சனி, 14 ஜூலை, 2012

பெண் தேடல் - II

அடுத்த ஒரு மாதம் போனது. அந்த அளவிற்கு எந்த பெண்ணும் எனக்கு பிடிக்கவில்லை. என் மனதிலும் அந்த பெண் பதிந்துவிட்டாள் போல. அந்த பெண்ணின் profile -ஐ வேறொரு matrimonial site ல் பார்க்க, மனம்  மற்றொரு முயற்சி செய்யலாம் என தோன்றியது. என் அண்ணனும், பெற்றோர்களும் முழுவதுமாக பேசவே விடமாட்டார்கள். அவர்களுக்கு பிடிக்காத விசயமாக இருந்தால், ஆரம்பித்தவுடனேயே, negative-ஆக பேசி, வாயை மூடிவிடுவார்கள். அதனால் அண்ணனுக்கு email மூலம் சொல்லலாம் என compose செய்ய ஆரம்பிதேன். முடிக்கும் தருவாயில், தம்பியிடம் இருந்து call வந்தது. அவன் வீட்டில் பேசிவிட்டதாகவும், அந்த பெண் வீட்டில் எப்போது பெண் பார்க்கவரலாம் என கேட்டு வீட்டுக்கு சொல் என்று. பெற்றோர்களுடன் அதிகம் பேசி சொதப்பவேண்டாம் எனவும் அறிவுருத்தினான். தம்பி, எப்படி? வாய்ப்பே இல்ல. இதுக்குதான் தம்பி இருக்கணும்னு சொல்றது.

அண்ணன் மூலமான approach-ஐ கைவிட்டுவிட்டு, அடுத்த நாள் வீட்டுக்கு call செய்து, தம்பி சொன்னான். ரெண்டாவது முறை போகிறோம், நன்றாக முடிவு செய்துக்கொண்டு சொல்லுங்கள் என்றேன். உங்க விரும்பம்தான்ப்பா என்றார் அப்பா. மற்றொருமுறை உறுதிசெய்துக்கொண்டு பெண்வீட்டாரிடம் கூறி நாளை முடிவுசெய்தேன். அவர்கள் முதலில் சிறிது யோசித்தாலும், பின்னர் என்னைப்பற்றி விசாரித்திருந்ததால் சரி என்றனர். நானும், முதலில் அதிகம் யோசிப்பது பொதுவான ஒரு விஷயம்தான், நம்பிவந்தவர்களிடம் மோசமாக நடந்துகொள்ளும் அளவிற்கு என் பெற்றோர்கள் மோசமானவர்கள் அல்ல என பயத்தை தெளியவைத்தேன். என் வீட்டில் சரியென்று சொல்லிட்டாங்க என்றதும், அப்பா,கோபப்படாமல் அண்ணனிடம் பேசு என்று phone -ஐ அண்ணனிடம் கொடுத்தார். அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்தான் போல.

இரண்டாவது முறை போவது சரியிருக்காது வேண்டாம் என்றான். இதில் என்ன இருக்கு, நானும் கெஞ்சி கேட்கல. நான் எதையும் விட்டுகொடுத்தும் கேட்கவில்லை. அண்ணனுக்கு இரண்டாவது approach என்பது மோசமான ஒன்று என பிடிவாதமாக இருந்தான். 'second approach' இந்த ஒரு வார்த்தைதான் என் எதிர்காலத்தை எழுதப்போகிறது என்பதுபோலவே பேசினான். reconsideration, second  approach இரண்டும் எப்படி எடுத்துகொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கும் என வாதிட்டேன். அதே நேரத்தில் ஒரு முடிவுதான் என் வாழ்க்கையையே மாற்றும் என எந்த முடிவையும் நான் இதுவரை நம்புவதில்லை. அண்ணனிடம் என் பேச்சு பலனில்லாமல் போனது. இதை பற்றி இனி என்னிடம் பேசவேண்டாம் என்றான். நானும் சரி என கூறி, எதிர்ப்பு குறைந்தால் போதும் என விட்டுவிட்டேன். பெற்றோர்கள், என் விருப்பம்தான் என கூறி வருவதாக ஒப்புக்கொண்டார்கள்.

எப்போதும் இயல்பாக இருக்கவேண்டும் என என்னும் நான், ஒரு விஷேசத்திர்க்காக அழகுபடுத்துவது, புதுத்துணி அணிவது என்பதை எல்லாம் தவிர்த்துவந்தேன். பலர் சொல்லியும் கேட்காத நான், இந்தமுறை, அது என்னவோ, சரியாக தோன்றியது. அனைவரும் சொல்வதுபோல், மிகைபடுத்தி காமிக்காமல், இருப்பதை ஒழுங்காக காமிக்கும் அளவிற்காவது இருக்கவேண்டும் என ஒப்புக்கொள்ள தோன்றியது.  ஒரு நாள் முன்னரே facial செய்துக்கொண்டு, புது உடைகள் வாங்கிக்கொண்டு  தயாரானேன்.

என் பெற்றோர்கள், பெரியப்பா மற்றும் மாமா எங்கள் ஊரிலிருந்து சென்னை வந்தார்கள். நானும் என் நண்பரின் குடும்பமும் சேர்ந்து, பெண் வீட்டுக்கு சிறிது முன் அவர்களுடன் இணைந்து ஒருவழியாக பெண் வீட்டை சென்றடைந்தோம். 30 வருட பழைய, சிறிய வீடு. என் கொள்கையை சொதித்துப்பார்பதற்க்காகவே  இருப்பதுபோல் இருந்தது. தயக்கத்தை வெளிகாட்டிக்கொள்ளாமல் உள்ளே சென்றோம். பெண், snacks, ஜூஸ், டீ என வழக்கமான வரவேற்ப்பு.

சில நிமிடத்தில், என் அப்பா என்னை வெளியே அழைத்து வந்து, என் மேல் நம்பிக்கை இல்லாமல் ஏற்க்கனவே இங்கு வந்திருக்கியா? அந்த பெண்ணோடு பேசி இருக்கியா? என்றார். இல்லை என்றேன். உன்ன ஏன் இப்படி கொரைச்சு நினைச்சுக்கிற, இவ்வளவு சின்ன வீட்ல பார்க்கனுமா? என்றார். நடுவில் எழுந்துவந்ததே நாகரிகமில்லாத செயலாக நினைத்துக்கொண்டிருந்த அந்த வேளையில், இந்த மாதிரி கேள்விகள் கோபத்தை தூண்டியது. 

பொறுமையாக சிறிது தூராம் அழைத்து சென்று, நான் இங்க வீட்டோட மாப்பிளையா இருக்கப்போரதில்ல. பெண்ணை பாருங்க, குடும்பத்து பழக்கவழக்கத்துல எதாச்சு தப்பா தெரிந்தா சொல்லுங்க என்றேன். அவுங்க அப்பாவ பார்த்தா குடிக்கரவங்கபோல இருக்கு என்றார். அதை விசாரித்து சொல்கிறேன் என்றேன். பெரிய பெரிய இடமெல்லாம் தரன்னு சொல்றாங்க என வழக்கம்போல ஆரம்பித்தார். தயவுசெஞ்சு நிறுத்துங்க, ஒருவருசமா, கரகாட்டகாரன் கோவைசரளா மாதிரி, ஜப்பான்-ல ஜாக்கிஜான் குப்டாங்க, மிக்கேல் ஜாக்சன் குப்பிடாங்கனு, சொல்லிகிட்டேதான் இருக்கீங்க. எனக்கு முதல் முறை அவர்களை காக்கவைத்ததையே குற்ற உணர்ச்சியாக நினைத்துக்கொண்டிருந்தேன். இரண்டாவதுமுறை அதே தவறை அதே காரணங்களுக்காக செய்யவிரும்பவில்லை என்றேன்.

தயக்கத்துடன், அவளுடைய மாமாவிடம் அவருடைய அப்பாவைபற்றி விசாரித்துவிட்டு (அப்படி ஒன்றும் இல்லை) கிளம்பினோம்.  அப்பா, அண்ணனிடம் பேசி முடிவை சொல்கிறோம் என அவர்களுக்கு பதிலளித்தார். என் பெற்றோர்களும் மாமாவும் வீட்டுக்கு  அங்கிருந்தே கிளம்பினார்கள். எங்களோடு பெரியப்பா அவருடைய மகனை பார்த்துவிட்டு செல்ல வந்தார். பெரியப்பா பெண்ணின் சொந்த ஊரில் வேலை செய்தவர் என்பதால், இவரிடம்தான் விசாரித்து இருப்பார்கள் என யூகித்து அவரிடம் விசாரிக்க ஆரம்பித்தேன்.

உங்க அப்பாவுக்கு அவுங்க வசதிய பார்த்ததற்கு அப்புறம் இதில் சுத்தமா விருப்பமில்லை என்றார். சின்ன வீடாக இருந்தாலும் கோடம்பாக்கத்தில் அதன் மதிப்பு கொடிகளில் இருக்கும் என சொன்னார். உங்க அப்பா ஊருல பெருசா வீட்டகட்டிட்டு அதே மாதிரி city ல எதிர்பர்க்கறார். காலுக்கேத்த செருப்பா, செருப்புக்கேத்த காலானு நீங்கதான் முடிவுசெய்யனும்னு சொன்னார். எதிர்பாரதவிதமாக எனக்கு சாதகமாக பேசுவதை உணர்ந்தேன். அவர் முதலிலேயே நல்ல குடும்பம், வசதி குறைவு என்பதை சொல்லிருக்கிறார். இருந்தும், என்னுடைய வற்புறுத்தலுக்காகத்தான் வந்தார்கள் என்றார். என் அப்பா குடும்பமே நல்ல குடும்பம் இல்லை  என்பதுபோல் சொல்லியிருந்தார் என்றேன். என் அப்பா என்னிடமே விளியாடுகிறார் என இன்னும் சில விசயங்களில் இருந்து தெரியவந்தது. அவர் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டு, என்னை எப்படி சொன்னால் மாறிவிடுவேன் என சில மிகைபடுத்தலான வார்த்தைகள் / பொய்களை முயர்ச்சிசெய்திருக்கிறார்.

வழக்கம்போல பதில் இல்லாத அதே formula. வீட்டில் இருந்து எந்த பதிலும் இல்லை.  என்னால் ஒரு பெண்ணுக்காக வீட்டில் நேரடியாக பிச்சை எடுக்கமுடியவில்லை. தம்பி எனக்கு உதவினான். பயனில்லாமல் வேறுமாதிரியாக திரும்பியது. logic இல்லா, sentimental பதில்கள். அவர்கள் விருப்பத்திற்கு எதிராக பேசுபவர்கள் அனைவரையும் எதிரியாக பார்க்க, பேச ஆரம்பித்தார்கள் (தம்பியையும் சேர்த்து). என்னை விபரம்தேரியாதவன் (சுயபுத்தி இல்லாதவன்), மற்றவர்கள் என்னை மாற்றிவிட்டார்கள் என கருதினர். என்னால் பிறர் பெயர் எங்கள் வீட்டில் கேட்டுபோவதை விரும்பவில்லை. நானே எனக்காக பேசலாம் என முடிவெடுத்தேன்.

தொடரும் ...

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

என்ன தம்பி..ஓவரா பில்டப் வெக்கற..சீக்கரம் முடி..இரண்டையும் தான்..!

Vinodhini Nagarajan சொன்னது…

helo sridhar very interesting....but I wish ur story ends up with the climax like in " raman thediaya seedhai" movie...