சனி, 23 அக்டோபர், 2010

குளியல்

FYI: இது என்னுடைய வாழ்க்கையின் பதிவே தவிர மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இதில் ஒன்றும் இல்லை. மாற்றங்கள் நிறைந்த என் வாழ்வில் என்னுடைய தினசரி குளியல்  முறையிலும்  மாற்றம் இருந்தது. அதை ஒரு பதிவாக இங்கு செய்துள்ளேன்.

என் தாத்தாவிர்க்கு ரெண்டு ஆண் வாரிசு என்பதால், எங்கள் வீட்டின் அமைப்பு - நீளமான ஓட்டு வீட்டை நடுவில் ஒரு பாதை போட்டு இரண்டாக பிரித்து வைத்திருப்பார்கள். பின்னால் கொஞ்சம் தாழ்வாரம் விட்டு மதில் சுவர் வைத்து முடித்திருப்பார்கள். இந்த தாழ்வாரத்தின் ஒரு பாதிதான் எங்களின் திறந்தவெளி குளியல் பகுதி. 

குழந்தையில் அனைவரையும் போல் என்னுடைய அழுகைக்கு நடுவில் குளியலுடன் என் உருவத்தை ஒழுங்குபடுத்த முயர்ச்சிப்பார்கள். சிறிது வளர்ந்ததும், எங்கள் மூவரையும் குளுப்பாட்டிவிடுவது என் அம்மாவிற்கு காலையில் கூடுதல் வேலையாக ஆனது. எனக்கு குளிப்பது என்பது அதைவிட பெரிய வேலையாக தோன்றும்.

தாழ்வாரத்தில் எங்களை ஒவ்வொருவராக எங்கள் அம்மா குளிப்பாட்டிவிடுவார்கள். எங்க அண்ணன் கொஞ்சம்
perfect-ஆன ஆள். முதலில் குளிச்சிடுவான். நான் எப்படியாவது ஏமாத்தி தம்பிய தள்ளிவிட்டுட்டு கடைசியில் செல்வேன். என் அம்மா ஒவ்வொருத்தராக குளுப்பாட்டி 'போய் துவட்டிக்கோ-னு' அனுப்பிவிட்டுட்டு அடுத்த ஆளை இழுத்து தண்ணீர் ஊற்றி உடம்பை தேய்த்து குளுப்பாட்டிவிட ஆரம்பிப்பார்கள். கேரகமாட்டம் சுத்த வேண்டியது, எவ்வளவு அழுக்கு பாரு. இனிமே மண்ணுல எங்காவது ஆடுங்க அப்புறம் சொல்றேன் -னு திட்டிக்கொண்டே குளுப்பாட்டி விடுவாங்க. புடுச்சி பச்சை தண்ணிய ஊத்தும்போதே ஜில்லுனு இருக்கும், அம்மா உடம்பை தேய்க்கறது அதுக்குமேல இருக்கும். வலிக்கறமாதிரி, இஷ்-னு ஒரு சத்தம் வந்துச்சினா 'இனிமேல் வெளியில விளையாடாம இருப்பியா?-னு  அவுங்க சொல்றது, விளையாட போனதுக்குத்தான் இப்ப பண்றாங்கனு அந்த வயசுலயே புரியும். அதுக்காகவே வலிய வெளில காட்டிக்காம எப்ப விடுவாங்கனு எதிர்பார்த்துட்டு இருப்பேன். விட்டவுடனே, தம்பி துவட்டிட்டு வச்ச துண்டை வாங்கி உடம்ப துவட்டிட்டு போய்டுவேன்.

தலைக்கு புலி மார்க் சீகக்காய்தான் போட்டு தேய்ப்பாங்க, எப்போதாவது ஒரு முறை என்பதால் தலை தேய்ந்துவிடும் அளவுக்கு தேய்ப்பாங்க. அதிகமா, சீக்காயும் யாருடைய சாவுக்காவதுப்போயிட்டு வந்து தலைக்கு குளிக்கரதுக்காக வாங்கியிருப்பாங்க.

பள்ளிகூடம்  சேர்ந்ததற்கு அப்புறம் கூட படிக்கறவங்களோட சேர்ந்து மோட்டார் பைப்ல  குளிக்க ஆரம்பிச்சோம். தண்ணி மோட்டாரல வேகமா ஊத்தணும். இல்லனா ஒருத்தன் பைப்ப கொஞ்சம் மூடி வேகமா அடிக்கச்சொல்லி அதுக்கு முன்னாடிப்போய் நெஞ்ச நிமித்தி காமிக்கறது, முதுக காமிக்கறது, தலைய காமிக்கறது,... னு போய்க்கிட்டே இருக்கும். எவ்வளவு நேரம் தொடந்து நிக்கறதுன்னு போட்டியா  இருக்கும். டேய் பைப்ப மூடாத, ப்லாஞ்சில  தண்ணி ஒழுவுதுன்னு மொட்டோர்காரன் திட்டுவான். மோட்டோரல குளிக்க போனதிலிருந்து நண்டு வலை மண்ணு இல்லனா மீந்த மலர் சோப்பு தான் எங்களுடைய சீக்காய். 

ஹை ஸ்கூல் பசங்க வருவானுங்க, கெனத்து கரையின் நுனியில் நின்னு தண்ணி மட்டத்த பாத்துட்டு  மோட்டர் இறைக்குது வேற கேனறு போலாம்னு கேளம்பிடுவானுங்க. பாத்து குளிங்கடா கெணத்து  பக்கம் போகக்கூடாதுனு வேற மெரட்டிட்டு போவானுங்க.

ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டு லீவுல நீச்சல் கத்துக்க ஆறுமுகன் அண்ணன்கூட எங்க அப்பா எங்க மூணு பேரையும் அனுப்பிவைச்சாங்க. நாங்க மூணு பெரும் ஆறுமுக அண்ணனும் மிலிட்டரிகாரமூட்டு கேனறுக்கு நடக்க ஆரம்பிச்சோம். ஊரிலிருந்து கொஞ்சம் தூரம் கழனியில நடந்தது போனா அந்த கேனறு வந்துவிடும். போகும்போது, நான் பசங்க நீச்சல் அடிக்கரத பாத்து இருக்கிறேன். சும்மா கைய கால ஆட்டிட்டு நீச்சல் அடிப்பானுங்க, கஷ்ட்டம்லாம் இல்ல. கொஞ்சம் கத்துக்குணா போதும் மேல இருந்து குதிக்கலாம். சொரவானம், பல்டி எல்லாம் போடலாம். என்னனா? ஆறுமுக அண்ணன், ஊம்னு மட்டும் சொல்லிட்டு அமைதியா வந்துக்குனு இருந்தார். மூன்று பேருக்கு எப்படி நீச்சல் சொல்லிக்கொடுப்பதுனு யோசனையில்  வந்திருப்பார்னு நெனைக்கிறேன். காத்திலேயே கை காலை ஆட்டி நீச்சல் அடித்துக்கொண்டு கெனத்துக்குப்போய் சேர்ந்தோம். 

சூராக்கரையில் இடுப்பளவு தண்ணி  இருந்தது ,அண்ணன் கிணற்றுக்குள் இறங்கி சூராக்கரையில் நின்றுக்கொண்டார் நாங்களும் துணியை அவிழ்த்து வச்சிட்டு மேல் கரையில் நின்றுக்கொண்டிருந்தோம்.  மொத நாளே, நான் சொல்ல சொல்ல மேல இருந்து ஒவ்வொருத்தனா குதிங்க என்றார் . எப்படி நீச்சல் அடிப்பது? என்று பேசிக்கொண்டு வந்தது எல்லாம் ஒரு நொடியில் ஓடி மறைந்து, குதிச்சு உள்ள போய்ட்டா? இவ்வளவு தூரத்திலேருந்து குதிக்கறோம், அண்ணன் புடிக்கரதுக்குள்ள அவ்வளவு ஆழமாச்சி உள்ள போய்டுவோமோ? தண்ணிவேற ஜில்லுனு இருக்கும், ... என கேள்விகள் பலமுறை வேற வேற மாதிரி வந்து போனது. கால்கள் பயந்து கிணத்தின் கரையில இருந்து கொஞ்சம் தள்ளி நின்றது. அண்ணன் - பயப்படாதிங்க ஒருத்தொருதனா குதிங்க (அழுத்தமாக ) எவனுமே குதிக்க வர மாட்டேங்குறான், இவரு ஒருத்தொருதனா குதிங்கனு சொல்றாரு? ஸ்ரீதர், நீ குதி - என்றார்.வீட்லயே கடைசியா தான் நான் குளிப்பேன், நம்பள ஏன் முதல்ல குதிக்க சொல்றாரு? பயத்தில், மனசுல கேள்விகள் வேகமாக ஓடிக்கொண்டே இருக்க (சில கேள்விகள் பலமுறை).  பயம் அண்ணனின் பேச்சை கேக்க மறுத்தாலும் அம்மா குளிப்பாட்டி விடுவது, நீச்சல் தெரிஞ்சவங்க கெணத்துல போடற ஆட்டம், நீச்சல் தெரியாததால நண்பர்கள் கூட்டத்திலிருந்து பல நேரங்களில் ஒதுக்கப்பட்டது எல்லாம் சேர்ந்து என்னை கெணத்துக்குள் தள்ளியது.

ஒரு வழியாக கேனற்றில் குதித்தேன். கேனற்றில் குதித்த சில நொடிகளில் தண்ணி மட்டத்துக்கு மேல வந்திருந்தேன். புதிதாக சுவாசத்தை காண்பதை போல் என் மூக்கும் வாயும்  வேகமாக சுவசித்துக்கொண்டிருந்தது. அதுல முக்காவாசி, காத்துக்கு பதிலாக தண்ணி வாயிலும் மூக்கிலும் போனது. கை கால்கள் உதைத்துக்கொண்டு இருந்தன.  பயம் கண்ணு ரெண்டையும் பிதுக்கியது. சில நொடிகள் தண்ணிக்கு மேல இருந்திருப்பேன். என் உடல் தண்ணியுள்ள போக ஆரம்பித்தது  சூராக்கரையில் இருந்த அண்ணன் எட்டி என் கையை பிடித்து இழுத்து படிக்கட்டில் ஒக்கார வைத்தார். படிக்கட்டில் ஒக்காந்து கக்கி கக்கி குடித்த தண்ணியை கொஞ்சம் வெளியில் துப்பிக்கொண்டே வெறும் காற்றை மட்டும் வேகமாக சுவாசித்துக்கொண்டிருந்தேன்.

அடுத்து எங்க அண்ணன். ரமேஷ் நீ குதி என்று அண்ணன் சொல்ல, அதே தயக்கத்துடன் ஒரு கையை சூராக்கரையில் இருக்கும் அண்ணனை நீட்டி தொட்டுக்கொண்டே தண்ணீயில குதித்தான்.  அவனையும் படியில் அமர வைத்துவிட்டு, கரை ஓரம் குதிக்காத, நடுவுல குதிக்கனும்னு சொல்லிக்கொண்டே ஆறுமுக அண்ணன் கெணத்துக்கு நடுவே நீச்சல் அடித்துக்கொண்டு சென்றார்.  அவர் நீச்சல் அடிப்பதை பார்த்ததும், ஈஸியா தான இருக்குது ஏன் முடிய மாட்டேங்குது என தோன்றியது. சீத்தா நீ குதி. இப்ப  தம்பியும் குதித்தான். மூணு பேருக்கும் புதுசு என்பதால் அண்ணனும் தம்பியும் தண்ணீ  குடித்துவிட்டே கரை ஏறினர்.   

அதே விடுமுறையில் வந்த என் மாமா பசங்க ராஜா & செந்தில் எங்ககூட நீச்சல் பழக வந்தாங்க
. அவர்களுக்கும் அதே ஆரம்பம். ராஜா தைரியமானவன், குதிக்க சொன்னவுடனே குதித்துவிட்டான். மேலே வராமலேயே உள்ளே சென்றுவிட்டான். அண்ணன் உள்ளே முழுகி அண்ணா கயிறை பிடித்து இழுத்துவர கயிறு அறுந்து திரும்ப உள்ளே சென்ற அவன் தலை முடியை பிடித்து மேலே தூக்கிவந்து போட்டார். அதன் பிறகு அவனை நீச்சல் பழகும்வரை குதிக்க சொன்னதே இல்லை. எங்களுக்கு நாம்ப எப்படி மேல வந்தோம்னு சந்தேகமாகவே இருந்தது.

அடுத்தக்கட்டமாக ஆறுமுக அண்ணன் இரு கைகளை தண்ணி மட்டத்தில் நீட்டிக்கொண்டு, ஒவ்வொருவரா  கையின் மேல் படுத்துக்கொண்டு நீச்சல் அடிக்க செய்தார் . அண்ணன் கொஞ்சம் கையை லூஸ்விட்டு பார்ப்பார். தடுமாற ஆரம்பித்தவுடன் தூக்கிக்கொள்வார். கையில் இருக்கும்வரை நீச்சல் கத்துக்கனமாதிரி இருக்கும். விடும்போதுதான் இன்னும் பழகனும்னு தெரியும். அடுத்தக்கட்டமாக கரையிலிருந்து கொஞ்சம் உள்ளே அனுப்புவார், திணறும்போது படியில் தூக்கிக்கொண்டுவந்து போட்டுவிடுவார். சிறிது சிறிதாக பழகி சூராக்  கரையின் ஒரு பக்கத்தில் இருந்து மறு முனைக்குப்போக பழகிவிட்டோம்.

நீச்சல் பழகியானது.
ஆறுமுக அண்ணனை விட்டுட்டு நாங்கள் மட்டும் கிணத்துக்கு செல்ல ஆரம்பித்தோம். கரண்ட் கொட்டாவிலுருந்து குதிப்பது, பக்கத்துல இருக்கிற மரத்திலிருந்து  குதிப்பது, சொராவனம் அடிப்பது, பல்டி அடிப்பது, தன்னிக்குள்ளவே செல்வது, ஆழமாக போவது, நீச்சல் அடிக்காமலே மிதப்பது,... என எல்லாத்தியும் பண்ணி பார்த்தானது. அதுக்கப்புறம் கெணத்துல விளையாட்டு. விடுமுறை நாட்களில் கொரைஞ்சது 2 மணி நேரமாவது விளையாடுவோம். கண்கள் சிவந்து புகை போவதுபோல் இருக்கும். இதற்கிடையில் குளியலும் மறைந்திருந்தது .

கெனத்துக்கு போனதும், முதலில் நீ குதி, நீ குதி என குளிருக்கு பயந்து கொண்டு மெதுவாக கெணத்துக்குள் தள்ளி விடுவது போல் தள்ளி விட்டுக்கொண்டு இருப்போம். தள்ளப்பட்டவனும் கரையின் நுனிக்கு சென்று திரும்பி ஏன் நீ குதியான்னு சொல்லிக்கொண்டே இவனை தள்ளுவான். எவனாவது தைரியமாக குதித்தவுடன், இல்லனா அடுத்தவனால் தள்ளிவிடப்பட்டவுடன், அவன் மத்தவங்களையும் தள்ளிவிட்டு, தண்ணிரை மேல அடிச்சு எல்லோரும் களத்துல ஏறங்கிடுவோம்.  திரும்ப திரும்ப குதிச்சு குதிச்சு  கெணத்துல அலை அடிக்க ஆரம்பிச்சுடும். சந்துகளில் உள்ள தண்ணி பாம்பு வெளியேவந்தால் அது மேலேயே குதிச்சு அது மயக்கமானவுடன் கொன்னுட்டு பிறகு விளையாட்டை ஆரம்பிப்போம்

 கிணத்துக்கு போகும் போதே - பாம்பு இருக்கும் கெனரா பாருடி, இன்னக்கி ஒன்னையாவது சாவடிக்கனும்னு ஒருவன் சொல்லுவான். அய்யே அந்த கெணறு வேணாம் சீத்தா மேலயே பாத்துட்டு வந்து அவுட் அடிசுடுவான்னு ஒருவன் சொல்லுவான். பரவாஇல்ல போய் கலக்கிவிட்டுக்க்கலாம்னு  ஒருவன் சொல்லுவான். கடைசியா பாம்பு இல்லனா ஒரு தவக்கலையாவது கொன்னுட்டு, அழுக்கான தண்ணி இல்லனா சேத்த கலக்கிவிட்டு எங்க விளையாட்ட ஆரம்பிப்போம். இதுபோல கெணத்து தண்ணிய கேடுத்துவிட்டுட்டு விளையாடின கெனத்துக்காரன்வேற திட்டுவான் இல்லனா துணிய தூக்கிட்டுப்போய்டுவான். ஒரு முறை குளிக்காம இருப்பதற்காக கெணத்து படியில போடப்பட்டிருந்த முல்லை கொளுத்தி இருக்கிறோம். சில முறை பாலிதின் கவர்ல கல்லைக்கட்டி  புட் வால்வுல கட்டிவிட்டு வந்திருக்கிறோம்.

பொம்பளைங்க துணி தொவச்சிட்டு இருந்தா, ஒருத்தன அனுப்பி எப்ப  முடிப்பாங்கனு கேட்கச்சொல்வோம். அக்கா எப்ப முடிப்பிங்க? இர்ரா கொஞ்ச நேரம். துணிய அலசனும். அலசிட்டு குளிச்சிட்டு எழுந்துடறேன். அவன் - இன்னும் கொஞ்சம் நேரந்தானாம். துணி தொவச்சு ஒரே சோப்பா ஆக்கி வச்சிருக்காங்க. அங்கதான் மோட்டார் எரைக்குதில்ல? அங்க போய் தொவைக்கலாம் இல்ல? போலம்பிக்கொண்டே கொஞ்சம் நேரம் பாப்போம்னு மத்தவங்ககிட்ட சொல்வான். யாருடா அது? மோட்டுதெரு அக்காடா? கொஞ்சம் நேரத்தில், இந்த முறை நீ கேட்டுட்டுவாடா அது எங்க தெரு அக்காடா. நீயே போய் கேட்டுட்டு வா. அவனே போய் - அக்கா முடிஞ்சுதா? இர்ரா கொஞ்சம் நேரத்துல முடிச்சுடறேன். - கொஞ்சம் எரிச்சலாக. இன்னும் கொஞ்ச துணி தானாண்டா .... ஏமாற்ற குரலில் எங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே. இந்த பொம்பளைங்க இப்படித்தான் அன்னக்குண்டான் நெறைய துணி எடுத்துட்டுவந்து  ஒரு மணிநேரத்துக்கு தொவைச்சிட்டு இருப்பாங்க. கொஞ்ச நேரத்தில் அவுங்க குளிச்சிட்டு வந்தாலும் வராட்டாலும் நாங்கப்போய்  மேல இருந்து குதிக்க ஆரம்பிச்சிடுவோம். ஐய பசங்களா இதுவ, எமனுங்க எப்படி குதிக்குது பாருங்க. படிக்கட்டு பக்கம் வந்திங்க அடிதான். திட்டிகிட்டே அவுங்க வேலைய வேகமா பாத்துட்டு கெளம்பிடுவாங்க. நாங்களும் அந்த பக்கமா போவதிங்கடானு சொல்லிக்கிட்டு இங்க விளையாட்ட ஆரம்பிச்சிடுவோம்.

கிணத்துக்குப்போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், வீட்ல குளிக்கரத கேவலமா நெனைப்போம். மொட்டார்லனா கொஞ்சம் பரவாஇல்ல, ஒதுக்கலாம். வீடு, மோட்டார், கேனருனு போயிட்டேருந்த என்னுடைய குளியல் ...

என் ஒன்பதாம் வகுப்புக்காக  திண்டிவனம் St' Ann's hostel லில் நானும் எங்க தம்பியும் (
ஆறாவது) சேர்க்கப்பட்டோம். மொத மாடியில் உள்ள ஒரு பெரிய வரண்டாவில் வரிசையாக படுத்துக்கொண்டிருப்போம். 5 :30 மணிக்கு காலையில வார்டன் வந்து கதவ குச்சியால் தட்டுவான். அந்த சத்ததிலேயே எழுந்து வாயில பரேஷ் வச்சுக்கிட்டு மக்கு, சோப்பு (Lifebouy சோப்பு-  பைண்டிங் நுலால ரெண்டா வெட்டி தம்பிக்கு பாதி எனக்கு பாதி) ஜட்டியையும் துக்கிட்டு கீழ போகணும். அங்கேயே படுத்திருப்பவர்களுக்கு அடி விழுந்துகொண்டேப்போகும். 5 நிமிஷத்துல பல்ல வெலக்கிட்டு, கிரௌன்ட்ல லைன் நின்னு exercise பண்ணனும். அதுக்கப்புறம் க்ரௌண்ட ரவுண்டு அடிக்கணும். வார்டன் நல்ல மூடுல இருந்தா உடனே குளிக்க அனுப்பிடுவாரு. இல்லனா வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சின்னதாகிட்டேப்  போகும். நடுவுல இருக்கற வார்டன் கோலால ஒரு சுத்து சுத்துவாரு, திரும்ப வட்டம் பெரிசாகிடும். ஒரு நேரத்துல்ல ரெண்டு பேரும் ஒரு ஒப்பந்தத்துக்குவந்து குளிக்கப்போவோம். வரிசையாக இருக்கும் தொட்டியில் அவுங்க அவுங்க வகுப்புக்கான தொட்டியில் குளிச்சிட்டு 5 நிமிஷதுல்ல கேளம்பிடனும்.

என்னதான் பேஸ்ட், பிரஷ், சோப்பு, ஜட்டி, மக்குன்னு புதுசு புதுசா இந்த 10 நிமிஷ வேலைக்கு உபயோகிச்சாலும் கெணத்துல குளிச்சமாதிரி  வராது. குளிக்கற தொட்டியிலதான்  சாப்பாட்டு தட்டையும் கழுவுவோம். ஞாயித்து கிழமதான் தொட்டிய கழுவுவோம் எனபதால் சோறு தொட்டியில பிரிஞ்சு மெதங்கிட்டு இருக்கும். மோட்டாரையும் ராத்திரிக்கேப்போட்டு  தண்ணி நிரப்பி வச்சுடுவாங்க. அஞ்சு மணிக்கு நல்ல குளிரா வேற இருக்கும். . குளிக்கும்போது மோட்டார் போட்டாலும்12th அண்ணன்க தொட்டியிலதான் புது தண்ணி ஊத்தும். பல குளிர் காலங்கள்ல ஜட்டிய மட்டும் நெனச்சிட்டு வார்டன் சேச்கிங்ல இருந்து தப்பிச்சு போய்டுவேன். அங்க நெறைய பேருக்கு செரங்கே வந்துடும். குளிக்காம எமாத்தரதால வருதா, அந்த தண்ணியில குளிச்சதால வருதானே சொல்ல முடியாது. சாயுங்காலம் விளையாடிட்டு இன்னொரு முறை வேற குளிப்போம். ஊருல நல்ல தண்ணிய கலக்கி விட்டுட்டு குளிச்சிருந்தாலும், இந்த தண்ணிய பாத்தாலுமே குளிக்க தோனாது.
இதனால ஊருக்குப்போனால், கெணத்துல படிக்கு கீழ தண்ணி இருந்தாலும் எப்படியாவது உள்ள இறங்கி குளிப்போம். 

நானும் 12th படிச்சு கொஞ்சம் நல்ல தண்ணியிலையும் hostel ல குளிச்சு, Amrita institute, கோயம்புத்தூர் collage hostel-அ சேர்ந்தேன். திறந்தவேளியிலேயே  குளிச்சுட்டு இருந்த என் குளியல் முழுவதுமாக ஒரு சிறிய அறைக்குள் அடைத்துவிட்டார்கள். shool hostel-ல காலயில எழுப்பி கொடும பண்ணி  குளிக்க வச்சதால, காலையில் குளியல் புடிக்காம போனது.  8 மணிக்கு மேலஎழுந்திருக்கறது. மூஞ்ச மட்டும் கழுவிட்டு collage போய்டுவேன். ரெண்டு நாளைக்கு ஒருமுறை எப்பவாவது குளிச்சுடுவேன். அதிகமா நைட்லதான் இருக்கும். பசங்க கிண்டல் பண்ணாலும் கண்டுக்கமாட்டேன். கொஞ்சம் சுத்தமா வாடான்னு அட்வைஸ் பண்ணாலும், நான் ஒன்னும் அழகானவனும் இல்ல குளிக்காததால ஒன்னும் பெருசா மாற்றம் தெரியாதுன்னு விட்டுடுவேன். ஒருமுறை என் நண்பன் குளிக்கும்போது எட்டி பார்த்துவிட்டு , என்னடா பாத்ரூம்ல ஜட்டி போட்டுட்டு குளிச்சிட்டு இருக்கனு கேட்க்க. பழகிடுச்சினு சொல்லிட்டு வந்தவுடன், அடுத்த முறை ஜட்டி போடாம குளிச்சு பார்க்கனும்னு தோனுச்சு. ஜட்டி போடாம குளிக்க முயற்சித்து முயற்சித்து என் energyதான் waste-அ போச்சு.

ஒரு முறை எட்டிமடையில நைட் பரோட்டா சாப்ட்டுட்டு, முடி வெட்டிட்டு வந்தா, VCD-ல படம் போட்டுட்டாங்க. சினிமா பிரியன் என்பதால் ரெண்டு படமும் முடிய நைட் ரெண்டு மணி ஆகிடுச்சு. நண்பன் என்னடா குளிக்கமலே தூங்கிடுவியானு நக்கலாக கேட்டான். முடிவேட்டிட்டு எல்லாம் குளிக்காம இருக்கமாட்டேன் -னு சொல்லிட்டு பாத்ரூம் போனேன். குளிரா இருந்துச்சு, திரும்பி போனா நல்லா இருக்காது, குளிசிடுவோம்னு குளிக்க ஆயுத்தமானேன் . முகத்துக்கு சோப்பு போட்டுட்டு கண்ணை தெறந்தா ஒன்னுமே தெரியல. ஒரு செகண்ட்ல கண்ணு தெரியலியே என்ன பண்றதுன்னு பயத்தில் பல கேள்விகள் வேகமா ஓடிக்கொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக என் கண்ணு இருட்டுக்கு பழக்கமனாதும், திரும்ப கண் கிடைத்த சந்தோசம். சில நொடிகளில் கரண்ட்-ம்  வந்தது.

college முடிஞ்சு ராயப்பேட்டை mansion-இல் தங்கி வேலை தேடும்போது , காலையில் ஒரு பக்கெட் தண்ணீர் வரும்.
அதை புடிச்சு வச்சு அதிலயே எல்லாத்தையும் பண்ணிக்கணும். அதுக்கப்புறம் அவசரம்னாகூட puplic toilet-அ தேடித்தான் ஓடனும்.

கொஞ்ச மாசத்திலேயே நண்பர்களுடன் ரூம்
/ flat-னு தங்கமறுபடியும், பாத்ரூம், புதுசா shower,....

கடல்ல குளிக்கணும் என்பதற்காக திருவான்மையூர் பீச்சில் ஒரு முறை அழுக்கு அலைகளுக்கு இடையில் குளித்துவிட்டு, அந்த அழுக்கை நண்பனின் பாத்ரூமில் கழுவிவிட்டோம்.
கல்லாறு அழுக்கு தண்ணீரில் நண்பர்களுடன் ஒருமுறை, மூங்கில் துறைப்பட்டு ஆற்றில் எரா பிடித்துக்கொண்டு கொஞ்ச நாள், திருக்கோவிலூர் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டு சில நாட்கள் குளித்திருக்கிறேன்.

இப்பவும் என்னுடைய முதல் option கிணறு, அப்புறம் மோட்டார், அப்புறந்தான் பாத்ரூம்....
ஊருக்கு போனா பக்கத்து வீட்டு சின்ன பசங்களோட கிணற்றுக்கு குளிக்கபோவேன்.  பசங்க கொஞ்சம் வித்தியாசம் வித்தியாசமாக குதிச்சு காமிப்பாங்க, நீச்சல் அடிச்சு காமிப்பாங்க, தண்ணிரில் கல்லை போட்டுட்டு கொஞ்சம் நேரம் கழித்து எடுத்துட்டு வந்து காமிப்பாங்க. கொஞ்சம் பெரியவனா இருக்கிறவன், டாய் அண்ணன் குளிக்கட்டும் படிக்கட்டாண்ட போகாத / படிக்கட்டில் இருக்கும் அண்ணன் துணிய ஈரமாக்கிடாத,... னு மேரட்டிகிட்டே இருப்பான். டாய் சின்ன பசங்க அப்படிதான் இருப்பாங்க மேரட்டாதனு சொன்னா. இல்லனா-னு ஆரம்பிச்சு எதாச்சு சொல்வான். அது எல்லாம் ஒன்னும் ஆகிடாது அவங்க விளையாடட்டும், மிரட்டாத.

எப்போதாவது பொம்பளைங்க குளிச்சிட்டு இருந்தாங்கனா, டாய் பொம்பள துணி மேல இருக்கு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம். இருங்கனா எவ்வளவு நேரம் ஆகும்னு கேட்டுட்டுவரேன். அக்கா எவ்வளவு நேரம் அகும்க்கா? ஏன்டா வேற கெணத்துல எங்கயாவது போய் குளிங்களான். எங்ககிட்ட வந்து, அணா இவங்க எல்லாம் அவ்வளவு சீக்கிரத்துல எழுந்திருக்க மாட்டங்க. அதுக்கெல்லாம் ஒரு டெக்னிக் இருக்கு, நீங்க கொஞ்ச நேரம் இங்கயே வெயிட் பண்ணுங்க. டாய் வாங்கடா. என்னோடு வந்த சின்ன பசங்க எல்லோரும் துணிய அவுத்து போட்டுட்டு கிணற்றை நோக்கி போனார்கள். ஒரே வித்தியாசம் இப்போது,  கொஞ்சம் பசங்க ஜட்டி போட்டு இருந்தாங்க.