொது, அவர்கல் அவசரம் தேரிந்தும் எரிச்சலாக இருக்கும்.என் குளியலறை கண்ணாடி பல நேரங்கலில் 'இவனுக்கு வேறு எண்ணமே தோன்ரதா' என திட்டுவது பொல் தோன்றும். சில நேரங்கலில் 'இவன் ஆசை நிறைவேரக்கூடாதா' என எனக்காக
பரிதாபப்படுவதுபோல் தோன்றும்.

பேருந்து பயணங்களில் சில அத்து மீரிய ஆக்கரமிப்புக்களை பார்க்க நேரிடும். அதில் சில யாராலும் கண்டுகொள்ள படாமல் விட்டுவிடப்படும். இதனை கைதேர்ந்தவர்கலால் மட்டுமே அறிந்துகொண்டு செய்ய முடியும். சில அவமானத்தில் முடியும். அந்த பயத்தினால் அந்த கேவலமான விசயத்தையும் செய்வதில்லை.

கலைங்ஞரின் நிலமற்ற விவசாயிகலுக்கு இரன்டு ஏக்கர் நிலம் என்ற சட்டத்தை கேட்ட போது, நம்மை பொன்றவர்க்கு ஒன்று என்றாவது ஒரு சட்டம் வரகூடாதா என தோன்றியது. நம் பெற்றோர்கள் எப்படியும் நம்மை கை விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே கடைசியில் எனக்கு ஆறுதல் அளித்தது.

இது
உண்மையில் என் மண் ஆசை அல்ல. ......

-ஸ்ரீதரன்.